உத்திரமேரூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உத்திரமேரூர் வட்டம் , தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 வட்டங்களில் ஒன்றாகும் [1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக உத்திரமேரூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் உத்திரமேரூர், சாலவாக்கம் , திருப்புலிவனம் , அரும்புலியூர் , குன்னவாக்கம், கலியம்பூண்டி என 6 உள்வட்டங்களும், 121 வருவாய் கிராமங்களும் உள்ளன. [2] இவ்வட்டத்தில் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 148,133 ஆகும். அதில் 74,204 ஆண்களும், 73,929 பெண்களும் உள்ளனர். 37,075 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 83% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 74.04% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 996 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 15767 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 945 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 48,350 மற்றும் 2,999 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 92.88% , இசுலாமியர்கள் 1.21%, கிறித்தவர்கள் 5.58% மற்றும் பிறர் 0.32% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்திரமேரூர்_வட்டம்&oldid=3341592" இலிருந்து மீள்விக்கப்பட்டது