உணர்வுத் தொகுதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உணர்வுத் தொகுதி அல்லது உணர்வு மண்டலம் என்பது, புலன் உணர்வு தொடர்பான தகவல்களைச் செயற்படுத்தும் நரம்புத் தொகுதியின் ஒரு பகுதி ஆகும். உணர்வுத் தொகுதி, உணர்வு ஏற்பிகளையும், நரம்பு வழிகளையும் கொண்டது. மூளையின் ஒரு பகுதியும் உணர்வதில் ஈடுபடுகின்றது. பொதுவான உணர்வுத் தொகுதிகளாவன, பார்வை, கேள்வி, தொட்டுணர்வு, சுவை, முகர்ச்சி என்பனவாகும்.
ஏற்புப் புலம் (receptive field) என்பது ஒரு ஏற்புப் புலனுறுப்பால் உணரப்படக்கூடிய உலகின் ஒரு பகுதியாகும். எடுத்துக் காட்டாக, கண்ணால் பார்க்கக்கூடிய உலகின் பகுதி அதன் ஏற்புப் புலம் ஆகும். இது, கண்ணில் உள்ள கோல்களும், கூம்புகளும் உணரக்கூடிய ஒளியின் பகுதியாகும். பார்வைத் தொகுதி, கேள்வித் தொகுதி, தொட்டுணர்வுத் தொகுதி என்பவற்றுக்கு அவற்றின் ஏற்புப் புலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.