உடுப்பி
| உடுப்பி | |
|
|
|
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| பகுதி | துளு நாடு |
| மாநிலம் | கர்நாடகா |
| மாவட்டம் | உடுப்பி |
| ஆளுநர் | |
| முதலமைச்சர் | |
| Council President | Mr. Dinakar Shetty |
| மக்கள் தொகை • அடர்த்தி |
1,27,060 (2001[update]) • 286 /km2 (741 /sq mi) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
68.23 square kilometres (26.34 ச மைல்) • 39 மீட்டர்கள்s (128 அடி) |
|
குறியீடுகள்
|
|
|
குறிப்புகள்
|
|
| இணையதளம் | www.udupicity.gov.in |
உடுப்பி (துளு:ಉಡುಪಿ, கொங்கணி:उडुपी and கன்னடம்:ಉಡುಪಿ) நகரம் இந்திய மாநிலத்தில் உள்ள கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தின் தலைநகர் ஆகும். உடுப்பியில் அமைந்துள்ள கிருஷ்ணா மடம் குறிப்பிடத்தக்கது. உடுப்பி சமையல் தரமானது அந்த நகருக்கு பெயரையும் பெற்றுத்தந்தது.
பொருளடக்கம் |
சொற்பிறப்பியல் [தொகு]
உடுப்பி என்ற பெயர் துளு மொழியில் ஒடிப்பு என்ற பெயரில் இருந்து வரப்பெற்றது என பரவலாக நம்பப்படுகிறது. இந்த துளு பெயர் மாற்றம் மால்பேயிலுள்ள வடபந்தேஸ்வரா ஆலயத்துடன் தொடர்புடையது. உடுப்பி என்ற பெயரின் மற்றொரு கதை, உடுப்பி என்ற பெயர் சமஸ்கிருத சொல்லாகிய உடு மற்றும் பா முறையே நட்சத்திரங்கள் மற்றும் கடவுளை குறிப்பிடும் சொல்லிலிருந்து வரப்பெற்றது. புராண செவி வழி கதைகளின்படி ஒரு முறை தக்க்ஷா என்ற அரசனின் சாபத்தால் நிலவு அதன் ஒளியை இழந்தது, அவரின் 27 மகள்களையும் (27 நட்சத்திரங்களையும் இந்து சோதிடத்தின்படி) நிலவுக்கு மணம் செய்துவைத்தனர். அந்த நிலவு இறைவன் சிவனிடம் தன்னுடைய ஒளியை மீண்டும் பெற வேண்டிக்கொண்டது. இறைவன் சிவன் நிலவின் பிரார்த்தனையில் மிகவும் மகிழ்ந்து அதனுடைய ஒளியை மீண்டும் தந்தார். இதிகாசங்கள், நிலவும் அதன் மனைவிகளும் உடுப்பியில் உள்ள சந்திரமௌலீசுவரா ஆலயத்தில் ஒரு லிங்கத்தை தோற்றுவித்து பிரார்த்தனை செய்தனர் என்று கூறுகின்றது. இந்த லிங்கத்தை இன்றும் காணலாம். இந்த கதையின்படி, உடுப்பி என்றால் , "நட்சத்திரங்களின் இறைவன்" நிலவு உள்ள இருப்பிடம் என்று பொருள்படும்.
சமயமும் அதன் சிறப்பும் [தொகு]
உடுப்பி கிருஷ்ணா மடத்திற்கு (கிருஷ்ண பகவான் ஆலயம்) பெயர் பெற்றது. கிருஷ்ணா மடமானது 13 ஆம் நூற்றாண்டில் வைஷ்ணவிதே புனித ஸ்ரீ மாதவச்சார்யா அவர்களால் நிறுவப்பட்டது.
வரலாற்றின் படி, மால்பே கடலில் புயல் ஒன்று உருவானது. ஸ்ரீ மாதவாச்சாரியா கடற்கறையில் இருந்தபோது ஒரு கப்பல் ஆபத்தில் சிக்கியதை கண்டார். அந்தக் கப்பல் பாதுகாப்பாக கரையை அடைய உதவினார். அந்த மாலுமிகள் அவருக்கு மிக்க நன்றியைத் தெரிவித்து, பகவான் கிருஷ்ணர் மற்றும் பகவான் பலராமர் உருவச் சிலைகளை அவருக்குத் தந்தனர். அவர் பகவான் பலராமர் சிலையை மால்பே அருகே பிரதிஷ்டை (சிலையை நிலைநிறுத்தும் விழா) செய்தார். இந்த ஆலயமே வடபந்தேஷ்வர ஆலயமாக அழைக்கப்படுகிறது. ஸ்ரீ மாதவாச்சாரியார் கிருஷ்ணக் கடவுளின் சிலையை உட்டுப்பியில் பிரதிஷ்டை செய்தார். இந்த ஆலயமே கிருஷ்ண மடம் என்று அழைக்கப்படுகிறது.
ஸ்ரீ மத்வாச்சார்யர் கிருஷ்ண மடத்தின் பூசை மற்றும் நிர்வாகத்தை தந்து எட்டு சீடர்களிடம் ஒப்படைத்தார். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் மடத்தை (துறவிகள் மடங்கள்) கிருஷ்ண மடத்தை சூழ்ந்து அமைத்துக் கொண்டனர். இவைகளே அஷ்ட மடங்கள் என்றழைக்கப்படுகின்றன. அந்த துறவு மடங்கள், [பேஜாவர்], [புத்திகே], [பலிமார்], [அதமார்],[சோதே], [கனியூரு]], ஷிருர் மற்றும் [கிருஷ்ணாபுர]. ஆகியவை ஆகும். அதன் பிறகு, கிருஷ்ண மடத்தின் தினசரி சேவைகள் (கடவுளுக்கு வழங்கும்) மற்றும் நிர்வாகம் அஷ்ட துறவுமடத்தினால்(எட்டு கோவில்கள்) நிர்வகிக்கப்படுகிறது. ஒவ்வொரு அஷ்ட துறவு மடத்தினரும் ஆலய நிர்வாக செயல்களை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருவராக மாற்றி மாற்றி செய்கின்றனர். பார்யாயா விழாவின்போது, ஒவ்வொரு இரண்டு வருடங்களும், ஆலய நிர்வாகம் அடுத்த துறவு மடத்திற்க்கு ஒப்படைக்கப்படுகிறது. ஒவ்வொரு துறவு மடமும் பார்யாயாவின்போது பொறுப்பாக இருக்கும் ஒரு சுவாமியினால் தலைமை வகிக்கப்படுகிறது.
16 வது நூற்றாண்டில் [ஸ்ரீ வாதிராஜரின்] நிர்வாகத்தில், கனகதாசர் கடவுளிடத்தில் ஆர்வமும் நம்பிக்கையும் கொண்டவர். இவர் உடுப்பிக்கு இறைவன் கிருஷ்ணனை வணங்குவதற்காக வந்தார். பிராமணர்கள் மட்டும் ஆலயத்தினுள் சென்று இறைவனுக்கு பூசை செய்யும் அந்த நாட்களில், இவர் பிராமணனாக இல்லாத காரணத்தினால் ஆலயத்தின் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இவர் இறைவன் கிருஷ்ணனை சிறிய சாளரத்திலிருந்து காண முயன்றார், ஆனால் அவரால் இறைவன் கிருஷ்ணனை பின்புறத்திலிருந்து மட்டுமே காண முடிந்தது. கனகதாசரின் பக்தியினால் (தெய்வீகம்) மகிழ்ச்சியடைந்த ஸ்ரீ கிருஷ்ணர் முகத்தை ஜன்னலை நோக்கி திருப்பினார். இந்த சாளரமே இன்று கனகனகிண்டி என்றழைக்கப்படுகிறது. இன்றும், கிருஷ்ண கடவுளின் முகங்கள் ஆலயத்தின் பின்புறம் உள்ள கனகனகிண்டியை நோக்கியுள்ளது. கிருஷ்ண மடத்தை தவிர அனைத்து இந்து ஆலயங்களிலும் அதன் விக்ரகங்கள் (சிலை) ஆலயத்தின் நுழைவாயிலை நோக்கியுள்ளது.
கனகனகிண்டி விஷ்ணுவின் பத்து அவதாரங்களைக் கொண்ட திருவுருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அந்த சாளரத்தின் சிறு துவாரங்களின் வழியாக ஸ்ரீ கிருஷ்ண கடவுளின் சிலையைப் பார்க்கும்போது அவர் சிறுவன் போல் தோற்றமளிக்கின்றார். ஸ்ரீ கிருஷ்ணர், அவர் கடையும் இரும்புக் கம்பியை வலது கையில் வைத்து கயிற்றை தனது அவருடைய இடது கையில் வைத்துள்ளார். கிருஷ்ணனின் மடத்தை த்வைத அல்லது தத்வவாத வேதங்களை கற்பதிலும் தொன்று தொட்டு, வழி வழியாக வரும் சமயங்களின் மூலம் உலகம் முழுவதும் அனைவரும் அறிவர். இது உடுப்பியில் தொடங்கிய ஓர் இலக்கிய வடிவமான தாஸசாஹித்யாவின் மையமாக உள்ளது.
திருவிழாக்கள்
உடுப்பியில், உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் திரளும் பெரிய கூட்டங்கள் கொண்ட பல திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
பர்யாயா திருவிழாவானது 2006, 2008, 2010 போன்று இரு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறுகின்றது. இந்த பர்யாயா திருவிழா இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனவரி மாதம் 18ஆம் நாள் நடைபெறுகின்றது. இந்தத் திருவிழாவானது அதிகாலை 3.00 மணியளவில் தொடங்குகிறது. திருவிழாவின்போது பலவிதமான குழுக்களான மக்களைக் கொண்ட காட்சியை அதிகாலை நேரத்தில் உடுப்பியில் காணலாம். மக்கள் அவர்களை காண்பதற்க்காக வீதியில் கூடுகின்றனர்.
கிருஷ்ண ஜன்மாஷ்டமி ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகின்றது. இந்த திருவிழாக் காலங்களில் மக்கள் கூட்டங்கள் "பிலி வேஷா(துளு)/ஹுலி வேஷா ( கன்னடம்)" என்ற புலியின் உடையையும் மற்ற உடைகளையும் அணிகின்றனர். அவர்கள் விழாவில் பங்கேற்பவர்கள் மற்றும் பொது மக்களிடையே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தி உடுப்பியைச் சுற்றியுள்ள வீடுகள் மற்றும் கடைகளில் சென்று நன்கொடைகளை வசூல் செய்கின்றனர்.
ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஷ் ஆலயத்தில், பஜன சப்தஹா நடைபெறுகிறது. சப்தஹா என்றால் ஒரு வாரம் ஆகும். இந்த விழாக்காலங்களில் 7 நாட்களும் பஜனைகள் தொடர்ந்து பாடப்படுகின்றது. இது ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதத்தில் வருகிறது.
ரதோத்ஸவா (தேர் திருவிழா) பெரும்பாலும் எல்லாக் காலங்களிலும் ரதபீதியைச் சுற்றி நடைபெறுகின்றது. இந்த காலங்களில், இறைவன் கிருஷ்ணனின் ரதம் (தேர்) ரதபீதியைச் சுற்றி உள்ளூர் மக்களால் இழுக்கப்படுகிறது.
மக்கள் தொகை விவரங்கள் [தொகு]
2001 ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,[1] உடுப்பி 113,039 மக்கள் தொகையைக் கொண்டிருந்தது. மக்கள் தொகையில் 53% ஆண்களும், 47% பெண்களும் ஆவர். உடுப்பியில், சராசரியான படித்தவர்களின் மதிப்பீடு 83% ஆக இருந்தது, தேசிய சராசரி மதிப்பீட்டை 59.5% விட அதிகமாக உள்ளது; இதில் ஆண்கள் 86% மற்றும் பெண்கள் 81% ஆவார்கள். மக்கள் தொகையில் 6 வயதிற்கும் கீழ் உள்ளவர்கள் எட்டு சதவீதம் ஆகும்.
பன்ட்ஸ், மொகவீராஸ், பில்லவாஸ், கொன்கனிஸ் கௌட் சரஸ்வத் பிராமணர்கள், ராஜாபூர் ஸரஸ்வத், குடல்கர், தைவஜ்னா, ஷிவால்லி பிராமணர்கள், கொட பிராமணர்கள், கொரகஸ் மற்றும் மங்கலூர் கத்தோலிக்கர்கள் ஆகிய சில முக்கிய சாதிகள் உடுப்பியில் இருக்கின்றன.
உடுப்பி முன்பு நகர நகராட்சி ஆலோசனைக் குழுவைக் கொண்டிருந்தது, இப்போது 1995 ஆம் ஆண்டில் வந்தது மாநகர நகராட்சி ஆலோசனைக் குழுவை கொண்டுள்ளது. உடுப்பியைச் சூழ்ந்துள்ள மணிபால், மால்பே மற்றும் சந்தகாட்டே ஆகியவை மாநகர நகராட்சி ஆலோசனைக்குழுவாக ஒன்றிணைக்கப்பட்டது.
1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 அன்று தக்ஷின கன்னட மாவட்டத்திலிருந்து, உடுப்பி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. உடுப்பி, குண்டப்பூர்ரா மற்றும் கர்கலா தக்சின கன்னட மாவட்டத்திலிருந்து இரண்டாக பிரிக்கப்பட்டு, உடுப்பி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
உடுப்பி மற்றும் அதைச்சுற்றியுள்ள நகரங்களுக்கும், நகர திட்டம் மற்றும் அதன் சம்பந்தமான மற்ற முன்னேற்ற நடவடிக்கைகளுக்கு உடுப்பி நகர முன்னேற்ற ஆணையம் (யுயுடிஎ) பொறுப்பாக உள்ளது.
கிடியூர் கடேகருக்கு அடுத்துள்ளது கிடியூர் (கிடி+ஊர்), கிடியூர் அம்பால்பாடியின் தென்மேற்க்கு பகுதி கிராமம் ஆகும். உத்யவரா ஆற்றுடன் சேரும் சிறிய ஓடையின் மேல் உள்ள பன்காரா கட்டா என்ற பாலத்தை கடந்த பிறகு கல்மாடியிலிருந்தும் கிடியூர் கிராமத்தை நாம் அடையலாம். கிடி / கெடி என்றால் இறகு அல்லது மீனின் பின்புறம் உள்ள முள் எனப்படும். இந்த குறுகலான நீண்ட சதுப்பு நிலம், அதன் வடிவத்தின் காரணமாக இந்த பெயரை பெற்றிருப்பதற்கு சாத்தியமாகலாம். அதாவது, இறகு போன்ற அல்லது மீனின் பின்புறம் உள்ள முள் போன்ற இடஅமைவு ஆகும். அல்லது, இடப்-பெயர் 'கெடு' என்ற சொல்லிலிருந்து வந்திருக்கலாம். கெடு என்றால் சதுப்பு நில ஏரியைக் குறிக்கும். 'கெடும்பாடி' என்ற சொல் துலு அகராதியில் (P.899) ஒரு நீரினால் சூழப்பட்ட சதுப்பு நிலம் என்ற பொருளைக் கொண்டுள்ளது. குறிப்பாக மீனவ-இனம் மற்றும் கள்- உடைப்பவர்கள் குடியேறுவதற்கு முன்பு, கிடியூர் பரப்பா கண்டிப்பாக உபயோகம் இல்லாத சதுப்பு நிலமாக இருந்திருக்கும். இது கடல் அருகாமையில் உள்ளதால், இங்கு குடிநீரானது பொதுவாக உப்பாகவே (உப்பு நீர்) உள்ளது. மீன் பிடித்தல் மற்றும் தென்னை விவசாயம் முன்னாளில் முக்கிய தொழிலாக இருந்தது.
தட்ப வெப்பநிலை [தொகு]
| தட்பவெப்ப நிலை தகவல், உடுப்பி | |||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
| உயர் சராசரி °C (°F) | 32.8 (91) |
33 (91) |
33.5 (92.3) |
34 (93) |
33.3 (91.9) |
29.7 (85.5) |
28.2 (82.8) |
28.4 (83.1) |
29.5 (85.1) |
30.9 (87.6) |
32.3 (90.1) |
32.8 (91) |
31.53 (88.76) |
| தாழ் சராசரி °C (°F) | 20.8 (69.4) |
21.8 (71.2) |
23.6 (74.5) |
25 (77) |
25.1 (77.2) |
23.4 (74.1) |
22.9 (73.2) |
23 (73) |
23.1 (73.6) |
23.1 (73.6) |
22.4 (72.3) |
21.2 (70.2) |
22.95 (73.31) |
| பொழிவு mm (inches) | 1.1 (0.043) |
0.2 (0.008) |
2.9 (0.114) |
24.4 (0.961) |
183.2 (7.213) |
1177.2 (46.346) |
1350.4 (53.165) |
787.3 (30.996) |
292.1 (11.5) |
190.8 (7.512) |
70.9 (2.791) |
16.4 (0.646) |
4,096.9 (161.295) |
| [சான்று தேவை] | |||||||||||||
உடுப்பியில் தட்ப வெப்பநிலை கோடையில் மிக்க வெப்பமாகவும் மற்றும் குளிர் காலத்தில் நல்ல இதமாகவும் உள்ளது. கோடைகாலங்களில் (மார்ச்சிலிருந்து மே வரை) வெப்பநிலை சுமார் 40°C வரை அடைகிறது. மேலும் குளிர் காலங்களில் (டிசம்பரிலிருந்து பிப்ரவரி வரை) வெப்பநிலையானது வழக்கம் போல் 32°C மற்றும் 20°C ஆகியவற்றுக்கு இடையே காணப்படுகின்றது.
மழைக்காலம் ஆனது சூனிலிருந்து செப்டம்பர் வரை இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் சராசரிக்கும் அதிகமாக 4000 மி.மீ வரையில் மழை பெய்யும் மற்றும் அதிக காற்று வீசும் இடமாக உடுப்பி உள்ளது.
மொழி [தொகு]
உடுப்பியில் பெரும்பாலும் பேசப்படும் மொழியாக இருப்பது துளு ஆகும். துளு இல்லாமல் மற்ற மொழிகள் கன்னடம், கொங்கணி, நவயாத் மற்றும் பியரியர்களினால் பேசப்படும் மொழி பேரி மொழி ஆகியவையும் உள்ளன.
உணவு [தொகு]
உடுப்பி எனும் பெயர் (உடிப்பி ) என்றால் சுவையான சைவ உணவு என்ற பொருளிலும் வந்திருக்கலாம். இன்று உலகம் முழுவதும் உடுப்பி சமையலானது கிடைக்கின்றது (காண்க, உடுப்பி சமையல்). இந்த சமையற்கலையின் அடிப்படை கிருஷ்ண மாதா (மடத்துடன்) தொடர்புடையது. இறைவன் கிருஷ்ணனுக்கு தினமும் பல விதமான உணவு வகைகள் வழங்கப்படுகிறது, மேலும் சதுர் மாத காலங்களில் (அதிக மழை பெய்யும் நான்கு மாத காலம்) இந்த உணவு வகைகளுக்கு குறிப்பிட்ட வரையறைகள் உள்ளன. இந்த வரையறைகள் குறிப்பாக பருவகாலங்களில் மற்றும் உள்ளூரில் கிடைக்கின்ற பொருட்களுடன் இணைந்திருக்கின்ற உணவுகளின் கண்டுபிடிப்புக்கு வழிவகுக்கும் அவசியமான விதவிதமான தேவைகளுடன் இணைந்துள்ளன. இந்த உணவை ஷிவாலி மாத்வா பிராமணர்கள் இறைவன் கிருஷ்ணனுக்காக சமைக்கின்றனர். மேலும் கிருஷ்ண மடத்தில் உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.
போக்குவரத்து [தொகு]
தேசிய நெடுஞ்சாலை 17 உடுப்பி வழியாகச் செல்கிறது. கர்கலா மற்றும் தர்மஸ்தலா செல்லும் சாலை மற்றும் ஷிமோகா மற்றும் சிருங்கேரிசெல்லும் சாலை உள்ளிட்டவை மற்ற முக்கிய மாநில நெடுஞ்சாலைகளாகும். இந்த தேசிய நெடுஞ்சாலை 17 ஆனது குண்டாபூர் வழியாக மங்களூர் மற்றும் கார்வார் ஆகிய ஊர்களுக்கு தொடர்பைக் கொடுக்கின்றது. தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் உடுப்பியை கர்நாடகாவின் பல பகுதியுடன் இணக்கின்றன. கொன்கன் ரயில்வேயில் உடுப்பி ஓர் ரயில் நிலையத்தைக் கொண்டுள்ளது. உடுப்பிக்கு மிக அருகில் உள்ள விமான நிலையம் மங்களூர் (பாஜ்பே) விமான நிலையம் ஆகும். இது உடுப்பியிலிருந்து சுமார் 50 கி.மீ தூரத்தில் உள்ளது.
உடுப்பி மற்றும் அதன் எல்லைகளுக்கு மாநகர மற்றும் புறநகர் பேருந்துகள் கிடைக்கின்றன. இந்த பேருந்துகள் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து (மாநகர பேருந்து நிலையம்) புறப்படுகின்றன. அங்கு பல்வேறு வழித்தட எண்கள் உள்ளன.
உடுப்பிக்கு மிக அருகில் உள்ள கப்பல் / துறைமுகம் மால்பேயில் உள்ளது. இது உடுப்பியிலிருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில் உள்ளது. மேலும் கங்கோலி (குண்டாபூர்) உடுப்பியிலிருந்து 36 கி.மீ தூரத்தில் உள்ளது. புதிய மங்களூர் கப்பல் / துறைமுகம் உடுப்பியிலிருந்து சுமார் 50 கி.மீ தூரத்தில் உள்ளது.
பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் [தொகு]
உடுப்பி கர்நாடகாவின் மிகமுக்கிய மாநகரமாக வளர்ந்து வருகின்றது. ஓர் தனியார் நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி, கர்நாடகாவில் இங்குள்ள மக்கள் தற்போது ஒவ்வொருவரும் சராசரிக்கும் உயர்ந்த வருமானத்தை பெற்றுள்ளனர்.. பெங்களூர் மற்றும் பிற மாவட்டங்களை ஒப்பிடும்போது உடுப்பியில் வறுமைக்கோட்டிற்க்கு கீழ் உள்ளவர்கள் மிக குறைவு. உடுப்பியில் மக்கள் ஓர் உயர்தர வாழ்க்கையை வாழ்கின்றனர்.
உடுப்பியானது சிண்டிகேட் வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கி ஆகியவற்றின் பிறப்பிடமாக விளங்குகின்றது. உடுப்பியின் பொருளாதாரம் முக்கியமாக விவசாயம் மற்றும் மீன் பிடிக்கும் தொழிலைச் சார்ந்துள்ளது. முந்திரி தொழிற்ச்சாலை போன்ற சிறுபான்மை தொழிற்சாலைகள், மற்றும் மற்ற உணவு தொழிற்சாலைகள் மற்றும் பால் கூட்டுறவு தொழிற்சாலைகள் ஆகியவை மிக முக்கிய தொழில்களாகும். உடுப்பியில் பெரிய அளவிலான தொழிற்சாலை ஏதும் இல்லை. கர்நாடக அரசாங்கம் கோஜெண்ட்ரிக்ஸ் லைட் அண்ட் பவர் இண்டஸ்ட்ரி (Cogentrix Light and Power Industry) நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு குறிப்பாணையில் (MOU) கையெழுத்திட்டுள்ளது. அது உடுப்பி மாவட்டத்தின் நந்திக்கூரில் ஒருமின் நிலையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தமாகும். இருப்பினும், மக்களிடமிருந்தும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடமிருந்தும் பெரும் எதிர்ப்பு எழுந்ததால், தற்காலிகமாக இப்பணித்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதே போன்று தொழிற்சாலையை படுபிட்ரி அருகில் நிறுவவதற்கு நாகார்ஜுனா பவர் கார்ப்ரேஷன் தொழிற்சாலையினால் முயற்சி எடுக்கப்பட்டு பெரும் எதிர்ப்புகளையும் சந்தித்தது.
மாக் இயக்குதளம் மற்றும் விண்டோசு தளங்கள் ஆகியவற்றுக்கான தயாரிப்புகளின் உருவாக்கத்திற்கு பிரபலமான ரோபோஸாஃப்ட் டெக்னாலஜீஸ் (Robosoft Technologies) மென்பொருள் நிறுவனத்திற்கு உடுப்பியே பிறப்பிடமாக உள்ளது இது புதிய உடுப்பியில் உள்ளது (சந்தகட்டே, கலியன்புர்). இந்த நிறுவனம் உலகளவில் த.தொ.நு நிறுவனப் பட்டியலில் உடுப்பி முக்கிய இடம் பெற வழிவகுத்தது.
கலை மற்றும் கலாச்சாரம் [தொகு]
புத்த கோலா, ஆதி கலேஞ்சா, கரங்கொலு மற்றும் நகரதனே ஆகியவை உடுப்பியின் பாரம்பரிய பண்பாடாகும். இந்த மக்கள் தீபாவளி, தசரா மற்றும் கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகைகளைக் கொண்டாடுகின்றனர். யக்ஷங்கணா போன்ற ஆடற்கலையும் இங்கு புகழ்பெற்றுள்ளது.
ரதபீதி கெலெயரு என்ற உள்ளூர் இலாப நோக்கற்ற அமைப்பானது குறிப்பாக அந்தப் பகுதியில் தொன்று தொட்டு வரும் கலைகளில் ஆர்வம் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களை உற்சாகப்படுத்துவதற்காக நிறுவப்பட்டது. இதன் முதல் நோக்காக இருந்தது நாடகம் ஆகும்.
எதிர்கால முன்னேற்றங்கள் [தொகு]
உடுப்பி, நாளுக்கு நாள் வளர்ந்து வரும் ஓர் ஆன்மீக சுற்றுலா மையமாக தொடர்ந்து பெயர்பெற்று வருகிறது. இந்த மாநகரத்தில் பல விதமான முன்னேற்றங்கள் இடம் பெறுகின்றது. மேலும் பல்வேறு திட்டங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
கல்சன்கா (மால்பே-மொலகல்முரு மாநில நெடுஞ்சாலை 25) வழியாக செல்லும் ஆதி உடுப்பி-கடியாலி சாலையானது, இந்நகரத்தின் ஒரு முக்கிய 80 அடி கொண்ட நான்கு வழி சாலையாக உள்ளது. இந்த சாலை உடுப்பி மக்களின் நெடுநாள் தேவையாக இருந்தது. இதை அகலப்படுத்தும் பணி தற்போது நடந்துகொண்டிருக்கிறது. இந்த அகல பாதை மாநகர பேருந்து நிலையம் மற்றும் கடியாலிக்கும் இடையே அகலப்படுத்தப்பட்டு போக்குவரத்திற்க்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டமானது சாலையை மணிபால் வரை நீட்டிக்கவிருக்கின்றது. இந்த சாலையை அகலப்படுத்திய காரணத்தினால் உடுப்பியைச் சுற்றியுள்ள நிலங்களின் விலை அதிகரித்துள்ளது.
இந்த அகலப்படுத்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலை 17 ஐ சுரத்கல் லிலிருந்து குண்டபூருக்குச் செல்லும் நான்குவழிப் பாதையை அகலப்படுத்திய காரணத்தினால், அது இந்த மாநகரத்தின் வழியாக செல்கிறது. கின்னிமுல்கி மற்றும் கரவலி சந்திப்பில் இரண்டு மேம்பாலங்கள் வருகின்றன. இதனால் இந்த பெரிய சாலையில் வாகனங்கள் தடையின்றி செல்ல ஏதுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மணிபாலுக்கு வெளிநாட்டவர் மற்றும் வெளிநாடுவாழ் இந்திய மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தருவதால், உடுப்பியில் ATR விமானங்கள் இறங்குவதற்கு ஒரு விமான நிலையம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன். கோபிநாத், டெக்கான் ஏவியேஷனின் முதல்வர் இங்கு விமான நிலையத்தின் அவசியத்தைப்பற்றி வலியுறுத்தியுள்ளார்.
உடுப்பிக்கு மைசூர் மற்றும் மங்களூருடன், பெங்களூருக்கும் மோனோரயில் பாதையை அமைக்க கர்நாடக முதலமைச்சரால் முன்மொழியப்பட்டுள்ளது. இது நாளுக்கு நாள் நகரத்தில் அதிகரிக்கும் போக்குவரத்து காரணமாக முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கு தகுந்த ஆய்வு இன்னும் நடத்தப்பட இருக்கின்றது.
தனியார் வீட்டு மனை மற்றும் வீடு விற்பனையாளர்கள், இங்குள்ள மக்கள் ஒவ்வொருவருக்கும் எதிர்காலத்தில் உயர் வருமானம் கிடைக்க, கடைகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கொண்ட கடைகள் வைப்பதற்க்கு கட்டிடங்களைக் கேட்டுள்ளனர். ஹைப்பர் மார்க்கெட்டான "பிக் பஜார்" ஏற்கனவே உடுப்பியில் திறக்கப்பட்டு சிறப்பாக இயங்கிவருகிறது.
மேலும் காண்க [தொகு]
குறிப்புதவிகள் [தொகு]
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns. (Provisional)". Census Commission of India. பார்த்த நாள் 2007-09-03.
புற இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Udupi தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
| விக்சனரியில் Udupi என்னும் சொல்லைப் பார்க்கவும். |
- The Town of Udupi
- Comprehensive information on Udupi
- Shivaram, Choodie (1996-08-11). "Karnataka Spiritual Centers Threatened by Development: Three 700-Year-Old Monasteries in Udupi and Scores of Temples to be Displaced by Reckless Industrial Projects". Hinduism Today. http://www.hinduismtoday.com/modules/smartsection/item.php?itemid=3669.
- "Conquer Vices To Sublimate The Mind". The Hindu. 1996-01-29. http://www.dvaita.org/scholars/vadiraja/VaadiraajaT_4.html.
- "Ashtha Muth and Paryaya". Udupi temples. பார்த்த நாள் 2005-12-12.
- Neria Harish Hebbar. "The Eight Tulu Monasteries of Udupi". பார்த்த நாள் 2005-12-12.
- See South Canara gazetteer 1894,1938,1973
- Udupi City Municipality Official Website
- Udupi Urban Development Authority Official Website
- Tourist Places around Manipal/Udupi
- Sri Pajaka Kshetra