உடுக்கை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உடுக்கை என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். கிராமப்புற கோயில்களிலும் முக்கியமாக மாரியம்மன் கோவில் சமயச் சடங்குகளிலும் இது ஒலிக்கப்படும். தோல் இசைக்கருவியான இதைக் கைகளைக் கொண்டு இசைக்கலாம். உலோகத்தால் அல்லது மரத்தால் செய்யப்பட்ட இரு பக்கங்களும் விரிந்து இடை சிறுத்துப் பருத்திருப்பதால் இதை இடை சுருங்குப்பறை என்றும் துடி என்றும் அழைப்பர். கரகம் ஆடும் போதும் பூசாரியை உருவேற்றுவதற்காகவும் இது முழக்கப்படுவது உண்டு.
இவற்றையும் காணவும் [தொகு]
| தொகு | தமிழிசைக் கருவிகள் |
|---|---|
| தோல் கருவிகள் | ஆகுளி | உறுமி | தவில் | பறை | மிருதங்கம் | மத்தளம் | பெரும்பறை | பஞ்சறை மேளம் | முரசு | தமுக்கு | பேரிகை | பம்பை | மண்மேளம் | கஞ்சிரா | ஐம்முக முழவம்
|
| நரம்புக் கருவிகள் | வீணை | யாழ் | கோட்டு வாத்தியம்
|
| காற்றுக் கருவிகள் | கொம்பு | தாரை | நாதசுவரம் | புல்லாங்குழல் | சங்கு | மகுடி | முகவீணை| எக்காளம்
|
| கஞ்சக் கருவிகள் | தாளம் | சேகண்டி |
|