ஈழப் போராட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈழப் போராட்ட
காரணங்கள்
தனிச் சிங்களச் சட்டம்
பெளத்தம் அரச சமயமாக்கப்படல்
இலங்கைக் குடியுரிமைச் சட்டம்
கல்வி தரப்படுத்தல் சட்டங்கள்
திட்டமிட்ட சிங்கள குடியேற்றம்
அரச பயங்கரவாதம்
யாழ் பொது நூலக எரிப்பு
சிங்களமயமாக்கம்
வேலைவாய்ப்பில் இனப்பாகுபாடு
சிங்களப் பேரினவாதம்
ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும்
அரச சித்திரவதை
பாலியல் வன்முறை
இலங்கைத் தமிழர் இனவழிப்பு
இலங்கையில் மனித இனத்துக்கெதிரான குற்றங்கள்

இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு

ஈழப் போராட்டம் என்பது இலங்கையில் தமிழர்களின் தன்னாட்சி, மரவுவழித் தாயகம் உட்பட்ட மனித, குடிசார், அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகளை முன்வைத்து ஈழத் தமிழர்கள் முன்னெடுத்துவரும் போராட்டங்களைக் குறிக்கும். இலங்கையின் ஆட்சி அதிகாரம் பிரித்தானியாவிடம் இருந்து இலங்கையர்களுக்கு கையளிக்கப்பட்டது தொடக்கம் இப் போராட்டம் இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சி அமைத்து வந்த சிங்களப் பெரும்பான்மை அரசுகளுக்கு எதிராக ஈழத் தமிழர்களின் பல்வேறு அரசியல் தலைமைகளால் முன்னெடுத்து வரப்பட்டுள்ளது.

இலங்கையில் ஆட்சி அமைத்த சிங்களப் பெரும்பான்மை அரசுகள் தொடர்ச்சியாக கொண்டுவந்த இனவாத அடக்குமுறை சட்டங்கள், நடைமுறைகள், வன்முறைகள், இனப்படுகொலை ஆகியன இப் போராட்டத்தின் அடிக் காரணிகளாக அமைகின்றன. 1980 களில் இருந்து 2009 வரை இப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக பல்வேறு இயக்கங்களால் முன்னெடுக்கப்பட்டது. இவ்வியக்கங்களின் கடைசி ஆயுதப் போராட்ட இயக்கமாக இருந்த விடுதலைப் புலிகள் 2009 இல் அழிக்கப்பட்ட பின்னர் இப் போராட்டம் மீண்டும் முழுமையான அரசியல் போராட்டமாக மாறி உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈழப்_போராட்டம்&oldid=2492444" இலிருந்து மீள்விக்கப்பட்டது