இலங்கையில் 1818ம் ஆண்டு கலகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1818ம் ஆண்டு கலகம் இலங்கை வரலாற்றில் ஒரு முக்கியத்துவமான கலகமாக கொள்ளப்படுகின்றது. இந்தக்கலகத்தை பிரித்தானியப் படையினர் அடக்கினாலும்கூட, இலங்கையின் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு முக்கிய நிலையாகக் கொள்ளப்படுகின்றது. இக்கலகம் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முதல் கலகமாகவும் கொள்ளப்படுகிறது.
பொருளடக்கம் |
[தொகு] 1818ம் ஆண்டு கலகத்துக்கான காரணம்.
- கண்டி மன்னனை நீக்க, கண்டி மக்கள் பிரித்தானியருக்கு ஆதரவு வழங்கினாலும், அவர்களின் ஆட்சி தொடர்வதை விரும்பாமை
- கண்டிய மரபுகளில் பிரித்தானியர் கவனம் செலுத்தாமை
- கண்டி மக்கள் மன்னாராட்சியை விரும்பியமை. (சடங்குகள், சமய அனுஷ்டானங்களுக்கு மன்னன் சமுகமளிப்பதை கௌரவமாக எண்ணியமை)
- பிரித்தானிய உத்தியோகத்தர் பிரதானிகளின் செல்வாக்கினைப் பறித்தல்
[தொகு] உடனடிக் காரணம்
ஹஜ்ஜி மரைக்காயர் எனும் முஸ்லிமை வெல்லஸ்ஸ பகுதிக்கு அதிகாரியாக நியமித்தமை, கலகத்திற்கான உடனடிக்காரணமாக அமைந்தது.
[தொகு] 1818 ஆண்டு கலகப் போக்கு
- இக்கலகம் 1817 செப்டம்பரில் ஊவாவில் ஆரம்பமானது
- 1818 ஜனவரியில் கலகம் வெல்லஸ்ஸவிற்குப் பரவியது
- பருவமழை காரணமாகவும், போக்குவரத்து வசதியின்மை காரணமாகவும் படைகளை உடனடியாக அனுப்பிக் கொள்ள பிரித்தானியருக்கு முடியவில்லை.
- கலகக்காரர்களுக்கு கண்டி, தும்பறை, ஹேவாஹெட்ட, சப்பிரகமுவ திசாவைகளின் ஒத்துழைப்பு கிடைத்தமை
- கண்டிக்கலகம் தேசிய நாட்டினவாதத்தின் எழுச்சியாக மாறியமை
[தொகு] கலகம் தோல்வியடைந்தமைக்கான காரணிகள்
- கலகம் ஒழுங்கற்றதாக இடம்பெற்றமை
- பிரித்தானியரால் கொடுமையான முறையில் அடக்கப்பட்டமை
- கலகக்காரர்களிடம் சிறந்த தலைமைத்துவம் இல்லாமை
- சில பிக்குகளினால் கடத்தப்பட்ட புனித தந்தத்தை பிரித்தானியர் மீட்டெடுத்தமை (தந்ததாது எவர் கையில் இருக்கிறதோ அவரே ஆளத்தக்கவர் என சிங்கள மக்கள் நம்பியமை)
- பிரதானிகளின் ஒரு பகுதியினர் பிரித்தானியருக்குத் தொடர்ந்தும் ஆதரவு அளித்தமை (உதாரணமாக: மொல்லிகொட)
[தொகு] உசாத்துணை
- மெண்டிஸ், ஜீ. ஸி - நம்முன்னோரளித்த அருஞ்செல்வம், முதலாம் பாகம், கொழும்பு அப்போதிக்கரீஸ் கம்பனி, 1969
- புன்னியாமீன் பீ. எம்., - வரலாறு ஆண்டு 11 கண்டி சிந்தனை வட்டம், 1998