இரா. நெடுஞ்செழியன்
| இரா. நெடுஞ்செழியன் | |
![]() |
|
|
|
|
| பதவியில் 1967-1976,1977-1988,1991-1996 |
|
|
|
|
| தொகுதி | ஆத்தூர் |
|---|---|
| அரசியல் கட்சி | அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
| கட்சி பொறுப்பு | அவைத் தலைவர் |
|
|
|
| பிறப்பு | சூலை 11, 1920 திருக்கனாபுரம், பட்டுக்கோட்டை |
| கல்வி | முதுகலைமானி தமிழ் |
| இறப்பு | சனவரி 12 2000 (அகவை 79) சென்னை |
| வாழ்க்கைத் துணை |
விசாலாட்சி |
| பிள்ளைகள் | மதிவாணன் |
| இருப்பிடம் | சென்னை |
இரா. நெடுஞ்செழியன் (சூலை 11, 1920 - சனவரி 12, 2000) தமிழக அரசியல்வாதியும் இலக்கியவாதியும் ஆவார். இவர் தமிழகத்தின் நிதி அமைச்சராகவும், சிறிது காலம் மாற்று முதலமைச்சராகவும் பதவி வகித்தவர். இவர் "நாவலர்" என்றும் அழைக்கப்படுவார்.
பொருளடக்கம் |
குடும்பம் [தொகு]
பட்டுக்கோட்டையின் அருகேயுள்ள திருக்கனாபுரத்தில் 11-7-1920 ந்தேதி பிறந்தார். இவருக்கு விசாலாட்சி என்ற மனைவியும், மதிவாணன் என்னும் மகனும் உள்ளனர். இவரது பேரன் ஜீவன் நெடுஞ்செழியன் இந்திய டென்னிஸ் வீரராக விளங்குகிறார். மருமகள் கல்யாணி மதிவாணன் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக தற்பொழுது இருக்கிறார்.
புகழ்பெற்ற பாராளுமன்ற உறுப்பினரான இரா.செழியன் இவர்தம் தம்பிகளுள் ஒருவர் ஆவார்.
அரசியல் [தொகு]
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டு இருந்த இவர், பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு 1944 ஆம் ஆண்டுசுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தார். இவ்வியக்கம் நீதிக்கட்சியோடு இணைக்கப்பட்டு திராவிடர் கழகம் உருவானபொழுது அதில் தொடர்ந்தார். பேரறிஞர் அண்ணா, 1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய போது அக்கட்சியின் ஐம்பெரும் தலைவர்களில் (அண்ணா, ஈ.வெ.கி.சம்பத், நெடுஞ்செழியன், என்.வி.நடராசன். க.மதியழகன்) ஒருவராகத் திகழ்ந்தார். 1957 - 62ஆம் ஆண்டுகளில் அக்கட்சியின் இரண்டாவது பொதுச் செயலாளராக பதவி வகித்தார். அண்ணாவின் மறைவிற்குப் பின்னர் 1975ஆம் ஆண்டுவரை மீண்டும் பொதுச் செயலாளராகப் பதவிவகித்தார்.
1975ஆம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து பிரிந்து வந்து க.இராசராம் அவர்களுடன் இணைந்து மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் கட்சியைத் தொடங்கினார். 1977ஆம் ஆண்டில் அக்கட்சியை அ.தி.மு.க.வில் இணைத்தார். அதன்பின் அ.தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளராகவும் பொதுச்செயலாளராகவும் சிலகாலம் இருந்தார்.
1987ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர். மறைந்தவுடன் அப்போதைய கொள்கைபரப்புச் செயலாளரான ஜெ.ஜெயலலிதாவை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப் பாடுபட்டார். பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் க.இராசராம், செ.அரங்கநாயகம், பண்ருட்டி இராமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து அ.தி.மு.க (நால்வர் அணி) என்னும் பிரிவை உருவாக்கினார். அந்த அணியின் சார்பில் அதற்கு அடுத்த தேர்தலில் மயிலாப்பூர் தொகுதிலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். அதனால் சிறிதுகாலம் அரசியலில் இருந்து விலகி இருந்தார். பின்னர் ஒருங்கிணைந்த அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்து இறுதிவரை அக்கட்சியின் அவைத்தலைவராக இருந்தார்.
அமைச்சர் [தொகு]
- 1967ஆம் ஆண்டில் அண்ணா தலைமையில் தி.மு.க. அமைச்சரவை அமைத்த பொழுது அதில் கல்வி அமைச்சராக இருந்தார்.
- 1969ஆம் ஆண்டில் அண்ணா மறைந்தபொழுது ஏற்பட்ட பிணக்கால் கருணாநிதியின் அமைச்சரவையில் பங்கேற்காமல் விலகி இருந்தார்.
- 1972ஆம் ஆண்டில் கருணாநிதி அமைத்த அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்தார்.
- 1977ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் அமைத்த அமைச்சரவையில் உணவு அமைச்சராக இருந்தார்.
- 1980ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் அமைச்சரவை அமைக்கும் பொழுதெல்லாம் நிதி அமைச்சராகப் பதவி வகித்தார்.
அண்ணா இறந்த பொழுது பெப்ரவரி 3, 1969 முதல் பெப்ரவரி 10, 1969 காலமும் எம்.ஜி.ஆர் இறந்த பொழுது டிசம்பர் 24, 1987 முதல் ஜனவரி 7, 1988 வரை இடைக்கால முதலமைச்சராக பதவி வகித்தார்.
எழுதிய நூல்கள் [தொகு]
- கண்ணீரும் செந்நீரும் சிந்தி வளர்த்த கழகம்
- திமுக
- தீண்டாமை
- திருக்குறள் தெளிவுரை
- பாவேந்தர் கவிதைகள் - திறனாய்வு
- நீதிக்கட்சியின் வரலாறு
- இங்கர்சால் நூலொன்றை மொழிபெயர்த்துள்ளார்
- மன்றம் என்னும் இதழை நடத்தினார்
மறைவு [தொகு]
இவர் 12-1-2000ல் காலமானார்.
|
||||||||||||||||||||||||||
