இராயவரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராயவரம்(Rayavaram) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிற்றூர் ஆகும்.
"எந்தன் ஊரே இராயவரம்
இனிமை மிக்க சிறுநகரம்
மன்னர் ஆண்ட புதுக்கோட்டை
மாவட்டத்தை சேர்ந்ததுவே"
- குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா
[தொகு] அமைப்பு
இராயவரம் (ராயவரம் என்றும் எழுதுவர்) சிற்றூர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. இது செட்டிநாட்டில் உள்ள 96 ஊர்களில் ஓன்று. திருச்சியில் இருந்து 72கிமீ தொலைவிலும் மதுரையில் இருந்து 90 கிமீ தூரமும் உள்ளது. தேசிய நெடுச்சாலை 210(NH 210)8 கிமீ தொலைவில் இருக்கிறது. அருகாமையில் உள்ள புகைவண்டி நிலையம் திருமயத்திலும், விமான நிலையம் திருச்சியிலும் உள்ளது. தரை வழியே புதுக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, அரிமலம் மற்றும் திருமயத்துடன் நன்கு இணைக்கபட்டு தினம் 75 பேருந்துகள், சிற்றுந்துகள் வந்து சொல்கின்றன.