இரத்த அழுத்தம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
- உயர் இரத்த அழுத்தத்தைக் குறித்து அதிகமான தகவல்களுக்கு ஹைப்பர்டென்ஷனைக் காண்க.
இரத்த அழுத்தம் (BP) என்பது இரத்தக் குழல்களின் சுவர்களில் இரத்தச் சுற்றோட்டத்தினால் ஏற்படும் அழுத்தமாகும் (ஒரு அலகு பரப்பளவிற்கான விசை). இது பிரதான உயிர்வாழ்தலுக்கான அறிகுறிகளில் ஒன்றாகும். இதயத்திலிருந்து புற தமனிகள் மற்றும் இரத்த தந்துகிகள் வழியாக இரத்தம் வெளியே போகும் போது இரத்த சுற்றோட்டத்தின் அழுத்தம் குறைகிறது மற்றும் நரம்புகள் வழியாக இரத்தம் திரும்பவும் இதயத்திற்கு போகும் போது இரத்த அழுத்தம் இன்னும் குறையும்.
இரத்த அழுத்தம் என்னும் சொல், ஒருவருடைய மேற்புயத்தில் அளவிடப்படும் அழுத்தத்தையே குறிக்கிறது. இதயத்திலிருந்து இரத்தத்தை எடுத்துச் செல்லும் மேற்புயத்தின் மிகப்பெரிய இரத்த குழலான புயத்தமனியில் இருக்கும் முழங்கையினில் இரத்த அழுத்தம் அளக்கப்படும்.
இரத்த அழுத்தம் சில நேரங்களில் மற்ற பகுதிகளிலும் அளவிடப்படும். எடுத்துக்காட்டாக கணுக்காலில் அளக்கப்படும். கணுக்காலின் முக்கிய தமனியில் அளவிடப்படும் இரத்த அழுத்தம் மற்றும் புயத்தமனியில் அளவிடப்படும் இரத்த அழுத்தம் ஆகியவற்றின் விகிதமே கணுக்கால் புய அழுத்த உள்ளடக்கம் (ABPI) ஆகும்.
பொருளடக்கம் |
[தொகு] அளவீடு
தமனி சார்ந்த அழுத்தம் பொதுவாக நாடியழுத்தமானி மூலம் அளவிடப்படுகிறது. சுற்றோட்ட அழுத்தத்தைக் கண்டறிவதற்கு நாடியழுத்தமானியில் இருக்கும் பாதரச செங்குத்து வரிசையின் உயரம் பயன்படுத்தப்படுகிறது. (தோலினுள் உட்செலுத்தாமல் செய்யப்படும் அளவீடு என்பதைக் காண்க). அனிராய்டு மற்றும் மின்னணுக் கருவிகளில் பாதரசம் பயன்படுத்தப்படுவதில்லை எனினும், இன்றும் இரத்த அழுத்த மதிப்புகள் பாதரசத்தின் மில்லிமீட்டர்களில் (mmHg), தான் குறிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு இதயத்துடிப்பிற்கும் இதய சுருக்கியக்க மற்றும் இதய விரிவியக்க அழுத்தங்களுக்கிடையே உள்ள இரத்த அழுத்தம் வேறுபடுகின்றன. இதய சுருக்கியக்க அழுத்தம் என்பது தமனிகளின் அதிகமான அழுத்தமாகும். இது இதயக்கீழறைகள் சுருங்கும் போது இதய இயக்கச்சுற்று முடிவடைவதற்கு அருகில் ஏற்படும். இதய விரிவியக்க அழுத்தம் என்பது தமனிகளின் மிகக் குறைவான அழுத்தமாகும். இது இதயக்கீழறைகள் இரத்தத்தினால் நிரப்பட்டிருக்கும் போது இதய இயக்கச்சுற்று ஆரம்பிப்பதற்கு அருகில் ஏற்படும். எடுத்துக்காட்டாக, ஓய்விலிருக்கும் ஆரோக்கியமான வயதுவந்த ஒருவரின் சாதாரணமான அளவீட்டு மதிப்புகள் 115 mmHg இதய சுருக்கியக்கம் மற்றும் 75 mmHg இதய விரிவியக்கம் ஆகும் (இது 115/75 mmHg என்று எழுதப்படும் மற்றும் [USல்] பேச்சுவழக்கில் "ஒன் ஃபிப்டீன் ஓவர் செவண்டி ஃபை" என்று சொல்லப்படும்). அடிப்புவீதம் என்பது இதய சுருக்கியக்கம் மற்றும் இதய விரிவியக்கம் ஆகிய அழுத்தங்களுக்கு இடையே உள்ள வேறுபாடாகும்.
இதய சுருக்கியக்கம் மற்றும் இதய விரிவியக்க தமனி சார்ந்த இரத்த அழுத்தங்கள் நிலையானதாக இருக்காது. இயற்கையாக இதயத்துடிப்பில் இருக்கும் மாற்றத்திற்கேற்ப நாள்முழுவதும் மாறிக்கொண்டே இருக்கும் (சர்கார்டியன் ரிதத்தில்). உளைச்சல், ஊட்டக் காரணிகள், மருந்துகள், நோய், உடற்பயிற்சி மற்றும் நின்றுகொண்டிருக்கும் நேரங்களைப் பொறுத்தும் அவைகள் மாறுபடும். சில நேரங்களில் அந்த வித்தியாசங்கள் அதிகமாக இருக்கும். தமனி சார்ந்த அழுத்தம் இயல்பிற்கு மாறாக அதிகமாக இருந்தால் உயர் இரத்த அழுத்தம் என்றழைக்கப்படும். அதே போல இயல்பிற்கு மாறாக குறைவாக இருந்தால் தாழழுத்தம் என்றைழைக்கப்படும். உடல் வெப்பநிலை, சுவாசத்திற்குரிய விகிதம் மற்றும் துடிப்பு விகிதம் ஆகியவற்றுடன் சேர்ந்து இரத்த அழுத்த அளவீடுகளும் மிகவும் பொதுவாக அளக்கப்படும் உடலியக்கவியலின் அளவுருவாகும்.
தமனிசார்ந்த அழுத்தங்கள் பொதுவாக தோல் அல்லது தமனியில் உட்செலுத்தாமல் செய்யப்படும் அளவீட்டு முறையின் மூலம் அளக்கப்படும். தமனி சார்ந்த சுவர்களில் உட்செலுத்தி செய்யப்படும் அழுத்த அளவீடுகள் பொதுவாக குறைவாக இருக்கிறது. இந்த அளவீட்டுமுறை மருத்துவமனையில் மட்டுமே செய்யப்பட வேண்டும் எனக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
[தொகு] தோலினுள் உட்செலுத்தாமல் செய்யப்படும் அளவீட்டு முறை
தோலினுள் உட்செலுத்தாமல் செய்யப்படும் ஒலிச்சோதனை மற்றும் ஆஸிலோமெட்ரிக் அளவீடுகள் உட்செலுத்தி செய்யப்படும் அளவீடுகளை விட மிகவும் எளிதாகவும் விரைவாகவும் செய்யப்படுகின்றன. அதைப் பொருத்துவதற்கு குறைவான நுண்திறமை இருந்தாலே போதுமானதாக இருக்கிறது. இதனால் எந்த சிரமமும் இருக்காது மற்றும் நோயாளிகளுக்கு மிகவும் குறைவான கஷ்டமும் வலியும் தான் இருக்கும். எனினும், தோலினுள் உட்செலுத்தாமல் செய்யப்படும் அளவீட்டு முறைகள் துல்லியம் குறைவாகவும் எண்கள் ரீதியான முடிவுகளில் சிறிய வேறுபாடுகளும் இருக்கலாம். தோலினுள் உட்செலுத்தாமல் செய்யப்படும் அளவீட்டு முறைகள் வழக்கமான பரிசோதனைகளுக்கும் நெறிப்படுத்துதலுக்கும் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.
[தொகு] தொட்டாய்வு முறை
குறைவான இதய சுருக்கியக்க மதிப்பு எந்த கருவிகளும் இல்லாமல் தோராயமாக தொட்டாய்வு மூலம் கணக்கிடப்படும். இது அதிகமாக அவசரமான சூழ்நிலைகளில் செய்யப்படும். தொட்டாய்வுவில் ஆரை துடிப்புவீதம் 80 mmHg குறைந்தபட்ச இரத்த அழுத்தமும், ஃபீமர துடிப்புவீதம் குறைந்தப்பட்சம் 70 mmHg ஆகவும் கேரோட்டிட் துடிப்புவீதம் குறைந்தபட்சம் 60 mmHg ஆகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. எனினும், இந்த முறை போதுமான அளவிற்கு துல்லியமாக இல்லை என்றும் அடிக்கடி நோயாளிகளின் இதய சுருக்கியக்க இரத்த அழுத்தத்தை அதிகமாகக் கணக்கிட்டுவிடுகிறது என்றும் ஒரு ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.[1] ஆரை துடிப்புவீதம் திரும்பும் போது தொட்டாய்வு செய்தல் மற்றும் நாடியழுத்தமானி மூலம் இதய சுருக்கியக்க இரத்த அழுத்தம் மிகவும் துல்லியமாக அளவிடப்படுகிறது.[2] இதய விரிவியக்க இரத்த அழுத்தத்தை இந்த முறையின் மூலம் கணக்கிடமுடியாது.[3] சில நேரங்களில் ஒலிச்சோதனை முறையை பயன்படுத்துவதற்கு முன்னதாக ஒரு மதிப்பீட்டிற்காக தொட்டாய்வு செய்யப்படுகிறது.
[தொகு] ஒலிச்சோதனை முறை
ஒலிச்சோதனை முறையில் (கேட்டல் என்ற பொருள்படும் லத்தீன் வார்த்தையிலிருந்து) இதயத்துடிப்புமானி மற்றும் நாடியழுத்தமானி ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. இதில், தோராயமாக இதயம் இருக்கும் செங்குத்து உயரத்தில் மேற்புயத்தைச் சுற்றி வைக்கப்படும் காற்று அடைக்கப்பட்ட(ரிவா-ரோசி ) சுற்றுப்பட்டை ஒன்று பாதரசம் அல்லது அனிராய்டு அழுத்தமானியுடன் இணைக்கப்பட்டிருக்கும். பாதரச அழுத்தமானி பாதரசத்தின் செங்குத்து உயரத்தை அளவிட்டு அளவுப் பிரிப்பின் அவசியமில்லாமல் துல்லியமான முடிவைத் தருகிறது. மற்ற முறைகளை பாதிக்கும் அளவுப் பிரிப்பின் நகர்வு மற்றும் பிழைகள் இதில் ஏற்படாது. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் போன்று அதிகமான ஆபத்து இருக்கும் நோயாளிகளுக்கு உயர் இரத்த அழுத்தத்தின் மருத்துவ அளவீட்டிற்காகவும் மருத்துவ சோதனைகளுக்காகவும் பாதரச அழுத்தமானி அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
வழுவழுப்பாகவும் உடம்போடு ஒட்டியும் இருக்கும் சரியான அளவையுடைய சுற்றுப்பட்டை பொருத்தப்படும். பிறகு தமனி முற்றிலும் இறுக்கிப் பொருத்தும் வரை ரப்பர் குமிழியை திரும்ப திரும்ப அழுத்துவதன் மூலம் கைமுறையாக காற்று ஏற்றப்படுகிறது. முழங்கையின் புயத்தமனியை இதயத்துடிப்புமானியின் மூலம் கேட்டுக்கொண்டே சோதனையாளர் மெதுவாக சுற்றுப்பட்டையில் இருக்கும் காற்றை வெளியேற்றுவார். தமனியில் இரத்த ஓட்டம் ஆரம்பிக்கும் போது, கொந்தளிப்பு ஓட்டம் "ஷ்ஷ்ஷ்" அல்லது மோதும் சத்தத்தை உருவாக்கும் (முதல் கோரட்காஃப் சத்தம்). இந்த சத்தம் எந்த அழுத்தத்தில் முதலில் கேட்கப்பட்டதோ அதுவே இதய சுருக்கியக்க அழுத்தம் எனப்படும். இதய விரிவியக்க தமனி சார்ந்த அழுத்தத்தைக் கண்டறிவதற்கு சத்தம் கேட்கப்படாத (ஐந்தாவது கோரட்காஃப் சத்தம்) வரைக்கும் சுற்றுப்பட்டை அழுத்தம் மேலும் வெளியேற்றப்படும்.
இரத்த அழுத்த அளவீடுகள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து ஒலிச்சோதனை முறை பெருமளவு பயன்பாட்டில் இருந்துவந்தது. ஆனால் படிப்படியாக தானியங்கி முறைக்குப் பொருத்தமாக இருக்கும் தோலினுள் உட்செலுத்தப்படாமல் செய்யப்படும் மற்ற உத்திகள் இதனுடைய இடத்தைக் கைப்பற்றிக்கொண்டன.[4]
[தொகு] ஆஸ்லமேட்ரிக் முறை
ஆஸ்லமேட்ரிக் முறை அதாவது மின்னணுவியல் முறை என்பது அழுத்த அலைவுகளை அளக்கும் அளவீட்டு முறையாகும். இது சிலநேரங்களில் நீண்டகால அளவீடுகளிலும் பொது வகைத் தொழிலாற்றுதலிலும் பயன்படுத்தப்படுகிறது. ஒலிச்சோதனை முறையில் பயன்படுத்தப்படும் கருவியைப் போன்றே இதுவும் இருந்தாலும், இதயத்துடிப்புமானி மற்றும் வல்லுநரின் காதுகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக இரத்த ஓட்டத்தைக் கண்டறிவதற்கு இதனுடன் மின்னணுவியல் அழுத்த உணர்கருவி (ஆற்றல் மாற்றி) பொருத்தப்பட்டிருக்கிறது. நடைமுறையில், அழுத்த உணர்கருவி என்பது இரத்த அழுத்தத்தின் எண் அளவீடுகள் கொண்ட அளவுப் பிரிப்பு செய்யப்பட்ட மின்னணுவியல் கருவியாகும். துல்லியமான தன்மையைக் கொண்ட பாதரச அழுத்தமானியைப் போல் அல்லாது இதில் துல்லியமான அளவிற்காக அளவு பிரிப்பு குறிப்பிட்ட கால இடைவெளியில் சரிபார்க்கப்பட வேண்டும். பெரும்பாலான நேரங்களில் சுற்றுப்பட்டை மின்சாரத்தினால் இயக்கப்படும் எக்கி மற்றும் வால்வு மூலம் காற்று ஏற்றப்பட்டு வெளியேற்றப்படும். மேற்புயத்தில் பொருத்தப்படவேண்டும் என்றிருந்தாலும் மணிக்கட்டிலேயும் (இதய உயரத்திற்கு உயர்த்தி) இது பொருத்தப்படலாம். துல்லியத்தில் அவைகள் அதிகமாக வித்தியாசப்படும் மேலும் குறிப்பிட்ட இடைவெளியில் சரிப்பார்க்கவேண்டும். தேவைப்பட்டால் மறுபடியும் அளவு பிரிப்பு செய்யப்படவேண்டும்.
ஒலிச்சோதனை நுட்பத்தை விட ஆஸ்லமேட்ரிக் அளவீட்டைப் பயன்படுத்துவதற்கு குறைந்த திறமையே தேவைப்படும். பயிற்சியற்ற பணியாளர்கள் பயன்படுத்துவதற்கும் நோயாளிகள் தானியங்கி முறையில் கண்காணிப்பதற்கும் இது பொருத்தமாக இருக்கலாம்.
இதய சுருக்கியக்க தமனி சார்ந்த அழுத்தத்தைவிட அதிகமாக சுற்றுப்பட்டையில் முதலில் காற்று ஏற்றப்படுகிறது. அதற்கு பிறகு 30 நொடிகளுக்குப் பிறகு இதய விரிவியக்க அழுத்தத்திற்கு கீழ் குறைக்கப்படுகிறது. இரத்த ஓட்டம் இல்லாமல் (இதய சுருக்கியக்க அழுத்தத்தை விட சுற்றுப்பட்டை அழுத்தம் அதிகரித்தல்) அல்லது தடுக்கப்படாமல் (இதய விரிவியக்க அழுத்தத்தை விட சுற்றுப்பட்டை அழுத்தம் குறைதல்) இருக்கும் போது சுற்றுப்பட்டை அழுத்தம் கண்டிப்பாக மாறாமல் இருக்கும். சுற்றுப்பட்டையின் அளவு சரியாக இருத்தல் மிகவும் அவசியமாக இருக்கிறது: குறைந்த அளவையுடைய சுற்றுப்பட்டைகள் மிகவும் அதிகமான அழுத்தத்தைக் கொடுக்கும் மற்றும் அளவு பெரியதாக இருக்கும் சுற்றுப்பட்டைகள் மிகவும் குறைவான அழுத்தத்தைக் கொடுக்கும். இரத்த ஓட்டம் ஓரளவிற்கு இருக்கும் போது அழுத்த உணர்கருவியால் கண்காணிக்கப்பட்ட சுற்றுப்பட்டை அழுத்தம் புயத்தமனியின் தொடர் விரிதல் மற்றும் சுருங்குதலுடன் ஒத்திசைந்திருப்பதில் குறிப்பிட்ட கால இடைவெளியில் வேறுபட்டிருக்கும், அதாவது அது அலைவுறும். முதல் விவரங்களிலிருந்து அளக்கப்படாமல் ஒரு வழிமுறையைப் பயன்படுத்தி இதய சுருக்கியக்கம் அழுத்தம் மற்றும் இதய விரிவியக்க அழுத்தத்தின் மதிப்புகள் கணக்கிடப்படுகின்றன. கணக்கிடப்படும் முடிவுகள் காண்பிக்கப்படும்.
தமனி சார்ந்த விழி வெண்படலம், குருதி ஊட்டக்குறை, முன்சூல்வலிப்பு, மாறுநடைநாடி மற்றும் புதிர்நடைநாடி ஆகிய சுற்றோட்டப் சிக்கல்கள் மற்றும் இதயப் சிக்கல்கள் இருக்கும் நோயாளிகளுக்கு இந்த முறையின் மூலம் அளவிடும் போது ஆஸ்லமேட்ரிக் கண்காணிப்புகள் துல்லியமற்ற அளவுகளை காண்பிக்கலாம்.
நடைமுறையில் வேறுபட்ட முறைகள் ஒரே மாதிரியான முடிவுகளைக் கொடுக்காது; ஒலிச்சோதனை முடிவுகளுக்குப் பொருந்தும் அளவீட்டைக் கொடுப்பதற்காக வழிமுறை மற்றும் பரிசோதனை மூலம் பெறப்பட்ட கெழுக்கள் ஆஸ்லமேட்ரிக் முடிவுகளை சரிசெய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன. இதய சுருக்கியக்கம், சராசரி (நடுமட்டம்) மற்றும் இதய விரிவியக்க புள்ளிகளைத் தீர்மானிப்பதற்கு உடனடியான தமனிசார்ந்த அழுத்த அலைவடிவத்தின் கணினி பயன்படுத்தி செய்யப்படும் பகுப்பாய்வை சில கருவிகள் பயன்படுத்துகின்றன. பல ஆஸ்லமெட்ரிக் கருவிகள் உறுதிசெய்யப்படாததன் காரணத்தினால் மருத்துவ மற்றும் முக்கிய பராமரிப்புக் கூடங்களுக்கு இது போன்ற கருவிகள் பொருத்தமாக இருக்காது என்ற எச்சரிக்கை கொடுக்கப்படவேண்டும்.
தோலினுள் உட்செலுத்தாமல் செய்யப்படும் இரத்த அழுத்த பரிசோதனைக்கு NIBP என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இது அதிகமாக ஆஸ்லமேட்ரிக் கண்காணிப்பு கருவியை விவரிக்க பயன்படுத்தப்படுகிறது.
[தொகு] வெள்ளை-மேலங்கி உயர் இரத்த அழுத்தம்
ஒரு மருத்துவரின் அலுவலத்தில் சில நோயாளிகளுக்கு செய்யப்படும் இரத்த அழுத்த பரிசோதனை அவர்களுடைய சரியான இரத்த அழுத்தத்தை காண்பிக்காமல் இருக்கலாம்.[5] 25% வரை உள்ள நோயாளிகளுக்கு அவர்களுடைய சரியான இரத்த அழுத்ததை விட அதிகமாக இருப்பது போல் அலுவலகத்தில் செய்யப்படும் அளவீட்டில் காண்பிக்கும். உடல்நல பராமரிப்பு நிபுணர்களினால் செய்யப்படும் பரிசோதனை தொடர்பான மனக்கலக்கத்தினால் இது ஏற்படுகிறது. இந்த வகையான பிழைகளை வெள்ளை-மேலங்கி உயர் இரத்த அழுத்தம் (WCH) என்று அழைப்பர்.[6] இந்த வகையான நோயாளிகளுக்கு உயர் இரத்த அழுத்தம் தவறாக அறுதியிடல் செய்வதன் காரணத்தினால் அவர்கள் தேவையில்லாமலும் ஆபத்தை விளைவிக்ககூடிய மருந்துகளை எடுத்துகொள்ள வேண்டிய நிலையும் ஏற்படலாம். மருத்துவமனை அல்லது அலுவலகத்தின் ஒரு அமைதியான பகுதியில் 15லிருந்து 20 நிமிடங்கள் இரத்த அழுத்தத்தின் தானியங்கி அளவீடுகளை பயன்படுத்துவதன் மூலம் WCH குறைக்கப்படலாம் (ஆனால் தவிர்க்க முடியாது).[7]
இந்த தாக்கத்தின் முக்கியத்துவம் குறித்த வாதம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.[மேற்கோள் தேவை] சில உணர்ச்சி வசப்படக்கூடிய நோயாளிகள் அவர்களுடைய தினசரி வாழ்க்கையில் நடக்கும் அதிகமான விஷயங்களினால் உணர்ச்சிவசப்படுவார்கள். அவர்களுக்கு சிகிச்சை அவசியமாக இருக்கலாம். சில நோயளிகளுக்கு மருத்துவரின் அலுவலகத்தில் குறைந்த இரத்த அழுத்த அளவீடுகளும் கிடைக்கக்கூடும்.[8]
[தொகு] வீட்டிலிருந்தே கண்காணித்தல்
ஒரு நாளின் ஒட்டுமொத்த இரத்த அழுத்தத்தை அளவிடும் கருவிகள் நாள்முழுவதும் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் அளவுகளைக் காண்பிக்கும். இரவு நேரங்களில் வெள்ளை-மேலங்கி உயர் இரத்த அழுத்தம் போன்ற சிக்கல்களைக் கண்டறியவும் மட்டுப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. தூங்கும் நேரத்தைத் தவிர்த்து, ஒரு நாளின் ஒட்டுமொத்த இரத்த அழுத்தத்தைக் கண்காணிக்கும் கருவிக்கு பதிலாக வீட்டிலிருந்தபடியே கண்காணிக்கும் கருவிகள் இது போன்ற காரணங்களுக்காக பயன்ப்படுத்தப்படுகிறது.[9] வீட்டிலிருந்தே காண்காணிக்கும் கருவிகள் உயர் இரத்த அழுத்தத்தைச் சமாளிப்பதற்கும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் இரத்த அழுத்தம் தொடர்பான மருந்துகளைக் கண்காணிப்பதற்கும் பயன்படுத்தப்படலாம்.[10] ஒரு நாளின் ஒட்டுமொத்த இரத்த அழுத்தத்தை[9] அளவிடும் கருவிகளோடு ஒப்பிடும் போது வீட்டிலிருந்தே காண்காணிக்கும் கருவிகள் மிகவும் பயனுள்ளதாகவும் குறைந்த செலவில் இருக்கும் மாற்றுவழியாகவும் இருப்பதாக அறியப்படுகின்றன.[9][11][12]
வெள்ளை மேலங்கி தாக்கம் ஒரு பக்கம் இருக்க, பெரும்பாலான நோயாளிகளுக்கு மருத்துவக் கூடத்திற்கு வெளியே செய்யப்படும் தமனி சார்ந்த அழுத்த அளவீடுகள் பொதுவாக குறைவாகவே காண்பிக்கப்படுகின்றன. உயர் இரத்த அழுத்தத்தின் ஆபத்துகள் மற்றும் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தமனிசார்ந்த அழுத்தத்தை குறைப்பதில் உள்ள பலன்கள் ஆகிய ஆய்வுகள் மருத்துவ சூழலில் உள்ள அளவீடுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.
இரத்த அழுத்த அளவீடு எடுப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக தேனீர் அருந்துதல், புகையிலை புகைத்தல் அல்லது கடுமையான உடற்பயிற்சி ஆகியவற்றை செய்யாமல் இருந்தால் மட்டுமே துல்லியமான அளவீடு கிடைக்கும். தேங்கு பை நிறைந்து இருந்தாலும் கூட இரத்த அழுத்த அளவீட்டில் சிறிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. அதனால் ஒருவருக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தோன்றினால் அளவு எடுப்பதற்கு முன்னதாக கழித்து விட்டு வருவது நல்லது. அளவீடு எடுப்பதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னதாக ஒருவர் பாதங்களை தரையில் பதியவைத்து மூட்டுகளை குறுக்கே போடாமல் நாற்காலியில் நேராக உட்காரவேண்டும். சட்டைகளுக்கு மேலே சுற்றுப்பட்டையை வைத்து எடுக்கப்படும் அளவீடுகள் துல்லியம் குறைவாக இருக்கும் என்பதனால் இரத்த அழுத்த சுற்றுப்பட்டை எப்போதும் தோலில் படும்படியே எடுக்கப்படவேண்டும். அளவீடு எடுக்கும் போது பயன்படுத்தப்படும் கரம் தளர்வாகவும் இதய அளவிற்கும் வைக்கப்படவேண்டும். எடுத்துக்காட்டாக மேசையின் மேல் இருக்கும் படி வைக்கப்படவேண்டும்.[13]
தமனி சார்ந்த அழுத்தம் நாள்முழுவதும் மாறிக்கொண்டே இருக்கும் என்பதனால் அளவீடுகளை ஒப்பிடுவதற்காக நீண்ட கால அளவுகளின் மாற்றங்கள் நாளின் அதே நேரத்தில் கண்காணித்தல் அவசியமாக இருக்கிறது. பொருத்தமான நேரங்களாவன:
- விழிப்பு ஏற்பட்ட உடனேயே (முகம், கை, கால்களை கழுவுதல் மற்றும் காலை உணவு/பானம் அருந்துதும் முன்னதாக), உடல் ஓய்வில் இருக்கும் போதே,
- வேலை முடித்த உடனேயே.
தானியங்கி தன்னிறைவான இரத்த அழுத்த கண்காணிப்புக் கருவி குறைந்த விலைக்கே கிடைக்கிறது. சில கருவிகளில் ஆஸ்லமேட்ரிக் முறைகளோடுகூட கோரட்கார்ஃப் அளவீடுகளும் சேர்ந்து இருக்கிறது. சீரற்ற இதயத்துடிப்பு இருக்கும் நோயாளிகளுக்கு வீட்டிலேயே அவர்களுடைய இரத்த அழுத்தத்தைத் துல்லியமாக அளவிடுவதற்கு இது உதவுகிறது.
[தொகு] தோலினுள் உட்செலுத்தி செய்யப்படும் அளவீடுகள்
தமனி சார்ந்த இரத்த அழுத்தம் (BP) மிகவும் துல்லியமாக தமனிசார்ந்த வடிகுழாய் மூலம் உட்செலுத்தி அளவிடப்படுகிறது. வடிகுழல் குழலுள் உட்செலுத்திச் செய்யப்பபடும் தமனி சார்ந்த அழுத்த அளவீடுகளில் உடல் வடிகுழாய் ஊசியை தமனியில் வைப்பதன் மூலம் தமனி சார்ந்த அழுத்தம் நேரடியாக அளவிடப்படுகிறது (பொதுவாக ஆரை, ஃபீமர, புறங்கால் தமனி அல்லது மேற்கைச் சிரை). இந்த செயல்முறை அங்கிகரிக்கப்பட்ட எந்த மருத்துவராலோ சுவாசத்திற்குரிய சிகிச்சையாளராலோ செய்யப்படலாம்.
கிருமி நீக்கியுடன் இணைக்கப்பட்ட வடிகுழாய் ஒரு திரவம் நிரம்பிய கருவியாகும். இது மின்னணுவியல் அழுத்த ஆற்றல் மாற்றியுடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த கருவியின் முக்கியப் பயன்பாடு, ஒவ்வொரு துடிப்பின் அழுத்தமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு ஒரு அலைவடிவம் (அழுத்தம்-நேரம் வரைப்படம்) காண்பிக்கப்படும். இது போன்ற உட்செலுத்தி செய்யப்படும் அளவீட்டு முறை பொதுவாக மனித மற்றும் கால்நடை முனைப்புக் கவனிப்புப் பிரிவு, உணர்வகற்றியல் மற்றும் ஆராய்ச்சியில் செய்யப்படும்.
தோலினுள் உட்செலுத்தி செய்யப்படும் குழல்மய அழுத்த கண்காணித்தலுக்காக செருகுதலானது எப்போதாவது இரத்த உறைவு, நோய்த்தொற்று மற்றும் இரத்தக்கசிவு போன்ற சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. தோலினுள் உட்செலுத்தி செய்யப்படும் தமனி சார்ந்த சோதனையில் இருக்கும் நோயாளிகளை மிகவும் கவனமாக கண்காணித்தல் அவசியமாக இருக்கிறது. ஏனெனில் வடிகுழாய் துண்டிப்படைந்தால் அதிகமான இரத்தக்கசிவை ஏற்படுத்தும் ஆபத்து இதில் இருக்கிறது. தமனி சார்ந்த அழுத்தத்தில் அதிகமான வேறுபாடுகள் இருக்கும் என எதிர்நோக்கப்படும் நோயாளிகளுக்காக இது ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளது.
தோலினுள் உட்செலுத்தி செய்யப்படும் குழல்மய அழுத்த காண்காணிப்புகள் அழுத்தத்தை கண்காணிக்கும் கருவியாகும். இது அழுத்தம் பற்றிய தகவல்களை கண்டறிந்து அதை திரையிடுவதற்காகவும் செயல்படுத்துவதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. விபத்து சம்பந்தப்பட்ட பிரிவு, அவசரப் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை அறை ஆகியவற்றில் வெவ்வேறான தோலினுள் உட்செலுத்தி செய்யப்படும் குழல்மய அழுத்தக் கண்காணிப்புக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் ஒற்றை அழுத்தம், இரட்டை அழுத்தம் மற்றும் பல்-அளவுரு ஆகியவையும் அடங்கும் அதாவது (அழுத்தம்/வெப்பநிலை). தமனி சார்ந்த அழுத்தம், மைய சிரை, சுவாசத்திற்குரிய தமனி சார்ந்த அழுத்தம், இடது ஏட்ரியம், வலது ஏட்ரியம், ஃபீமர தமனி சார்ந்த அழுத்தம், தொப்புள் சிரை, தொப்புள் சிரை தமனி சார்ந்த அழுத்தம் மற்றும் மண்டையக அழுத்தங்கள் ஆகியவற்றை அளவிடவும் பின்-தொடர்தல் செய்யவும் இந்த கண்காணிப்புக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
குழல்மய அழுத்த அளவுருக்கள் கண்காணிப்புக் கருவியின் நுண்ணியகணினிக் கருவியின் மூலம் பெறப்படுகிறது. வழக்கமாக இதய சுருக்கியக்கம், இதய விரிவியக்கம், மற்றும் சராசரி (நடுமட்டம்) அழுத்தங்கள் துடிப்பு அலைவடிவங்களுக்காக ஒரே நேரத்தில் காண்பிக்கப்படுகின்றன. (அதாவது தமனி சார்ந்த மற்றும் சுவாசத்திற்குரிய தமனி சார்ந்த அழுத்தங்கள்) சில கண்காணிப்புக் கருவிகள் CPPயை (பெருமூளைச் சிரை உறுப்பு வழி செலுத்தல் அழுத்தம்) கணக்கிட்டும் காண்பிக்கும். பொதுவாக கண்காணிப்புக் கருவியில் முன்னதாக உள்ள பூச்சியமைத்தல் பொத்தான் அழுத்தத்தை மிகவும் சீக்கிரமாகவும் சுலபமாகவும் பூச்சியத்திற்கு கொண்டுவந்துவிடும். நோயாளிகளை கண்காணிக்கும் பொறுப்பிலிருக்கும் மருத்துவத் துறை வல்லுநருக்கு உதவும் வகையில் அல்லாரம் வரம்புகளை அமைக்கலாம். காண்பிக்கப்படும் வெப்பநிலை அளவுருக்களில் உயர் மற்றும் தாழ் அலாரங்கள் அமைக்கப்படலாம்.
[தொகு] வகைப்பாடு
18 அல்லது அதற்கு அதிகமான வயதையுடைய வயதுவந்தோருக்கு பின்வரும் இரத்த அழுத்த வகைப்பாடுப் பயன்படுத்தப்படுகிறது. இது 2 அல்லது அதற்கு அதிகமான அலுவலக வருகையின் போது சரியாக அளவிடப்பட்ட அமர்ந்த நிலையில் எடுக்கப்படும் இரத்த அழுத்த அளவுகளின் சராசரியை அடிப்படையாகக் கொண்டுள்ளது.[10][14]
| வகை | இதய சுருக்கியக்கம், mmHg | இதய விரிவியக்கம், mmHg |
|---|---|---|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
[தொகு] இயல்பான மதிப்புகள்
கொடுக்கப்பட்ட எந்த ஒரு முழுமைத் தொகுதியிலும் தமனிசார்ந்த அழுத்தத்தின் சராசரி மதிப்புகளை கணக்கிட முடியும், பெரும்பாலும் ஒவ்வொருவருக்கும் அதிகமான வித்தியாசங்கள் காணப்படும்; தனிப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு சமயத்திலும் தமனி சார்ந்த அழுத்தம் வேறுபட்டுக்கொண்டே இருக்கும். மேலும், கொடுக்கப்பட்ட ஒரு முழுமைத் தொகுதியின் சராசரிக்கும் அதன் பொது உடல்நலத்திற்கும் இடையே தொடர்பு இருப்பது என்பது கேள்விக்குரிய வகையில் தொடர்பு இருக்கலாம். இதனால் இந்த தொடர்பு கேள்விக்குரியதாகவே உள்ளது. எனினும் உயர் இரத்த அழுத்தத்தின் வரலாறு எதுவும் இல்லாத 100 ஆய்வுக்குட்பட்டவர்கள் கொண்ட ஆய்வில் 112/64 mmHg சராசரி இரத்த அழுத்தம் கண்டுப்பிடிக்கப்பட்டது.[15] இது இயல்பான அளவு தான்.
ஒரு நபரின் சராசரி இரத்த அழுத்தத்தையும் வேறுபாடுகளையும் பல்வேறு காரணிகள் பாதிக்கின்றன. சராசரி மதிப்புகளில் வயது மற்றும் பாலினம்[16] போன்ற காரணிகள் தாக்கம் விளைவிக்கின்றன. குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு இருக்கும் அளவைவிட குறைவான அளவாக இயல்பு அளவுகள் இருக்கும். இது உயரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.[17] வயதுவந்தோருக்கு இதய சுருக்கியக்க அழுத்தம் அதிகரிக்கும் மற்றும் இதய விரிவியக்க அழுத்தம் குறையும்.[18] முதியவர்களுக்கு இயல்பான வயதுவந்தோர் அளவை விட இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்.[19] பெரும்பாலும் தமனிகளின் வளையும் தன்மை குறைதலே இதற்கு காரணமாக இருக்கிறது. மேலும், ஒரு தனிபட்ட நபரின் இரத்த அழுத்தம் உடற்பயிற்சி, உணர்வு ரீதியான செயல்கள், தூக்கம், செரிமானம் மற்றும் நாளின் நேரத்திற்கேற்ப வேறுபடுகின்றது.
வலது மற்றும் இடது கரத்திற்கு இடையே உள்ள இரத்த அழுத்தத்தின் வித்தியாசங்கள் சீரற்று இருக்கிறது. போதுமான அளவுகள் எடுக்கப்பட்டால் சராசரி பூச்சியமாகிவிடும். எனினும், சில நோயாளிகளுக்கு 10 mmHg விட அதிகமாக தொடர்ந்து வித்தியாசங்கள் இருந்துக்கொண்டே இருக்கும். இது போன்ற நிகழ்வுகளுக்கு மேலும் ஆய்வுகள் செய்யவேண்டிய அவசியம் ஏற்படலாம். எ.கா தடை செய்யும் தமனி சார்ந்த நோய் இருப்பவர்களுக்கு ஏற்படலாம்.[20][21]
115/75 mmHg இல் ஆரம்பிக்கும் உயர் தமனி சார்ந்த அழுத்த அளவு முழுவதும் இதயகுழலிய நோயின் ஆபத்து தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கும்.[22] முந்தைய காலங்களில், அதிகமான தமனி சார்ந்த அழுத்தத்தின் உயர்நிலை அறிகுறிகளோடு கூட, பல வருகைகளில் தொடர்ந்து எடுக்கப்பட்ட அளவுகளில் நாட்பட்ட உயர் இதய சுருக்கியக்க அழுத்தம் இருந்ததானால் மட்டுமே உயர் இரத்த அழுத்தம் என்று அறுதியிடல் செய்யப்படும். UKவில் நோயாளிகளின் அளவுகள் 140/90 mmHg வரை இருந்ததானால் இயல்பானது என்று கருதப்படுகிறது.[23]
இந்த அழுத்த வரம்புகளில் குறைவான தமனி சார்ந்த அழுத்தங்கள் கொண்டுள்ளோருக்கு நீண்ட நாட்களுக்கு இதயக்குழல் ஆரோக்கியமாக இருக்கும் என்று மருத்துவ சோதனைகள் விளக்குகின்றன. மருத்துவ துறையில் இருக்கும் முக்கியமான விவாதமானது, இந்த வரம்பிற்குள் தங்களுடைய அழுத்தத்தை பராமரிக்க முடியாதவர்களுக்கு அவ்வரம்பின் அளவிற்கு அழுத்தத்தைக் குறைக்க பயன்படுத்தப்படும் தீவிரம் மற்றும் சார்புப்பெறுமானம் ஆகியவற்றை முக்கியமாகக் கருத்தில் கொள்கிறது. உயர்வு நிலைகள் பெரும்பாலும் முதியவர்கள் மத்தியில் காணப்படுகிறது. இவை அதிகமாக இயல்பானதாக கருதப்பட்டாலும் அதிகரித்த நோயுற்ற விகிதம் மற்றும் அழியும் இயல்பு ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கிறது.
[தொகு] உடலியக்கவியல்
சுற்றோட்ட அமைப்பின் இயற்பியல் மிகவும் சிக்கலானதாக இருக்கிறது. தமனி சார்ந்த அழுத்தத்தைப் பாதிக்கக்கூடிய பல உடல் ரீதியான காரணிகள் இருக்கின்றன. உணவு, உடற்பயிற்சி, நோய், மருந்துகள் அல்லது மது பானம் உளைச்சல், உடற் பருமன் மற்றும் பல போன்ற உடலியக்கவியல் ரீதியான காரணிகள் இவை ஒவ்வொன்றையும் பாதிக்கக்கூடியதாக இருக்கிறது.
சில உடல் ரீதியான காரணிகளாவன:
- இறைத்தலின் வீதம். சுற்றோட்ட அமைப்பில் இந்த விகிதத்தை இதய நடை என்று அழைப்பர். இது இதயத்தால் இரத்தம் (திரவம்) இறைக்கப்படும் வீதமாகும். இதயத்திலிருந்து வரும் இரத்த ஓட்டத்தின் கன அளவு இதய வெளியீடு என்று அழைக்கப்படுகிறது. இதய நடை (சுருங்குதலின் விகிதம்) மற்றும் தாக்க கனஅளவு (ஒவ்வொரு சுருங்குதலின் போதும் இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் இரத்தத்தின் அளவு) ஆகியவற்றின் பெருக்கல் பலனே இதய வெளியீடாகும். இதய நடை அதிகமாகும் போது தமனி சார்ந்த அழுத்தமும் அதிகமாகும். தாக்க கனஅளவில் குறைதல் இருக்காது என ஊகிக்கப்படுகிறது.
- திரவத்தின் கன அளவு அல்லது இரத்தத்தின் கன அளவு என்பது உடலில் இரத்தம் இருக்கும் அளவாகும். உடலில் இரத்தம் அதிகமாக இருந்தால் அதிகமான அளவு இரத்தம் இதயத்திற்கு திரும்பி இதய வெளியீட்டை ஏற்படுத்துகிறது. உணவில் உப்பு எடுத்துக்கொள்வதற்கும் இரத்த கன அளவு அதிகரிப்பதற்கும் இடையே சில தொடர்புகள் இருக்கின்றன. இது அதிகமான தமனி சார்ந்த அழுத்தத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இருப்பினும் இது ஒவ்வொரு தனிப்பட்ட நபர்களிலும் வேறுபடுகிறது மற்றும் தன்னாட்சி நரம்பு மண்டலம் பதில்வினைப் புரிவதையும் சிறுநீரகரெனின்-ஆஞ்சியோட்டன்சின் அமைப்பையும் அதிகமாக சார்ந்திருக்கிறது.
- எதிர்ப்பாற்றல். சுற்றோட்ட அமைப்பில் இது இரத்த குழலின் எதிர்ப்பாற்றலாகும். எதிர்ப்பாற்றல் மிகவும் அதிகமாக இருப்பதற்கு ஏற்றவாறு அதிமமான தமனி சார்ந்த அழுத்தம் இரத்த ஓட்டத்தின் எதிர்ப்பாற்றலிற்கு எதிராக இருக்கும். குழலின் ஆரம் (ஆரம் பெரியதாக இருந்தால் எதிர்ப்பாற்றல் குறைவாக இருக்கும்), குழலின் நீளம் (குழலின் நீளம் அதிகமாக இருந்தால் எதிர்ப்பாற்றலும் அதிகமாக இருக்கும்) மற்றும் இரத்தக் குழல் சுவர்களின் வழவழப்புடன் எதிர்ப்பாற்றல் தொடர்புடையதாக இருக்கிறது. தமனி சார்ந்த சுவர்களில் கொழுப்புப் படிவங்கள் சேர்வதன் காரணத்தினால் வழவழப்பு குறைகிறது. குழல்சுருக்கிகள் என்று அழைக்கப்படும் பொருள்கள் இரத்த குழல்களின் அளவை குறைக்கும். அதனால் இரத்த அழுத்தம் அதிகமாகும். குழல்விரிப்பிகள் (நைட்ரோகிளிசிரின் போன்றவைகள்) இரத்த குழல்களின் அளவை அதிகரிக்கும். இதனால் தமனி சார்ந்த அழுத்தம் குறைகிறது. எதிர்ப்பாற்றல் மற்றும் இரத்த ஓட்ட கொள்ளளவு விகிதத்துடன் (Q)அதற்கு இருக்கும் தொடர்பு மற்றும் குழலின் இரண்டு முனைகளுக்கு இடையே இருக்கும் வித்தியாசத்தை பாய்சியூலேவின் விதி விவரிக்கிறது.
- பாகுநிலை அல்லது திரவத்தின் திடத்தன்மை. இரத்தம் திடத்தன்மையாகும் போது தமனி சார்ந்த அழுத்தமும் அதிகரிக்கும். சில மருத்துவ நிலைகள் இரத்தத்தின் பாகுநிலையை மாற்றலாம். எடுத்துக்காட்டாக, குறைந்த இரத்த சிவப்பணு செறிவு, இரத்த சோகை ஆகியவை பாகுநிலையைக் குறைக்கிறது. அதிகமான இரத்த சிவப்பணு செறிவு பாகுநிலையை அதிகரிக்கிறது. பாகுநிலை இரத்த சர்க்கரை செறிவு அதிகமாகும் போதும் அதிகமாகிறது— பாகுவை (மருந்துக்கூழ்) இறைத்தலைப் போல் இருக்கும். ஆஸ்பிரின் மற்றும் "இரத்த மெலிவூட்டி" தொடர்பான மருந்துகள் இரத்தத்தின் பாகுநிலையை குறைக்கலாம் என்று யோசிக்கப்பட்டது. ஆனால் அவைகள் இரத்த உரைதலின் தன்மையையும் குறைக்கிறது என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன[24].
நடைமுறையில் ஒவ்வொரு தனிநபரின் தன்னாட்சி நரம்பு மண்டலமும் கூறப்பட்ட எல்லா காரணிகளையும் பதில்வினைப் புரிந்து சீரமைக்கிறது. மேலே உள்ள விவகாரங்கள் முக்கியமாக இருந்தாலும் நரம்பு மண்டலம் மற்றும் முனையுறுப்புகளின் கணநேரம் மற்றும் வேகம் குறைவான பதில்வினைகளின் காரணத்தினால் கொடுக்கப்பட்ட தனிநபரின் உண்மையான தமனி சார்ந்த அழுத்தம் அதிகமாக வித்தியாசப்படுகிறது. இந்த பதில்வினைகள் மாறிகளை மாற்றுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மற்றும் ஒவ்வொரு தருணமும் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
[தொகு] சராசரி (நடுமட்டம்) தமனி சார்ந்த அழுத்தம்
சராசரி தமனி சார்ந்த அழுத்தம் (MAP) என்பது இதய இயக்கச்சுற்றின் சராசரியாகும். இது இதய வெளியீடு (CO), மண்டலிய குழல்மய எதிர்ப்பாற்றல் (SVR) மற்றும் மைய சிரை அழுத்தம் (CVP)[25] ஆகியவற்றின் மூலம் தீர்மானிக்கப்படுகிறது.
பின்வரும் மதிப்புகளிலிருந்து MAP தோராயமாக தீர்மானிக்கப்படலாம், அவை: இதய சுருக்கியக்க அழுத்தத்தின் அளவீடுகள்
Psys மற்றும் இதயவிரிவியக்க அழுத்த அளவீடு
Pdias. இம்மதிப்புகள் இயல்பான அமைதிநிலையில் உள்ள இதயத் துடிப்பு வீதத்திலிருக்கும் போது பெறப்பட வேண்டும்,[25]
[தொகு] நாடியழுத்தம்
இதய வெளியீட்டின் துடிப்புத் தன்மை அதாவது இதய துடிப்பைப் பொருத்தே தமனி சார்ந்த அழுத்தத்தின் ஏற்ற இறக்க அலைவுகள் இருக்கும். இதயத்தின் தாக்க கனஅளவின் செயல்பாடு, பெருநாடியின் பெயர்ச்சி திறன் (விரிவடையும் திறன்) மற்றும் தமனி சார்ந்த கிளையமைப்பில் இரத்த ஓட்டத்திற்கு இருக்கும் எதிர்ப்பாற்றல் ஆகியவற்றின் மூலம் நாடியழுத்தம் தீர்மானிக்கப்படுகின்றது. அழுத்தத்தினால் விரிவடைவதனால் இதயத்துடிப்பின் போது இதயத்திலிருந்து வரும் இரத்த அலை எழுச்சியின் விசைகளை பெருநாடி உட்கிரகித்துக்கொள்கிறது. பெருநாடி இணக்கமாக இல்லாவிட்டால் நாடியழுத்தம் இருக்கும் அளவிலிருந்து குறையும்.[26]
அளவிடப்பட்ட இதய சுருக்கியக்கம் மற்றும் இதய விரிவியக்க அழுத்தங்களின் வித்தியாசத்திலிருந்து நாடியழுத்தம் எளிதாகக் கணக்கிடப்படுகிறது.[26]
[தொகு] குழல்மய எதிர்ப்பாற்றல்
உருப்பெருக்கம் செய்யப்படாமல் பார்க்கும் அளவில் இருக்கும் பெரிய தமனிகளுக்கு குறைவான எதிர்ப்பாற்றல் கொண்ட நீர்மக் குழாய்களுடன் (பெருந்தமனி தடிப்பு மாற்றங்கள் எதுவும் அதிகமாக இருக்காது என்று வைத்துக்கொள்ளலாம்) அதிகமான ஓட்ட விகிதமும் இருக்கும். இது அழுத்தத்தில் மிகச் சிறிய குறைவையே ஏற்படுத்துகிறது.
[தொகு] குழல்மய அழுத்த அலை
குழல்மய அழுத்த அலை (VPW) என்ற கருத்து வடிவத்தை நவீனகால உடலியக்கவியல் உருவாக்கியது. இதய சுருங்குதலின் போது இந்த அலை இதயத்தால் உருவாக்கப்படுகிறது மற்றும் ஏறுமுகமான பெருநாடியில் தொடங்குகிறது. இரத்த ஓட்டத்தை விட அதிகமான வேகத்தில் இது செயல்படுகிறது. பிறகு புற தமனிகளுக்கு குழல் சுவர்கள் மூலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கே புற நாடியாக அழுத்த அலைகள் தொட்டுணரப்படுகிறது. புற நரம்புகளாக அலை பிரதிபலிக்கும் போது மைய நோக்கு இயக்க வகையில் திரும்பவும் செல்கிறது. பிரதிபலிக்கப்பட்ட மற்றும் உண்மையான அலையின் கரடுகள் சந்திக்கும் இடத்தில் குழலினுள் இருக்கும் அழுத்தம் பெருநாடியின் உண்மையான அழுத்தத்தை விட அதிகமாக இருக்கும். பெருநாடியின் தமனி சார்ந்த அழுத்தத்தை விட கால்கள் மற்றும் கரங்களின் புற தமனிகளுக்கு உள்ளே இருக்கும் தமனி சார்ந்த அழுத்தம் ஏன் அதிகமாக இருக்கிறது என்பதை இந்த கருத்து வடிவம் விளக்குகிறது.[27][28][29] அதே போல இயல்பான கணுக்கால் புய அழுத்த உள்ளடக்க மதிப்புக்களுடன் கணுக்காலில் காணப்படும் அதிகமான அழுத்தம் கரத்துடன் ஒப்பிடப்படுகிறது என்பதை இந்த கருத்து வடிவம் விளக்குகிறது.
[தொகு] ஒழுக்கமுறைகள்
தமனி சார்ந்த அழுத்தத்தின் உட்புற ஒழுக்கமுறைகள் முழுவதுமாக புரிந்துக்கொள்ளப்படவில்லை. தற்போது, தமனி சார்ந்த அழுத்தத்தை ஒழுங்கு செய்யும் மூன்று இயக்காறுகள் நன்றாக விளக்கப்படுகிறது:
- நிர்பந்தமான அழுத்த உணர்வி: அழுத்த உணர்விகள் தமனி சார்ந்த அழுத்தத்தின் மாற்றங்களை கண்டறிந்து கடைசியாக மூளைத் தண்டின் முகுளத்திற்கு சைகையை அனுப்புகிறது. தன்னாட்சி நரம்பு மண்டலம் வழியாக செல்லும் மெடுளா, மொத்த புற எதிர்ப்பாற்றல் மற்றும் இதய சுருங்குதல்களின் விசையையும் வேகத்தையும் திருத்தியமைத்து சராசரி தமனி சார்ந்த அழுத்தத்தை சரிசெய்கிறது. மிகவும் முக்கியமான தமனி சார்ந்த அழுத்த உணர்விகள் இடது மற்றும் வலது கறோற்றிட்குடாக்களிலும் தமனி வளைவுக் குழலிலும் அமைந்துள்ளது.[30]
- சிறுநீரகரெனின்-ஆஞ்சியோட்டன்சின் அமைப்பு (RAS): தமனி சார்ந்த அழுத்தத்தின் நீண்ட காலமாக ஒத்துப்போகும் அதனுடைய தன்மைக்காகவே இந்த அமைப்பு பொதுவாக பேர்போனதாக இருக்கிறது. இந்த அமைப்பு ஆஞ்சியோட்டன்சின் II என்றழைக்கப்படும் உட்புற குழல்சுருக்கியை செயல்படுத்துவதன் மூலம் இரத்த கனஅளவு இழப்பு அல்லது தமனி சார்ந்த அழுத்தம் குறைதலை ஈடுசெய்வதற்கு சிறுநீரகத்தை அனுமதிக்கிறது.
- ஆல்டோஸ்டிரான் இயக்குநீர் வெளியிடுதல்: ஆஞ்சியோட்டன்சின் II அல்லது உயர் சீரம் பொட்டாசியம் அளவுகளுக்கு பதில்வினைப் புரியும் வகையில் சிறுநீரகமேற்பட்டையிலிருந்து இந்த ஸ்டீராய்டு ஹார்மோன் வெளியிடுகிறது. சோடியத்தை தக்கவைத்துக் கொண்டு பொட்டாசியத்தை வெளியேற்ற சிறுநீரகங்களை ஆல்டோஸ்டிரான் இயக்குநீர் தூண்டுகிறது. ஊடுகசிவு மூலமாக இரத்த குழல்களில் இருக்கும் திரவத்தின் அளவைத் தீர்மானிப்பதில் சோடியம் ஒரு முக்கிய அயனியாக இருப்பதனால் ஆல்டோஸ்டிரான் இயக்குநீர், திரவம் தக்கவைத்தலை அதிகரிக்கிறது மற்றும் மறைமுகமாக தமனி சார்ந்த அழுத்தத்தையும் அதிகரிக்கிறது.
RAS மற்றும் ஆல்டோஸ்டிரான் இயக்குநீர் வெளியீடு ஆகியவற்றிற்கு இடையே உள்ள தொடர்பு சுட்டிக்காட்டின படியே இந்த வெவ்வேறு இயக்காறுகள் ஒன்றையொன்று சார்ந்து இருக்கவேண்டிய அவசியமில்லை. தற்போது, ACE செயல்குறைப்பிகள் மற்றும் ஆஞ்சியோட்டன்சின் II ஏற்பி எதிர்மருந்துகள் ஆகியவை RAS அமைப்பை மருந்தியல் ரீதியாக இலக்காக கொண்டுள்ளது. ஆல்டோஸ்டிரான் இயக்குநீர் அமைப்பை ஆல்டோஸ்டிரான் இயக்குநீர் எதிர் மருந்தான ஸ்பைரோனோலாக்டோன் நேரடியாக இலக்காகக் கொண்டுள்ளது. திரவம் தக்கவைத்தலை நீர்ப்பெருக்கிகள் இலக்காகக் கொண்டிருக்கலாம்; இரத்த கன அளவில் இருக்கும் அதனுடைய தாக்கத்தின் காரணத்தினால் நீர்ப்பெருக்கிகளில் பரழுத்தந்தணிப்பியின் தாக்கம் இருக்கிறது. பொதுவாக நிர்பந்தமான அழுத்த உணர்வி உயர் இரத்த அழுத்தத்தில் இலக்காகப் பயன்படுத்தப்படுவதில்லை. ஏனெனில் இது தடையுற்றதானால் குற்றுநிலை அழுத்த வீழ்ச்சி மற்றும் அறிவுக்கெடுதல் ஆகியவற்றின் மூலம் நோயாளிகள் அவதிப்படுவார்கள்.
[தொகு] உடல் இயக்க நோய்க்குறி இயல்
[தொகு] உயர் தமனி சார்ந்த அழுத்தம்
- முதன்மைக் கட்டுரை: Hypertension
தமனி சார்ந்த உயர் இரத்த அழுத்தம் மற்ற சிக்கல்களுக்கு சுட்டிக்காட்டியாகவும் நீண்ட-கால எதிர் விளைவுகளைக் கொண்டதாகவும் இருக்கலாம். சிலநேரங்களில் இது கடுமையான சிக்கலாகவும் இருக்கலாம். எடுத்துக்காட்டாக அழுத்த மிகைப்பி அவசரநிலை.
தமனி சார்ந்த அழுத்தத்தின் எல்லா நிலைகளும் தமனி சார்ந்த சுவர்களில் எந்திரமுறை தகைவைக் கொடுக்கிறது. உயர் அழுத்தங்கள், இதயத்தின் வேலையை அதிகரிக்கிறது மற்றும் ஆரோக்கியமற்ற திசு வளர்ச்சியை (கூழ்மைக்கரடு) ஏற்படுத்துகிறது. இது தமனிகளின் சுவர்களுக்குள்ளேயே உருவாகிறது. அழுத்தம் உயர்வதனால் அதிகமான தகைவு ஏற்பட்டு கூழ்மைக்கரடு அதிகமாகிறது. இதனால் இதயத் தசை தடிப்படைந்து விரிவடைந்து பிறகு பலவீனமாகிறது.
பக்கவாதம், மாரடைப்புகள், இதய செயலிழப்பு மற்றும் தமனி சார்ந்த ஊறல்கள் ஆகியவற்றை ஏற்படுத்தும் ஆபத்து காரணிகளில் நீடித்த உயர் இரத்த அழுத்தமும் ஒன்றாகும். நாட்பட்ட சிறுநீரகச் செயலிழப்பிற்கும் இது முக்கிய காரணமாக இருக்கிறது. நடுநிலையான தமனி சார்ந்த உயர் அழுத்தம் கூட ஆயுள் எதிர்பார்ப்பைக் குறைக்கிறது. மிகவும் கடுமையான உயர் அழுத்தங்களில், சராசரி தமனி சார்ந்த அழுத்தங்கள் 50% அல்லது சராசரியை விட அதிமாக இருந்தால் சில வருடங்களுக்கு மேல் ஒரு நபர் உயிர் வாழ முடியாது. தகுந்த முறையில் சிகிச்சையளிப்பதன் மூலம் இதை தவிர்க்க முடியும்.[31]
முந்தைய காலங்களில் இதய விரிவியக்க அழுத்தத்திற்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுவந்தது; ஆனால் இப்போதெல்லாம் உயர் இதய சுருக்கியக்க அழுத்தம் மற்றும் உயர் நாடியழுத்தம் (இதய சுருக்கியக்கம் மற்றும் இதய விரிவியக்கம் ஆகியவற்றிற்கு இடையே உள்ள எண் வேறுபாடு) ஆகியவையும் ஆபத்துக் காரணிகளாக கருதப்படுகிறது. சில சமயங்களில், மிகுதியான இதய விரிவியக்க அழுத்தம் குறைதலினாலும் ஆபத்து அதிகரிக்கும். இது இதய சுருக்கியக்கம் மற்றும் இதய விரிவியக்க அழுத்தங்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் அதிகரிப்பதன் காரணத்தினாலும் ஏற்படலாம். (நாடியழுத்தம் கட்டுரையை காண்க).
[தொகு] தாழ் தமனி சார்ந்த அழுத்தம்
- முதன்மைக் கட்டுரை: Hypotension
இரத்த அழுத்தம் மிகவும் குறைவாக இருந்தால் தாழழுத்தம் என்றழைக்கப்படும். ஹைப்பர்டென்ஷன் என்பதன் உச்சரிப்பில் இருக்கும் ஒப்புமை குழப்பத்தை ஏற்படுத்தலாம். கிறுகிறுப்பு, மயக்க உணர்வு அல்லது சில தீவிரமான நேரங்களில் அதிர்ச்சி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தினால் மட்டுமே தாழழுத்தத்திற்கு மருத்துவ கவனிப்பு அவசியப்படும்.[14]
ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் தமனி சார்ந்த அழுத்தம் அல்லது இரத்த ஓட்டம் குறையும் போது மூளையில் வழியாக உட்செலுத்துதல் மிகவும் குறைந்துவிடும் (அதாவது குருதி வழங்கல் போதுமானதாக இருக்காது). இதனால் தலை லேசாக இருப்பது போல் உள்ள உணர்வு, கிறுகிறுப்பு, பலவீனம் அல்லது மயக்க உணர்வு ஏற்படும்.
சில நேரங்களில் நோயாளி உட்கார்ந்திருந்து விட்டு எழுந்திருக்கும் போது தமனி சார்ந்த அழுத்தம் ஒரு குறிப்பிட்ட அளவு குறையும். இது குற்றுநிலை அழுத்த வீழ்ச்சி (நிலுவைய தாழழுத்தம்) என்று அழைக்கப்படும்; இதயத்திற்கு கீழே இருக்கும் உடல் நரம்புகள் உள்ள இரத்தம், திரும்பவும் இதயத்திற்கு திரும்பும் போதும் புவி ஈர்ப்பு விசை இரத்தத்தின் விகிதத்தை குறைக்கிறது. இதனால் தாக்க கனஅளவு மற்றும் இதய வெளியீடு குறைக்கிறது.
ஒருவர் ஆரோக்கியமாக இருக்கும் போது அவருடைய இதயத்திற்கு கீழே இருக்கும் நரம்புகள் உடனடியாக அழுத்தம் தந்து புவி ஈர்ப்பு விசையை குறைத்து ஈடு செய்வதற்காக இதயத்தின் விகிதத்தை அதிகரிக்கிறது. இந்த செயல்பாட்டை தன்னாட்சி நரம்பு மண்டலம் தானாகவே செய்கிறது. இந்த அமைப்பு முழுவதுமாக சரியாவதற்கு பொதுவாக சில நொடிகள் எடுத்துக்கொள்ளும். இந்த ஈடுசெய்தல் மிகவும் மெதுவாக அல்லது போதாமல் இருந்தால் மூளைக்கு குறைவான இரத்தம் செல்லுதல், கிறுகிறுப்பு மற்றும் இருட்டடிப்பினாலும் ஒருவர் அவதிப்பட வாய்ப்பிருக்கிறது. விமான வித்தை செய்பவர்களும் போர் விமான ஓட்டிகளும் அடிக்கடி எதிர்கொள்ளும் 'இழுக்கும் Gகள்' போன்ற G-சுமை அதிகரித்தல் நிகழ்வுகள் இந்த விளைவை மிகவும் அதிகரிக்கின்றன. புவி ஈர்ப்பு விசைக்கு செங்குத்தாக உடலை திரும்பவும் வைப்பதன் மூலம் இந்த சிக்கலை அதிகமாக தவிர்க்கலாம்.
தாழ் தமனி சார்ந்த அழுத்தம் ஏற்படுவதற்கான மற்ற காரணங்களாவன:
- குருதியில் நுண்ணுயிர் நச்சேற்றம்
- இரத்தக்கசிவு - இரத்த இழப்பு
- இரத்த அழுத்த மருந்தின் நச்சு சார்ந்த மருந்தளவுகளும் நச்சுப்பொருளில் அடங்கும்.
- அடிசனின் நோய் போன்ற ஹார்மோன் ரீதியான இயல்பு மாற்றம்
அதிர்ச்சி என்பது சிக்கலான நிலையாகும். இது உறுப்பு வழி செலுத்தலை தீவிரமாகக் குறைக்கும். இரத்த கனஅளவின் இழப்பு, இதயத்திற்கு போதுமான அளவு இரத்தம் திரும்பாதவாறு நரம்புகளுக்குள்ளேயே இரத்தம் தேங்கிவிடல் மற்றும்/அல்லது குறைவான செயல்திறன் உள்ள இதய இறைத்தல் ஆகியவை வழக்கமான இயக்காறுகளாகும். தாழ் தமனி சார்ந்த அழுத்தம் குறிப்பாக தாழ் நாடுயழுத்தம் அதிர்ச்சியின் அறிகுறியாக இருக்கிறது. இது உறுப்பு வழி செலுத்துதலில் குறைதலை ஏற்படுத்துகிறது மற்றும் அதை காண்பித்து உணர்த்துவதாகவும் உள்ளது.
ஒரு கரத்திலிருந்து மற்றொன்றிற்கு அழுத்தத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு வித்தியாசம் இருந்ததானால், இது தமனியை ஒடுக்குதலை சுட்டிக்காட்டலாம். (எடுத்துக்காட்டாக அயோர்டிக் இறுக்கம், அயோர்டிக் வெட்டிச்சோதித்தல், இரத்த உறைவு அல்லது தக்கையடைப்பு).
[தொகு] மற்ற தளங்கள்
மண்டலியச் சுற்றோட்டத்தில் இரத்த அழுத்தம் தமனி சார்ந்த அழுத்தம் என்று அழைக்கப்படுகிறது. எனினும், முனைப்பு கவனிப்பு மருந்துகளில் சிரை மண்டலம் மற்றும் நுரையீரலுக்குரிய குழல்களின் அளவீடுகள் முக்கியமான பங்கை வகிக்கிறது. ஆனால் தோலினுள் உட்செலுத்தி செய்யப்படும் மைய சிரையின் வடிகுழாய் இதற்கு அவசியமாக இருக்கிறது.
[தொகு] சிரை அழுத்தம்
நரம்பு அல்லது இதயத்தின் ஊற்றறையில் (ஏட்ரியம்) சிரை அழுத்தம் குழல்மய அழுத்தமாக இருக்கிறது. பொதுவான மதிப்புக்களாக வலது ஏட்ரியத்தில் 5 mmHg ஆகவும் இடது ஏட்ரியத்தில் 8 mmHg ஆகவும் இருக்கிறது. இது தமனி சார்ந்த அழுத்தத்தை விட மிக மிக குறைவானதாக இருக்கிறது.
[தொகு] நுரையீரலுக்குரிய அழுத்தம்
பொதுவாக, நுரையீரலுக்குரிய தமனியில் உள்ள அழுத்தம் அமைதிநிலையில் இருக்கும் போது சுமார் 15 mmHg ஆக இருக்கிறது.[32]
நுரையீரலின் இரத்த நுண் குழாயில் இரத்த அழுத்தம் அதிகரிப்பதன் காரணத்தினால் நுரையீரலுக்குரிய உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. அழுத்தம் 20 mmHg விட அதிகமாக இருந்தால் உறுப்பு இடை நார்த்திசு திரவக்கோர்வையை ஏற்படுத்தும் மற்றும் அழுத்தம் 25 mmHgயை விட அதிகமாக இருந்தால் நுரையீரலுக்குரிய திரவக் கோர்வையை ஏற்படுத்தும்.[33]
[தொகு] உருப்பெற்ற கரு இரத்த அழுத்தம்
- மேலும் தகவல்களுக்கு: Fetal circulation#Blood pressure
ஒரு தாய் கருவுற்றிருக்கும் போது உருப்பெற்ற கருவின் இரத்த சுற்றோட்டத்திற்காக உருப்பெற்ற கருவின் இரத்த அழுத்தத்தை நிர்ணயிக்கிற வேலையை உருப்பெற்ற கருவின் இதயமே செய்கிறதே ஒழிய தாயின் இதயம் செய்வதில்லை.
கருவளர் காலத்தின் 20 வாரங்களில் உருப்பெற்ற கருவின் பெருநாடியில் உள்ள இரத்த அழுத்தம் தோராயமாக 30 mmHg ஆக இருக்கும் மற்றும் கருவளர் காலத்தின் 40 வாரங்களில் தோராயமாக 45 mmHg ஆக அதிகரிக்கிறது.[34]
நிறைமாத குழந்தைகளின் சராசரி இரத்த அழுத்தம்:
இதய சுருக்கியக்கம் 65-95 mm Hg
இதய விரிவியக்கம் 30-60 mm Hg [35]
[தொகு] மேலும் காண்க
- ஒரு நாளின் ஒட்டுமொத்த இரத்த அழுத்தம்
- பரழுத்தந்தணிப்பி
- மைய சிரை அழுத்தம்
- உயர் இரத்த அழுத்தம்
- தாழழுத்தம்
- கோரட்காஃப் சத்தங்கள்
- ஒலி இடவெளி
- சராசரி தமனி சார்ந்த அழுத்தம்
- ப்ரீஹைப்பர்டென்ஷன்
- நாடியழுத்தம்
- அடிப்புவீதம்
- நாடியழுத்தமானி
- மிகமுக்கியமான அறிகுறிகள்
[தொகு] குறிப்புகள்
- Pickering, TG, JE Hall, LJ Appel, et al (2005). Recommendations for Blood Pressure Measurement in Humans and Experimental Animals: Part 1: Blood Pressure Measurement in Humans: A Statement for Professionals From the Subcommittee of Professional and Public Education of the American Heart Association Council on High Blood Pressure Research. Hypertension 45 (5): 142-61. PMID 15611362 doi:10.1161/01.HYP.0000150859.47929.8e.
[தொகு] அடிக்குறிப்புகள்
[தொகு] புற இணைப்புகள்
- ஹவ் டூ ஐ கீப் மை ஹார்ட் ஹெல்தி? இதயத்தை வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்வதற்கு ஒருவருக்கு தேவையான துணுக்குகளை இந்த கட்டுரைகள் கொடுக்கின்றன.
- உயர் இரத்த அழுத்தம், பென்சில்வானியா மருத்துவ அமைப்பில் உள்ள த இன்ஸ்டியூட் ஃபார் குட் மெடிசன்
- இரத்த அழுத்த சங்கம் (UK)
- பிரிட்டிஷ் உயர் இரத்த அழுத்த அமைப்பு: உறுதிசெய்யப்பட்ட இரத்த அழுத்த கண்காணிப்பு கருவிகளின் பட்டியல்
- இரத்த அழுத்தம் கண்காணித்தல்
- நுரையீரலுக்குரிய உயர் இரத்த அழுத்தம் க்ளீவ்லாண்ட் மருத்துவகம்
- குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கு இருக்கும் அதிகமான இரத்த அழுத்தத்தை அறுதியிடல் செய்வதற்கு பயன்படுத்தப்படும் இரத்த அழுத்த கணிப்பான்
வார்ப்புரு:Cardiovascular physiology
Cite error: <ref> tags exist, but no <references/> tag was found


