இரண்டாம் சூரியவர்மன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| இரண்டாம் சூரியவர்மன் | |
|---|---|
| கம்போடிய அரசர்கள் | |
| அங்கூர் வாட்டில் சித்தரிக்கப்பட்டுள்ள இரண்டாம் சூரியவர்மனின் படம் | |
| ஆட்சிக்காலம் | 1113-1145/1150 |
| முன்னையவர் | முதலாம் தரனிந்திரவர்மன் |
| பின்னையவர் | இரண்டாம் தரனிந்திரவர்மன் |
| முழுப்பெயர் | |
| சூரியவர்மன் | |
| Posthumous name | |
| பரமவிஷ்ணுலோகா | |
| தந்தை | இக்சிந்திராதியா |
| தாய் | நரேந்திரலக்ஷ்மி |
| சமயம் | இந்து சமயம் |
கி.பி. 1113 முதல் கி.பி. 1145-1150 வரை கெமர் பேரரசை ஆண்டவர் இரண்டாம் சூரியவர்மன். இவர் கம்போடியாவிலுள்ள அங்கூர் வாட் பெருமாள் கோயிலைக் கட்டியவர். இவருடைய கட்டிட கலை, படையெடுப்புகள், சிறந்த அரசாங்கம் முதலியவற்றிற்காக இவரைக் கெமர் பேரரசின் சிறந்த அரசராக வரலாற்று ஆய்வளார்கள் கருதுகிறார்கள்.