இந்திய மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் ஆட்சிப் பகுதிகளின் துணை ஆளுநர்கள்
|
இக்கட்டுரை |
|
|
இந்திய மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் ஆட்சிப் பகுதிகளின் துணை ஆளுநர்கள் ஆளுநர்கள் இந்தியாவின் மாநிலங்களிலும் துணை ஆளுநர்கள் இந்தியாவின் ஆட்சிப்பகுதிகளிலும் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெற்று கடமையாற்றுகின்றனர். ஆளுநர்கள் மற்றும் துணை ஆளுநர்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுகின்றார்.
பொருளடக்கம் |
[தொகு] ஆளுநர்கள்
ஆளுநரின் பதவிகள் மாநில அளவில் சம்பிரதாயப் பதவிகளாகவே கருதப்படுகின்றது. ஆட்சியில் ஆளுநரோ துணை ஆளுநரோ பங்கெடுப்பதில்லை மாறாக இவை அம்மாநில முதலைமச்சர் மற்றும் அவரது அமைச்சரவையைச் சேர்ந்த அமைச்சர்களிடமே அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
[தொகு] ஆளுநரின் செயல் அதிகாரங்கள்
- ஆளுநர் மாநிலத்தில் செயலாட்சியரை நியமிப்பதற்கு மற்றும் நீக்குவதற்கு அதிகாரம் பெற்றவர்.
- ஆளுநர் மாநிலங்களில் உள்ள சட்டமன்றக் கீழவை மற்றும் மேலவைகளில் சட்டமியற்றும் அதிகாரம் கொண்டவர்.
- ஆளுநர் வரையரைக்குட்படுத்தபட்ட அதிகாரங்களின் படி மாநிலங்களில் அதிகாரங்களை செலுத்தலாம்.
- ஆளுநரின் ஊதியம் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றது.
[தொகு] துணை நிலை ஆளுநர்கள்
இந்திய அரசின் ஆட்சிப் பிரதேசங்களில் துணை நிலை ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தில்லி, அந்தமான் மற்றும் நிக்கோபார்த் தீவுகள் மற்றும் புதுவை ஆகிய பகுதிகளில் துணை நிலை ஆளுநர்கள் பதவி வகிக்கின்றனர். துணை ஆளுநர்கள் மாநில ஆளுநர்களைப் போன்ற படிநிலையைக் கொண்டவர்கள்.
[தொகு] ஆட்சிப் பொறுப்பாளர்கள்
இந்தியாவிலுள்ள ஆட்சிப் பிரதேசங்களில் தில்லி, அந்தமான் மற்றும் நிக்கோபார்த் தீவுகள் மற்றும் புதுவை தவிர பிற இடங்களில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் ஆட்சிப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகின்றார்.
|
||||||||||||||||||