2011 இந்திய ஒன்றியத்தின் வரவு செலவுத் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இந்திய நிதிநிலை அறிக்கை, 2011 இலிருந்து வழிமாற்றப்பட்டது)

2011 ம் ஆண்டிற்கான இந்திய நிதியறிக்கையானது மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியால் பெப்ரவரி 28, 2011 அன்று இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் முக்கிய அம்சங்கள்:

வரிகள்[தொகு]

  • ஆயத்தீர்வை 10 சதவிகிதமாக இருக்கும். சென்வாட் வரியில் மாற்றம் இல்லை
  • தனிநபருக்கான வருமான உச்சவரம்பு 1,60,000 ரூபாயிலிருந்து 1,80,000ம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது
  • மூத்த குடிமக்களுக்கான தகுதி வயது 65லிருந்து 60 ஆக குறைக்கப்படுகிறது. 2.50 லட்சம் வரைக்கும் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது
  • 80 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 5.00 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது
  • உள்நாட்டு நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் சர்சாரசு 7.5 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்படுகிறது
  • சுகம் என்ற புதிய வருமான வரி தாக்கல் முறை குறைந்த வருவாய் உள்ளவர்களுக்காக அறிமுகப்படுத்தப்படும்
  • மாற்று வரிகள் (Alternate Tax) 18 சதவிகிதத்திலிருந்து 18.5 சதவிகிதமாக உயர்த்தப்படும்
  • நேரடி வரி விதிப்பின் மூலம் 115 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது
  • சேவை வரி 10 சதவிகிதமாக நீடிக்கும்
  • புதிய சுங்கம் மற்றும் ஆயத்தீர்வை மூலம் 73 பில்லியன் ரூபாய் வரவாய் கிடைக்கும்
  • இரும்பு தாதுவிற்கான ஏற்றுமதி வரி 20 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது
  • 130 பொருட்டகளுக்கு ஒரு சதவிகித மத்திய ஆயத்தீர்வை புதிதாக விதிக்கப்படும். அடிப்படை உணவு, எரிபொருள், மற்றம் அலங்கார கற்கள் வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது
  • சுங்க வரியின் உச்சவரம்பு 10 சதவிகிதமாக நீடிக்கும்
  • விவசாய இயந்திரங்களுக்கான கசுடம்சு டூட்டி 5 சதவிகிதத்திலிருந்து 4.5 சதவிகிதமாக குறைக்கப்படுகிறது
  • 1000 ரூபாயக்கு மேல் வாடகை உள்ள ஆடம்பர தங்கும் விடுதிகள், குளிரூட்டப்பட்ட மதுபான நிறுவனங்கள், சில மருத்துவமனைகள், மருத்துவ கோதனை நிலையங்களுக்கு சேவை வரி விதிக்கப்படுகின்றது
  • குறைந்த கட்டண விமான பயனத்திற்கான சேவை வரி உள்நாட்டிற்கு ரூபாய் 50ம் வெளிநாட்டிற்க் ரூபாய் 200ம் அதிகரிக்கப்பட்டுள்ளது
  • இணையம் மூலம் வரி செலுத்தும் முறை வலுப்படுத்தப்படும்.
  • காட்சிப்படுத்த இறக்குமதி செய்யப்படும் கலைப்பொருட்களுக்கான சுங்க விலக்கு அரசு நிறுவனங்களுக்கு இருப்பது தனியார் நிறுவனங்களுக்கும் விரிவுப்படுத்தப்படுகின்றது.

சலுகைகள்[தொகு]

  • மாத வருமானம் பெறும் சம்பளதாரர்களுக்கு நிறுவனங்களே வரியை பிடித்தம் செய்வதால் தனியாக வரி ஆவணங்கள் தாக்கல் செய்யவேண்டியதில்லை.
  • சலுகை முன்வரைவு 2011-2012 1.44 டிரிலியன் ரூபாயாகும்
  • உணவு சலுகை முன் வரைவுக்கு 6.5.7 பில்லியன்
  • திருத்தியமைக்கப்பட்ட உணவு சலுகை முன்வரைவுக்கு 606 பில்லியன்
  • உரங்களுக்கான சலுகைகளுக்கு 500 பில்லியன்
  • திருத்தியர்க்கப்பட்ட உர மானியம் முன் வரைவுக்கு 550 பில்லியன்
  • பெட்ரோலிய பொருட்களுக்காடன மானிய முன் வரைவு 236.4 பில்லியன்
  • திருத்தியமைக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களுக்காடன மானிய முன் வரைவு 384 பில்லியன
  • இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியம் 200 பில்லியனாக இருக்கும்

வருவாய் பற்றாக்குறை[தொகு]

  • 2010-2011 ல் வருவாய் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.1 சதவிகிதமாக இருந்தது
  • 2011-2012 ல் வருவாய் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.6 சதவிகிதமாக இருக்கும்
  • 2012-2013 ல் வருவாய் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

செலவுகள்[தொகு]

  • 2011-2012 க்கான மொத்த செலவீனம் 12.58 டிரிலியன் ரூபாயாக இருக்கும்
  • திட்டமிடப்பட்ட செலவு 2011-2012ல் 4.41 டிரிலியன் ரூபாயாக இருக்கும். இது கழிந்த வருடத்தை விட 18.3 சதவிகிதம் அதிகமாகும்

வருவாய்[தொகு]

  • மொத்த வருவாய் 9.32 டிரிலியன் ரூபாய்
  • வரி தவிர இதர வருவாய் 1.25 டிரிலியன் ரூபாய்
  • நிறுவன வரி மூலம் வருவாய் 3.6 டிரிலியன்
  • 2011-2012ல் வரி மற்றும் மொத்த வருமானம் விகிதாச்சாரம் 10.4 சதவிகிதமாகும். இது 2012-2013ல் 10.8 சதவிகிதமாகம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
  • சுங்க வரி மூலம் 1.52 டிரிலியன்
  • தொழிற்சாலை நுழைவு வரி 1.64 சதவிகிதம்
  • சேவை வரி மூலம் வருவாய் 820 பில்லியன்
  • மறைமுக வரு மூலம் வருவாய் அதிக வருவாய்் 113 பில்லியன்
  • சேவை வரி மூலம் வாபம் 40 பில்லியன் அதிக வருவாய்

வளர்ச்சி மற்றும் பணவீக்கம்[தொகு]

  • வளர்ச்சி விகிதம் 8 சதவிகிதமாக இருக்கும். 0.25 சதவிகிதம மாற்றங்களுக்குட்பட்டது
  • 2011-2012 க்கான பணவீக்கம் குறைவாக இருக்கும்் ்

தனியார்மயம்[தொகு]

  • அரசுக்கு பங்குகளை விற்பதன் மூலம் 400 பில்லியன் ரூபாய் கிடைக்கும்
  • பொது துறை வங்கிகளின் 51 சதவிகித பங்குகளை அரசே வைத்திருக்கும்

கடன்[தொகு]

  • 2010-11ல் அரசு 3.45 டிரிலியன் ரூபாய் சந்தையிலிருந்து கடன் வாங்கும்
  • 2011-12ல் அரசு 3.43 டிரிலியன் ரூபாய் சந்தையிலிருந்து கடன் வாங்கும்
  • 2011-201ல் அரசு மொத்தம் 4.17 டிரிலியன் ரூபாய் கடன் வாங்கும்
  • 201-2011ல் திருத்தியமைக்கப்பட்ட கடன் 4.77 டிரிலியன் ரூபாய்

திட்டங்கள்[தொகு]

  • உள்கட்டமைப்புக்கான கடன் அட்டைகள் உருவாக்கப்படும்
  • அன்னிய நேரடி முதலீடு தளர்த்தப்படும்
  • உணவு பாதுகாப்பு சட்ட முன் வரைவு இந்த ஆண்டு கொண்டு வரப்படும்
  • செபியில் பதிவு செய்யப்பட்ட பரசுபர நிதியில் வெளிநாட்டு முதலீடுகளும் ஏற்றுக்கொள்ளப்படும்
  • வெளிநாட்டு நிறுவனங்கள் 5 வருட இந்திய உள்கட்டமைப்பு பத்திரங்களில் முதலீடு செய்வது 20 பில்லியன் டாலராக உயர்த்தபடுகிறது
  • தனித்து இயங்கும் கடன் மேலாண்மை அலுவலகம் உருவாக்கப்படும். பொது கடன் சட்டமுன் வரைவு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்
  • காப்பீடு, ஓய்வூதிய பண மேலாண்மை, வங்கி ஆகியவற்றிற்கான முன்வரைவு அறிமுகப்படுத்தப்படும்
  • GST ஐ அரசியல் சட்டத்தில் கொண்டுவர முன்வரைவு பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும்
  • புதிய நிறுவனங்களுக்கான முன் வரைவு கொண்டுவரப்படும்

துறைவாரியான செலவீனங்கள்[தொகு]

  • பாதுகாப்பு துறைக்கு 1.64 டிரிலியன்
  • உள்கட்டமைப்புக்கான பணம் 180 பில்லியன்
  • கல்வித்துறைக்கு 520.5 பில்லியன் ரூபாய். சர்வ சக்சா அபியானுக்கு 21,000 கோடி ரூபாய்
  • மருத்துவ துறைக்கான ஒதுக்கீடு 267.6 பில்லியன்
  • மனித வள ஆற்றலை மேம்படுத்த 500 கோடி ரூபாய்
  • முர்சிதாபாத் மற்றும் மலப்புறத்திலிருக்கும் அலிகார் இசுலாம் பள்ளிக்கு 54 கோடி வீதம் வழங்கப்படும்
  • பாரத் நிர்மான் திட்டத்திற்கு 58,000 கோடு ரூபாய் ஒதுக்கப்படும்
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் சம்பளம் consumer price index உடன் இணைக்கப்படும். தற்போதைய 100 ரூபாய் உயரும்
  • பல்வேறு சமூக திட்டங்களுக்கான ஒதுக்கீடு 17 சதவிகிதம் உயர்த்தப்படும்
  • முக்கிய உள்கட்டமைப்புகளுக்கு 23 சதவிகிதம் உயர்த்தப்படுகிறது

விவசாயம்[தொகு]

  • உணவு தானியங்கள் சப்ளையில் உள்ள சிக்கல்கள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்
  • கிழக்கு பகுதிகளில் பசுமை புரட்சி ஏற்படுத்தப்படும்
  • ஒழுங்காக கட்டப்படும் விவசாய கடத்திற்கான கடன் வட்டி 3 சதவிகிதமாக குறைக்கப்படும்
  • உணவு பொருட்களை குளிர் நிலையில் பதனிடும் துறைக்கு உள்கட்டமைப்பு தகுதி வழங்கப்படும்
  • நபார்டு 30 பில்லியன் ரூபாய் வழங்கப்படும்
  • 60,000 கெக்டேர் நிலத்தில் பாமாயில் எடுக்கும பனைகளை பயிரிட 3 பில்லியன் ஒதுக்கப்படும்
  • யூரியாவிற்கான புதிய உரக் கொள்கை வகுக்கப்படும்
  • உணவு சேமிக்கும் வசதிகள் மேம்படுத்தப்படும். 15 பெரிய உணவு பூங்காக்கள் 2011-2012 ல் உருவாக்கப்படும்.
  • அரசு மற்றும் தனியார் பங்களிப்புக்கான (public-private-partnership) விதிமுறைகள் வகுக்கப்படும்
  • விவசாயிகளுக்கு தேவையான கடன் கிடைக்க தேவையானவை செய்யப்படும்
  • விவசாயிகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்க முயற்சி எடுக்கப்படும்
  • தீவன உற்பத்திக்கு தேவையான உதவிகள் செய்யப்படும்

அரசாங்க நிலை[தொகு]

  • அரசாங்கம் ஊழலுக்கு எதிராக செயல்படும். ஊழல் முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளதை அரசு உணர்ந்துள்ளது

மற்றவை[தொகு]

  • மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு மற்றும் உரங்களுக்கான சலுகைகள் அரசால் நேரடியாக பட்டுவாடா செய்யப்படும்
  • சிறீ கிருசுனா தலைமையிலான நிதி சீரமைப்பு குழுவின் அறிக்கை 24 மாதங்களில் தாக்கல் செய்யப்படும்
  • கறுப்பு பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் ஐந்து கட்டமாக எடுக்கப்படும்.
  • இந்திய ஸ்டாம் சட்டத்தை மறுபரிசீலன் செய்ய சட்ட முன் வரைவு கொண்டு வரப்படும்
  • ரூபாய் அடையாளம் உள்ள புதிய நாணயங்கள் வெளியிடப்படும்
  • பால்வாடி ஊழியர்களுக்கான சம்பளம் 1500லிருந்து 3000 ஆக உயர்த்தப்படும்
  • சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு உதவிடும் வகையில் வீட்டு கடன் உறுதியளிப்பு நிதி உருவாக்கப்படும்
  • வீட்டுக்கடனுக்கான அளவு 25 லட்சமாக உயர்த்தப்படுகின்றது

[1]

முழு நிதியறிக்கையை பதிவிறக்க[தொகு]

இந்திய நிதியமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்

மேற்கோள்கள்[தொகு]

  1. http://timesofindia.indiatimes.com/union-budget-2011/Highlights-of-Union-Budget-2011-2012/articleshow/7592642.cms