இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (Communist Party of India (Marxist)) இந்தியாவிலுள்ள ஒரு பொதுவுடமைக் அரசியல் கட்சி ஆகும். இது 1964-ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்திய சீனப் போரில் சீனாவை ஆதரிப்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுள் ஏற்பட்ட பிளவால் சீனாவை ஆதரிப்போர் பிரிந்து சென்று இக்கட்சியை உருவாக்கினர். இடு இடது கம்யூனிஸ்ட் கட்சி என்றும் சிபிஎம் என்றும் அழைக்கப்படுகிறது.
இக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத். இது இடது முன்னணியின் ஒரு அங்கமாகும். இக்கட்சியின் தலைமையிலான இடது சாரிக் கூட்டணிகள் மேற்கு வங்காளம், கேரளா ஆகிய மாநிலங்களில் ஆட்சி புரிகின்றன. இது மக்களின் ஜனநாயம (People’s Democracy) என்ற இதழை வெளியிடுகிறது. அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு Democratic Youth Federation of India ஆகும். 2009 மக்களவைத் தேர்தலில் இக்கட்சி 16 இடங்களை வென்றது.
[தொகு] வெளி இணைப்புகள்
- அ
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)