இந்தியா கேட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
India Gate, STEP JSSATE
Flag of India.svg India
IndiaGate.jpg
India Gate
Indian soldiers who died
in World War I and the Afghan Wars
நிறுவப்பட்டது 1921
திறப்பு 1931
அமைவிடம் 28°36′46.31″N 77°13′45.5″E / 28.6128639, 77.229306 Delhi, India
வடிவமைப்பு Edwin Lutyens

இந்தியா கேட் (இந்தி: इंडिया गेट) இந்தியாவின் தேசிய நினைவுச்சின்னம். அது இந்தியாவில் இருக்கும் மிகப் பெரிய போர் நினைவுச் சின்னங்களில் ஒன்று. புது தில்லியின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் இந்தியா கேட் சர் எட்வின் லுடியென்ஸ் அவர்களால் வடிவமைக்கப்பட்டது. முதலில் அனைத்திந்திய போர் நினைவுச்சின்னம் என்றழைக்கப்பட்ட அது, தில்லியின் முக்கியமான நிலப்பகுதியாக இருக்கிறது, முந்தைய பிரிட்டிஷ் இந்தியப் படையில் இந்திய சாம்ராஜ்யத்திற்காகப் போரிட்டு அல்லது மிகச் சரியாகச் சொல்லவேண்டுமென்றால் இந்தியாவில் பிரிட்டிஷாரின் சாம்ராஜ்யமான பிரிட்டிஷ் அரசுக்காக முதல் உலகப் போர் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் தங்கள் உயிரை நீத்த 90,000 வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டது.

முதலில் கிங் ஜார்ஜ் V இன் சிலை, இப்போது இண்டியா கேட்டுக்கு எதிரில் வெறுமையாக இருக்கும் விதானத்தின் கீழ் நின்றிருந்தது, அது மற்ற சிலைகளுடன் கோரோனேஷன் பூங்காவிற்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்தியா சுதந்திரமடைந்ததைத் தொடர்ந்து, இண்டியா கேட் இந்தியப் படையின் அறியப்படாத வீரரின் நினைவு இடமாக ஆனது, அது அமர் ஜவான் ஜோதி (இறப்பற்ற வீரர்) என்று அறியப்படுகிறது.

பொருளடக்கம்

விதானம் [தொகு]

கேட்டுக்கு நேர் பின்னால் ஒரு வெறுமையான விதானம் இருக்கிறது, 18 ஆம் நூற்றாண்டு மாமல்லபுர கூடாரத்தால் தூண்டப்பட்டு, இதுவும் கூட லுடியென்ஸ்ஸால் வடிவமைக்கப்பட்டது, 1947 ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடையும் வரையில் கிங் ஜார்ஜ் V இன் சிலையைக் கொண்டிருந்தது, அது இப்போது தில்லி, கோரோனேஷன் பூங்காவில் நிற்கிறது. பரம் வீர் சக்ரா துணிகர விருதுகளை வென்றவர்களின் பெயர்களும் கூட இண்டியா கேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.[சான்று தேவை]

அமர் ஜவான் ஜோதி [தொகு]

அமர் ஜவான் ஜோதி கோவில்.

1971 ஆம் ஆண்டு முதல் இண்டியா கேட்டின் வளைவின் கீழிருக்கும் கோயிலில் எரிந்துகொண்டிருப்பது அமர் ஜவான் ஜோதி (இறப்பற்ற வீரரின் சுடரொளி), இது அறியப்படாத வீரரின் கல்லறையைக் குறிக்கிறது. கோவிலே கருப்பு பளிங்கு நினைவுச் சின்னம் தான், துப்பாக்கிக் குழலின் மீது ஒரு துப்பாக்கியும் அதன் சிகரத்தில் ஒரு வீரரின் தலைக்கவசமும் இருக்கும். நினைவுச் சின்னத்தின் ஒவ்வொரு முகப்பிலும் தங்கத்தில் "அமர் ஜவான்" (இறப்பற்ற வீரர்) என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளன.

இந்த நினைவுச்சின்னமே ஒரு பெரிய கம்பீரமான கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ளது, அதன் நான்கு மூலையிலும் நான்கு தீப்பந்தங்கள் இருக்கின்றன, அவை என்றும் அணையாதவண்ணம் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது. 1971 ஆம் ஆண்டின் இந்திய-பாகிஸ்தான் போரைத் தொடர்ந்து அன்றைய பிரதமரான இந்திரா காந்தி அவர்களால் ஜனவரி 26, 1972 அன்று திறந்துவைக்கப்பட்டது.

இன்று குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் வருகைபுரியும் நாட்டின் சிறப்பு விருந்தினர்கள், நாட்டின் சிறப்பு தினங்களில் அந்த இடத்தில் மரியாதை செலுத்துவது ஒரு வழக்கமாகிவிட்டது, மேலும் ஒவ்வொரு ஜனவரி 26, குடியரசு தினத்தன்று, ராஜ்பாத்தின் ஆண்டு அணிவகுப்பில் இணைந்துகொள்வதற்கு முன்னர் பிரதமர் முப்படைத் தலைவர்களுடன் வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறார்.

தலம் [தொகு]

42-மீட்டர் உயர இந்தியா கேட், பல முக்கிய சாலைகள் அவ்விடத்திலிருந்து பிரிந்து செல்லும் வகையில் அமைந்துள்ளது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக சாலைகள் பொதுமக்களுக்கு மூடப்பட்டது வரை இந்தியா கேட்டைச் சுற்றிச் செல்லக்கூடிய போக்குவரத்து தொடர்ந்துகொண்டே இருந்தது.

மாலை வேளைகளில், இந்தியா கேட் விளக்குகளால் ஒளியேற்றப்பட்டவுடன், ராஜ்பாத்தைச் சுற்றிய புல்வெளிகள் மக்களால் சூழப்படுகிறது.

காட்சிக்கூடம் [தொகு]

மேலும் பார்க்க [தொகு]

  • கேட்வே ஆஃப் இண்டியா

வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியா_கேட்&oldid=1355022" இருந்து மீள்விக்கப்பட்டது