2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இந்தியப் பெருங்கடல் பேரலை, 2004 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| தாய்லாந்தில் ஆழிப்பேரலை தாக்குகிறது. | |
| தேதி | டிசம்பர் 26, 2004 |
|---|---|
| நிலநடுக்கத்தின் எண்ணளவு | 9.3 Mw |
| ஆழம் | 30 கிமீ (19 மைல்) |
| நிலநடுக்க மையம் | |
| வகை | ஆழ்கடல் நிலநடுக்கம் |
| பாதிக்கப்பட்ட நாடுகளும் பகுதிகளும் | இந்தோனீசியா (முக்கியமாக ஆச்சே) இலங்கை இந்தியா (முக்கியமாக தமிழ்நாடு) தாய்லாந்து |
| ஆழிப்பேரலை | ஆம் |
| உயிர்ச்சேதம் | 229,866[1] |
2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் டிசம்பர் 2004ல் சுமாத்திரா தீவின் வடமேற்கு கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 150 கிமீ தூரத்தில் ஆழ்கடலில் நிகழ்ந்த நிலநடுக்கம் ஆகும். 9.3 புள்ளிகள் ரிக்டர் அளவில் வாய்ந்த நிலநடுக்கம் வரலாற்றில் நிலநடுக்கப் பதிவுக் கருவியில் ரிக்டர் அளவு எடுத்த நிலநடுக்கங்களில் இரண்டாம் மிக வலிமையாக நிலநடுக்கம் ஆகும்.
இந்த நிலநடுக்கம் காரணமாக எழுந்த ஆழிப்பேரலை தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இலங்கை, இந்தியா, மாலைதீவுகள் ஆகிய நாடுகளை தாக்கியதுடன் 225,000 பேர் உயிரிழந்தனர்.
நிலநடுக்க பண்புகள் [தொகு]
00:58:53 நேரம் டிசம்பர் 26, 2004 அன்று இந்தியப் பெருங்கடலில் சுமாரா தீவுக்கு மேற்கே, மேற்குக்கரையோரத்தில் 30 கிமீ ஆழத்தில் பெரிய நிலநடுக்கம் நிகழ்ந்தது. இது 9.3 ரிக்டர் அளவாக இருந்தது.
மேற்கோள்கள் [தொகு]
