இதய-நுரையீரல் செயல் தூண்டல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இதயத்துடிப்பு நின்றுவிட்ட ஒருவருக்கு உடனடியாக மார்புப் பகுதியில் இதயத்திற்கு மேல் அழுத்திப் பிசைந்து, வாயின் மேல் வாய் வைத்துச் சுவாசத் தூண்டல் செய்வதை இதய நுரையீரல் செயல் தூண்டல் (Artificial respiration) என்கிறோம். மூன்று, நான்கு நிமிடங்களுக்கு மேல் மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத் தடை ஏற்பட்டால் மூளையில் நிலையான பாதிப்புகள் ஏற்படும். எனவே, மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தினை விரைவில் நடைபெறச் செய்தல் தேவை.