இசைத்தமிழ்க் கலம்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இசைத் தமிழ்க் கலம்பகம் என்பது 1966ல் தேவநேயப்பாவாணரால் வெளியிடப்பட்ட 303 இசைப்பாடல்களைக் கொண்ட நூலாகும். குறியீட்டு விளக்கம், பாட்டுறுப்புப் பெயர்கள், தாளப் பெயர்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

பாட்டு உறுப்புக்கள்[தொகு]

  1. பல்லவி என்பதை தமிழ்ச் சொல்லாகவே கொள்கிறார் பாவாணர்.
  2. துணைப்பல்லவி
  3. சரணம் என்பதை உருவடி (உரு- பாட்டு, அடி- சரணத்தின் நேரடி மொழிபெயர்ப்பு)என்றும்,
  4. தொகையரா எனும் உருதுச் சொல்லை, உரைப்பாட்டு என்றும் மொழிபெயர்த்துள்ளார்.

தாளம்[தொகு]

தாளம் என்பது ஆடலின் போது காலால் தட்டுவதையும்(தாள்-பாதம்), பாணி என்பது பாடுவோர் கையால் தட்டலையும் குறிக்கும். (பண்-பாணி=கை)[1] அறுவகை தாளங்களையும் பின்வருமாறு மொழிபெயர்க்கிறார்.

  • ஏகம் - ஒற்றை
  • ஆதி - முன்னை
  • ரூபகம் - ஈரொற்று
  • சம்பை - மூவொற்று
  • திரிபுடை- மூப்புடை
  • சாப்பு - இணையொற்று

சில கலம்பகக் கீற்றுகள்[தொகு]

''அன்றிருந்ததும் அயன்மொழி
இன்று வந்ததும் அயன்மொழி
என்றுதான் இங்குத் தமிழ்மொழி
ஏத்துநாட்டினை வாழ்த்து மொழி'' (150)

என மொழி விடுதலை இன்மையை எளிமையாய்ச் சிந்திக்க வைக்கிறார்.

''எளிதாகப் பேசுமொழி தமிழ்பாப்பா-மூச்
சிழுக்கும் வல்லொலி யதில் இல்லை பாப்பா
பேசு பாப்பா - தமிழ் பேசுபாப்பா'' (251)

என மழலைகளுக்கு மொழிகிறார்.

'' எல்லோரும் இன்பமுறவே இறைவனருளால் மங்களம்''
''பொல்லாப் பகையும் பசியும் பிணியும்
இல்லாமல் எங்கும் நன்கணம்'' (303)

என இசைத்தமிழ் கலம்பகத்தை இனிக்க முடிக்கிறார்.

மேற்கோள்கள்[தொகு]

<references>

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

  1. இசைத்தமிழ்க் கலம்பகம், பகுதி: குறியீட்டு விளக்கம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசைத்தமிழ்க்_கலம்பகம்&oldid=1886499" இலிருந்து மீள்விக்கப்பட்டது