ஆறு ஏனாக்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆறு ஏனாக்கள் என்பது ஊடகத்துறையில் அல்லது காவல்துறையில் ஒரு செய்தியை அல்லது விடயத்தை ஆய்வு செய்யும் அடிப்படை முறையாகும். இவை ஒரு விடயம் தொடர்பான முழுத் தகவல்களையும் பெறுவதற்கான கேள்விகளைக் குறிக்கின்றன.
- என்ன? என்ன நடந்தது?
- எவர்/யார்? எவர் செய்தது?
- எங்கே? எங்கே நடந்தது?
- எப்பொழுது? எப்பொழுது நடந்தது?
- ஏன்? ஏன் இது நடந்தது?
- எப்படி? எப்படி நடந்தது?