ஆரியபட்டா (செயற்கைக்கோள்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆரியபட்டா (செய்மதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
- இக்கட்டுரை இந்தியாவின் முதலாவது செயற்கைக்கோ பற்றியது. இதே பெயருடைய வானியலாளர் பற்றி அறிய ஆரியபட்டா கட்டுரையைப் பார்க்க.
| இயக்குபவர் | இஸ்ரோ |
|---|---|
| திட்ட வகை | வானியற்பியல் |
| Satellite of | பூமி |
| ஏவப்பட்ட நாள் | ஏப்ரல் 19, 1975 |
| ஏவிய விறிசு | கொஸ்மொஸ்-3எம் |
| தே.வி.அ.த.மை எண் | 1975-033A |
| நிறை | 360.0 கிகி |
| திறன் | 46 W |
| Orbital elements | |
| வான்வெளி கோளப்பாதை | Low Earth orbit |
| சாய்வு | 50.7º |
| சேய்மைநிலை | 619 கிலோமீட்டர் (385 மை) |
| அண்மைநிலை | 563 கிலோமீட்டர் (350 மை) |
| சுற்றுக்காலம் | 96 நிமிடங்கள் |
ஆரியபட்டா (Aryabhata) என்பது இந்தியாவின் முதலாவது செயற்கைக்கோள் ஆகும். இப்பெயர் புகழ்பெற்ற இந்திய வானியலாளரான ஆரியபட்டா என்பவரின் நினைவாக இச்செய்மதிக்கு சூட்டப்பட்டது. இச்செயற்கைக்கோள் சோவியத் ஒன்றியத்தால் 1975, ஏப்ரல் 19 இல் கப்புஸ்டீன் யார் என்ற இடத்தில் இருந்து கொஸ்மொஸ்-3எம் என்ற ஏவுகலன் மூலம் செலுத்தப்பட்டது. ஆரியபட்டா இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தினால் வானியல் ஆய்வுகளை மேற்கொள்ளுவதற்காக அமைக்கப்பட்டது. பூமியின் காற்று மண்டலத்தில் இது பெப்ரவரி 11, 1992 இல் மீளவும் வந்தது.