அ. சங்கரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அ. சங்கரன் (பிறப்பு: மார்ச்சு 30 1947) மலேசியா தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். எழுத்துத்துறையில் அன்பு சங்கரன், மலாக்கா சங்கரன், சாரங்கன் போன்ற புனைப்பெயர்களால் அறியப்பட்ட இவர், மலாக்கா மாநிலத் தமிழ்ப் பள்ளிகளின் அமைப்பாளராகச் செயற்பட்டு வருகின்றார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1966 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகின்றார். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், திறனாய்வுகள், கவிதைகள் முதலியவற்றை இவர் அதிகமாக எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.

பரிசில்களும், விருதுகளும்[தொகு]

தமிழர் திருநாள் மேடைகளில் இவரின் கதைகளும். கவிதைகளும் பரிசுகள் பெற்றுள்ளன.

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._சங்கரன்&oldid=3923209" இலிருந்து மீள்விக்கப்பட்டது