அ. கந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அ. கந்தன் (பி. 1937) மலேசியாவின் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியரும் ஆவார்.

இலக்கியத்துறை[தொகு]

1960ஆம் ஆண்டு முதல் சிறுகதைகள், நாடகங்கள், குறுநாவல் போன்ற தமிழ்ப் படைப்பிலக்கியங்களையும், கட்டுரைகளையும் படைத்துவரும் இவரின் ஆக்கங்கள் மலேசிய தேசிய தினசரிகளிலும், வார இதழ்களிலும் மற்றும் மலேசியா சிற்றிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

புனைப்பெயர்கள்[தொகு]

இவர் 'தமிழ் மகன்', 'வள்ளுவதாசன்' ஆகிய புனைப்பெயர்களால் தமிழ் இலக்கியம் படைத்து வருகின்றார்.

எழுதியுள்ள நூல்கள்[தொகு]

  • அன்புள்ள தம்பி தமிழரசுக்கு
  • மலேசியாவில் தமிழ்ப் பள்ளியும் தமிழ்க் கல்வியும்
  • ஒரு தொண்டனின் பயணம் தொடர்கிறது
  • அன்புக்கு நான் அடிமை
  • குறளமுதம்
  • ஒரு சிறந்த தலைவர்
  • முத்தமிழும் முக்கனியும்
  • உன்னால் முடியும் தம்பி
  • இளந்தமிழா விழித்திடு
  • மாணவன் மணிவண்ணன்

விருதுகளும், பரிசுகளும்[தொகு]

  • தமிழ்த் தொண்டன் (1974)
  • மக்கள் எழுத்தாளர் (1997)
  • மலேசிய அரசாங்கத்தின் பிபிஎன் விருது (1980)

மேலும், பல மலேசியா நிறுவனங்களினால் விருதுகளும், பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._கந்தன்&oldid=3230608" இலிருந்து மீள்விக்கப்பட்டது