அலைந்துசூழ்வியல்
அலைந்துசுழல் மக்களை (diaspora people), அலைந்துழல்வு (diaspora) காரணிகளை, வாழ்வியலை, வாழ்வியல் பிரச்சினைகளை ஆயும் இயலை அலைந்துசூழ்வியல் (diaspora studies) எனலாம்.
அலைந்துழல்வு என்பது ஒரு தேசிய இன மக்கள் உலகின் பல பாகங்களுக்கும் சிதறுதலை குறிக்கின்றது.
அலைந்துசுழல் மக்கள் அலைந்துழல்வுக்கு உட்பட்ட மக்களை குறித்து நிற்கின்றது.
அலைந்துசுழல்வின் கோட்பாட்டியல் (diaspoara theory) அலைந்துசுழல்வை விளங்கிகொள்வதற்குரிய சமூக விஞ்ஞான கோட்ட்பாட்டை உருவாக்க, விபரிக்க முனைகின்றது.
இவற்றையும் பார்க்க [தொகு]
"அலைந்துழல்வு" என்ற சொல் தமிழ் இலக்கண விதிகளுக்கு பலவழிகளில் முரணானது.
தொல்காப்பியம் சிறந்த தமிழ் இலக்கண வழிகாட்டி என நான் நம்புகின்றேன் ,
உதாரணமாக அதில் உள்ள மொழி இறுதி எழுத்துக்கள் தொடர்பான ஏழாவது அத்தியாயத்தில்
உ கரத்துடனும் , ஊ காரத்துடனும் இணைந்து வகரம் , நகரம் மொழி இறுதியாக மாட்டாது என்ற விதியுண்டு.
அந்த பாயிரத்தை அப்படியே தருகின்றேன் , இது மொழி இறுதி எழுத்து தொடர்பான அடிப்படை விதி எல்லாமாக 14 விதிகள் உண்டு . " உ , ஊ காரம் நவவோடு நவிலா"
அனைத்து எழுத்தாளர்களுக்கும் புதிய சொற்களின் அறிமுகம் அவசியமான ஒன்று , அதில் சேரன் போல் அனைவரும் முயலவேண்டும் ஆனால் அதற்கு முன் ஆகக்குறைந்தது அடிப்படை இலக்கண விதிகளை அறிந்துகொள்ளல் வேண்டும் அல்லது முயலவேண்டும்.
தன்னிச்சையாக சொற்களை அறிமுகம் செய்தல் , " உள்ளதை அழித்து .....ஒண்டுமில்லாமல் பண்ணும் .....சில செயல் பாடுகள் போன்றது " .
இங்கு தேவைகருதி இறுதி எழுத்து தொடர்பான அந்த 14 தொல்காப்பிய இலக்கண விதிகளையும் பதிவு செய்கின்றேன்.
- உயிர் ஔ எஞ்சிய இறுதி யாகும்
- கவவோ டியையின் ஔவு மாகும்.
- எ என வருமுயிர் மெய்யீ றாகாது
- ஒவ்வும் அற்றே நவ்வலங் கடையே
- ஏ ஓ எனுமுயிர் ஞகாரத் தில்லை
- உ ஊ கரம் நவவோடு நவிலா
- உச்ச காரம் இரு மொழிக்கு உரித்தே
- உப்ப காரம் ஒன்றென மொழிப
இருவயின் நிலையும் பொருட்டா கும்மே
- எஞ்சிய வெல்லாம் எஞ்சுதல் இலவே
- ஞண நம னயரல வழள வென்னும்
அப்பதி னொன்றே புள்ளி யிறுதி
- உச்ச காரமோடு நாகாரஞ் சிவணும்
- உப்பகரமோடு ஞர் காரையும் அற்றே
அப்பொருள் இரட்டா திவனை யான
- வகரக் கிழவி நான் மொழி ஈற்றது
- மகரத் தொடர் மொழி மயங்குதல் வரைந்த
னகரத் தொடர்மொழி ஒன்தக்க்தேன்ப புகறக் அக்றிணை கிளந்த அக்றிணை மென
புதிய சொற்களை அறிமுகம் செய்ய முனைவோர் உடனடியாக ஆகக் குறைந்தது தொல்காப்பியம் படிக்க வேண்டும் , கையில் வைத்திருக்க வேண்டும். ஆங்கில அகாரதி எலோரிடமும் உண்டு ... தமிழ் இலக்கணத்தின் உயிர் தொல்காப்பியம் உண்டா என்றால் இல்லை என்பதே பதில்........