அலைக்கற்றை எஸ். பாண்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எசு. அலைப்பட்டை (S-Band) என்பது 2 முதல் 4 கிகா எர்ட்சு அலைவெண் வரை உள்ள கதிர்நிரல் பகுதியைக் குறிப்பதாகும். இது அலைபேசி தொலைத்தொடர்புக்கும், வீவாணி இயக்கத்துக்கும், தரைவழி தொலைத்தொடர்புக்கும் பயன்படுகிறது. இதில் 2.6 கிகா எர்ட்சு (2500-2690 கிகா எர்ட்சு) என்றழைக்கப்படும் அலைநீளம் பன்ன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியத்தால் 2000ம் ஆண்டு தரைவழி அலைப்பேசி பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.[1]

இந்திய எசு அலைப்பட்டை விவாதம்[தொகு]

2011 பிப்ரவரியில் இந்திய விண்வெளித்துறையின் வணிகக் கிளையான ஆந்திரிக்சு கழகம் இதன் ஒரு பகுதி 70 மெகா எர்ட்சு அளவிற்கு தேவாசு மல்டிமீடியா, பெங்களூரு என்ற நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு 2,00,000ம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.[2][3] தற்போது இந்த ஒப்பந்தத்தைப் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு நீக்க முடிவு செய்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.thehindu.com/opinion/editorial/article1200374.ece
  2. "இஸ்ரோ செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 2 லட்சம் கோடி ஊழல்!!". Archived from the original on 2011-02-09. பார்க்கப்பட்ட நாள் 2011-02-10.
  3. http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=374046&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலைக்கற்றை_எஸ்._பாண்ட்&oldid=3789016" இலிருந்து மீள்விக்கப்பட்டது