அமெரிக்கப் புரட்சி
அமெரிக்கப் புரட்சி 18ஆம் நூற்றாண்டில் பதின்மூன்று குடியேற்ற நாடுகள் பிரித்தானிய அரசுக்கு எதிராக நடத்திய போராட்டங்களைக் குறிக்கும்.
1763இல் பிரெஞ்சு செவ்விந்தியர் போர் முடிந்தபின் ஐக்கிய இராச்சியம் குடியேற்ற நாடுகளுக்கு வரிகளை அதிகரித்ததன் காரணமாக புரட்சிக் காலம் தொடங்கியுள்ளது. 1770இல் பாஸ்டன் படுகொலையில் புரட்சியின் முதல் வன்முறை நிகழ்வு நடந்தது. 1775 முதல் 1783 வரை ஐக்கிய இராச்சியத்துக்கும் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளுக்கும் இடையில் நிகழ்ந்த போருக்குப் பின்னர் ஐக்கிய அமெரிக்காவுக்கு விடுதலை பெற்றது. இப்போரில் அமெரிக்காவுக்கு பிரான்ஸ், ஸ்பெயின், மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் உதவின. 1776இல் அமெரிக்க விடுதலைச் சாற்றுரை வெளியிடப்பட்டது. 1781இல் அமெரிக்கப் படையினர் போரில் வெற்றி பெற்றனர்.
அமெரிக்கப் புரட்சி காலத்தில் தொடங்கிய பல விழுமியங்கள் அமெரிக்கச் சமூகத்தில் இன்று வரை அமெரிக்க அரசியலில் தாக்கம் செய்கின்றன.