அமுரி மருத்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமுரி மருத்துவம் எனப்படுவது தன்னுடைய சிறுநீரையே வாய் அல்லது மூக்கு வழியாக உட்கொள்ளுதல் அல்லது வெளித்தோலில் தேய்த்தல் அல்லது இவ்விரண்டும் அடங்கும். மருத்துவப் பயன்களின் போது சிறுநீரானது அமுரி என்று அழைக்கப்படுகிறது.சித்த மற்றும் ஆயுர்வேத நூல்களில் அமுரி அல்லது சிறுநீரை "சிவநீர்" எனவும் குறிக்கப்பட்டுள்ளது.

திருமந்திரம் மூன்றாம் தந்திரத்தில் அமுரி தாரனை என்னும் தலைப்பில் 6 பாடல்கள் உள்ளன. [1] இதனை அந்த நூல் வீரமருந்து, விண்ணோர் மருந்து, நாரி மருந்து என்றெல்லாம் சிவன் கூறுவதாகவும், உண்மையில் ஆதி மருந்து என்று எண்ண வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது. [2] இதில் கூறப்படும் அமுரி மிளகு, மஞ்சள், நெல்லி, வேம்பு ஆகியவற்றின் சாறு போன்ற நீர் மருந்துகளாக உள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.satori-5.co.uk/word_articles/alt_health/healing_with_urine_therapy.html பரணிடப்பட்டது 2008-08-20 at the வந்தவழி இயந்திரம்
  2. http://naturinologie.info/shivambu.pdf பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்.
  3. http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=10&Song_idField=10320&padhi=%20&startLimit=2&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

மேற்கோள்[தொகு]

  1. திருமூலர் இயற்றிய திருமந்திரம், திருப்பனந்தாள், காசி மடம் பதிப்பு, 2003, மூன்றாம் தந்திரம்,
  2.  வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்
    நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான்
    ஆதி மருந்தென் றறிவார் அகலிடஞ்
    சோதி மருந்திது சொல்லவொண் ணாதே - பாடல் எண் 850


"https://ta.wikipedia.org/w/index.php?title=அமுரி_மருத்துவம்&oldid=3323423" இலிருந்து மீள்விக்கப்பட்டது