அமர்னா நிருபங்கள்
அமர்னா நிருபங்கள், என்பது எகிப்தின் ஆடிசியாளர்களுக்கும் கானான் மற்றும் அனுர்ருவில் இருந்த பிரதிந்திகளுக்குமிடையான தொடர்பாடல்களின் தொகுப்பாகும். இவை அமர்னா என்ற எகிப்து நகரத்தில் கண்டுபிடிக்கப் பட்டது, இது பண்டைய எகிப்து இராச்சியத்தில், கிமு.1369-1353 காலப்பகுதியில், புதிய இராச்சியம் என அழைக்கப்பட்ட இராச்சியத்தின் தலைநகருக்கு இன்று வழங்கும் பெயராகும். எகிப்த்தியல் ஆய்வுகளுக்கு இக்கடிதங்கள் வழக்கமானதல்ல. ஏனெனில் இது அக்காத் மொழியில் எழுதப்பட்டுமையாகும். தற்போது மொத்தம் 382 களிமண் பலகைகள் கண்டெடுக்கப்ப்ட்டுள்ளன.
பொருளடக்கம் |
கடிதங்கள் [தொகு]
இக்கடிதங்கல் cuneiform எழுத்துகளில் அக்காத் மொழியில் எழுதப்பட்டுள்ளது, இது அக்காலத்தின் அரசியல் மொழியாகும். முதன் முதலாக அப்பிரதேச எகிப்தியர்களால் 1887 அளவில் கண்டுப் பிடிக்கப்பட்டது. இவை இரகசியமாக அகழ்ந்தெடுக்கப்பட்டு தொல்பொருள் சந்தைகளில் விற்கப்பட்டது. வில்லியம் பிலிண்டெர்ச் பிட்ரி என்ற தொலபொருள் ஆய்வாளரே இப்பகுதியில் ஆய்வுகளை நடத்திய முதல் ஆய்வாளராவார்,1891-92 காலப்பகுதியில் அவர் 21 பலகைகளை கண்டெடுத்தார். எமில் சேசியண்ட் என்ற ஆய்வாளர் 1903இல் மேலும் 24 பலகைகளை கண்டெடுத்தார். இன்று இவை எகிப்திலின் வேறு பல நாடுகளிலும் தொல்பொருள் காட்சியகங்களில் காடிசிக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஆரம்பத்தில் அப்பிரதேச மக்களால் கண்டெடுக்கப்பட்ட பலகைகள் பல்வேறு இடங்கைல் சிதறி கிடக்கிறது. 202 அல்லது 203 பேர்லினிலும்,4950 எகிப்திலும் 7 பிரான்சிலும்,3 மொஸ்கோவிலும் 1 அமெரிக்காவிலும் இருக்கின்றது.
300 கடிதங்கள் அரசியர் தொடர்பாடல் கடிதங்களாகும் ஏனையவை கல்வி சார் கடிதங்களும் பிறவுமாகும். இவை எகிப்து அக்காலத்தில் பபிலோனியா,அசிரியா, மித்தானி, அட்டி, சிறியா, பாலஸ்தீனம், சைப்பிரசு போன்றா நாடுகளுடனும் கானானில் இருந்த பிரதி நிதிகளோடு கொண்டிருந்த தொடர்புகளை நன்கு விளக்குகிறது. அக்காலப்பெகுதியின் நிகழ்வுகளை காலவோட்டத்தின் படி ஒழுங்குப் படுத்த இவை முக்கியமாகும்.
கால ஓட்டம் [தொகு]
வில்லியம் எல்.மொரான் அமர்னா கடிதங்களின் உள்ளடக்கத்தை கொண்டு ஊகித்தறிந்த காலவோட்டத்தின் நிகழ்வுகள்:
நீண்ட ஆய்வுகளின் பிறகு இன்னமும் அமர்னா கடிதங்களில் உள்ள நிகழ்வுகளின் காலவோட்டம் பல சிக்கல்களை கொண்டுள்ளது. சில நிகழ்வுகளே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. ஆதாரங்களின் படி முதாலாவது களிமண் பலகை அமென்கொதெப் மன்னன் ஆட்சி பீடமேறிய 30 வருடத்தவையாகும். கடைசி பலகை எழுதப்பட்டது துட்டன்காமுன் மன்னன் ஆட்சி பீடமேறிய முதலாவது வருடமாகும் என்பது பொதுவான கணிப்பாகும்.
உசாத்துணைகள் [தொகு]
- வில்லியம் எல்.மொரான், The Amarna Letters, Baltimore: Johns Hopkins University Press, 1992. ISBN 0-8018-4251-4
- Goren, Y., Finkelstein, I. & Na’aman, N., Inscribed in Clay - Provenance Study of the Amarna Tablets and Other Ancient Near Eastern Texts, Tel Aviv: Sonia and Marco Nadler Institute of Archaeology, Tel Aviv University, 2004. ISBN 965-266-020-5
வெளியிணைப்புகள் [தொகு]
- எல்-அமர்னா கலைக்களஞ்சியம் கடிதங்களின் சாராம்சங்கள்.
- களிமன் பலகைகள் மீதான கனிய மற்றும் இரசயனவியல் ஆராய்ச்சிகள்