அபிக்ஞான சாகுந்தலம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபிக்ஞான சாகுந்தலம் என்பது காளிதாசரால் இயற்றப்பட்ட வடமொழி நாடக நூல் ஆகும். கி. மு. 56இல் சகரர்களை விரட்டிச் சகத்தை ஏற்படுத்திய விக்கிரமாதித்த அரசனுடைய அவையில் கவியாகத் திகழ்ந்தவர் இந்தக் காளிதாசர். இந்த நாடகத்தில் ஏழு அங்கங்கள் உள்ளன. இதன் உட்பொருள் வியாச மகாபாரதத்தினின்று எடுக்கப்பட்டது. ஆயினும் சுவைக்கேற்பச் சில மாறுதல்கள் செய்யப்பட்டன.