அணுக்கரு பிளவு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அணுக்கரு பிளவு: குறைந்த வேகத்தில் செல்லும்
நியூத்திரன் ஒன்று யுரேனியம்-235 அணு ஒன்றைத் தாக்கும் போது, இரண்டு வேகம் கூடிய இலேசான தனிமங்களாகப் பிளவடைந்து, சுயாதீன நியூத்திரன்களையும்
ஆற்றலையும் வெளிவிடுகிறது. அத்துடன் சுயாதீன நியூத்திரன், யுரேனியம்-238 ஆல் ஆட்கொள்ளப்பட்டு யுரேனியம்-239 ஆக மாற்றமடைவது படத்தில் காட்டப்பட்டுள்ளது.
அணுக்கரு பிளவு (Nuclear fission) எனப்படுவது அணு ஒன்றின் கருவானது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இலேசான அணுக்கருக்களாக பிளவுறும் நிகழ்வு ஆகும். இவ்வணுக்கருப் பிளவின் போது சுயாதீனமான நியூத்திரன்களும் காம்மா வடிவத்தில் கதிரியக்க ஆற்றலும் வெளிப்படுகின்றன.
பாரமான தனிமங்களின் பிளவின் போது பிகப் பெரிய அளவில் ஆற்றல் மின்காந்த அலைகள் ஆகவும் இயக்க ஆற்றலாகவும் வெளிப்படுகின்றன.
1939 ஆம் ஆண்டில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஹான் மெயிட்னர் மற்றும் ஸ்ட்ராஸ்மன் ஆகியோர் அணுக்கரு வினைகளை ஆராயும் பொழூது யுரேனியம் நியூத்திரன்களால் தாக்கப்படும் பொழுது அது பேரியம், கிரிப்டான் ஆகிய அணுக்கருக்களாகப் பிளவுறுவதை அவதானித்தனர். 200 MeV அளவு ஆற்றல் வெளிவிடப்பட்டதையும் அவர்கள் கண்டறிந்தனர்.
[தொகு] வெளி இணைப்புகள்