5 ஏன்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

5 ஏன்கள் (5 Whys) என்பது கேள்வி-பதில் மூலம் ஒரு சிக்கலின் மூலக் காரணத்தை அல்லது காரண காரிய உறவை அறிந்து கொள்வதற்கு பயன்படும் ஒரு எளிய வழிமுறையாகும்.[1] ஒரு சிக்கலின் காரணத்தைப் பற்றி ஐந்து தொடர்ச்சியான கேள்விகளை கேட்பதே இந்த முறை. ஏன், ஏன் என்று தொடர்ச்சியாக கேட்பதன் மூலம் பிரச்சினையின் மூலத்தை கண்டறிய இந்த முறை உதவும்.

உதாரணம்[தொகு]

  • வாகனம் ஓடாது (சிக்கல் அல்லது பிரச்சனை)
  1. ஏன்? - மின்னகலம் இயக்கமற்றுள்ளது. (முதலாவது ஏன்)
  2. ஏன்? - மாறுமின்னாக்கி இயங்கவில்லை. (இரண்டாவது ஏன்)
  3. ஏன்? - மாறுமின்னாக்கியின் பட்டி உடைந்தது. (மூன்றாவது ஏன்)
  4. ஏன்? - மாறுமின்னாக்கியின் பட்டி நல்ல பயன்பாட்டிலும் மாற்றப்படாமலும் இருக்கிறது. (நான்காவது ஏன்)
  5. ஏன்? - வாகனம் பரிந்துரைக்கப்பட்ட செப்பணிடல் கால அட்டவணையின்படி பராமரிக்கப்படவில்லை. (ஐந்தாவது ஏன், மூல காரணி)

மேலும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "Five Whys Technique". adb.org. Asian Development Bank. February 2009. பார்க்கப்பட்ட நாள் 26 March 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=5_ஏன்கள்&oldid=3002284" இலிருந்து மீள்விக்கப்பட்டது