இதரவிதர உவமையணி
இதரவிதர உவமையணி என்பது உவமையணியின் ஒரு வகையாகும். இதனை 'தடுமாறுவமை' என்றும் கூறுவர். பொருளாகக் கூறப்பட்டது சில சமயம் உவமையாகவும். உவமையானது சில சமயம் பொருளாகவும் மாறி மாறி ஒரு தொடர்ச்சியாக வருவது இதர விதரம் ஆகும். (இதரம்+ இதரம் =இதரவிதரம்- ஒன்றுக்கொண்டு என்பது பொருள்)
சான்று
- களிக்கும் கயல்போலும் நுங்கண்; நும் கண்போல்
- களிக்கும் கயலும்; கனிவாய்த் - தளிர்க்கொடியீர்!
- தாமரை போல்மலரும் நும்முகம்; நும்முகம்போல்
- தாமரையும் செவ்வி தரும்.
விளக்கம்:
கயல் போலும் நுங்கண்; நுங்கண் போல் களிக்கும் கயல் எனப் பொருளும் உவமையும் ஒன்றுக்கொன்று உவமையாய்த் தொடர்ந்து வந்தமையால் இது இதரவிதர உவுவமையாயிற்று. இதரவிதர உவமை அணியை சந்திராலோகம் என்ற இலக்கண நூல், புகழ்பொருளுவமை எனக் கூறுகிறது.
உசாத்துணை[தொகு]
தா.ம. வெள்ளைவாரணம் ,'தண்டியலங்காரம், திருப்பனந்தாள் மட வெளியீடு. 1968