ரவி சாஸ்திரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரவி சாஸ்திரி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்Ravishankar Jayadritha Shastri
பட்டப்பெயர்Ravi
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைஇடதுகை மரபுவழா சுழல்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 151)21 பெப்ரவரி 1981 எ. நியூசிலாந்து
கடைசித் தேர்வு26 டிசம்பர் 1992 எ. தென்னாப்பிரிக்கா
ஒநாப அறிமுகம் (தொப்பி 36)25 நவம்பர் 1981 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாப17 டிசம்பர் 1992 எ. தென்னாப்பிரிக்கா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1979–1993Bombay
1987–1991Glamorgan
1987MCC
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒ.ப மு.து ப.அ
ஆட்டங்கள் 80 150 245 278
ஓட்டங்கள் 3830 3108 13202 6383
மட்டையாட்ட சராசரி 35.79 29.04 44.00 31.13
100கள்/50கள் 11/12 4/18 34/66 6/38
அதியுயர் ஓட்டம் 206 109 217 138*
வீசிய பந்துகள் 15751 6613 42425 11966
வீழ்த்தல்கள் 151 129 509 254
பந்துவீச்சு சராசரி 40.96 36.04 44.00 32.18
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 1 18 5
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 3 n/a
சிறந்த பந்துவீச்சு 5/75 5/15 9/101 5/13
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
36/– 40/– 141/– 84/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், 6 செப்டம்பர் 2008

ரவிஷங்கர் ஜெயதிரிதா சாஸ்திரி ஒலிப்பு (27 மே 1962 அன்று இந்தியாவில் உள்ள பம்பாயில் பிறந்தார்) ஒரு முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர் ஆவார். அவர் ஒரு ஆல்-ரவுண்டர் ஆவார். அவர் வலதுகை பேட்டிங்கும், இடது கை சுழல் பந்தும் வீசுவார். அவரது சர்வதேசத் தொழில்வாழ்க்கையானது அவருக்கு 18 வயதிருக்கும் போது ஆரம்பித்து 12 ஆண்டுகள் வரை நீடித்திருந்தது. அவர் தனது தொழில்வாழ்க்கையை ஒரு முறைப்படியான பந்து வீச்சாளாராக ஆரம்பித்தார். ஆனால் படிப்படியாக பேட்ஸ்மேனாக அதிகத் திறமையுடனும் பந்தும் வீசக்கூடியவராக மாறினார்.

ஒரு பேட்ஸ்மேனாக குறிப்பாய் அவரது நேர்த்தியான "சப்பாத்தி அடி" [1][2] யானது (பிளிக் ஆப் த பேட்ஸ்) அவருக்கு அடையாள அடியாக இருந்தது. ஆனால் தேவைப்படும் போது அவரால் அடித்தாடும் வேகத்தை உயர்த்திக்கொள்ளவும் முடிந்தது. அவர் சராசரி உயரத்திற்கு அதிகமாக இருந்த காரணத்தாலும் (6' 3" உயரத்தில் இருந்தார்) விளையாடும் போது செங்குத்தாக நிற்பதாலும் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக அவரால் குறைவான அடிகளையே கையாள முடிந்தது. ஆனால் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக மிக உயரமாக அடிக்க முடிந்தது. சாஸ்திரி தொடக்க ஆட்டக்காரராகவோ அல்லது நடுநிலை வரிசையிலோ களம் இறங்குவார்.

அவரது தொழில் வாழ்க்கையில் முக்கியப் பகுதியானது 1985 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆப் கிரிக்கெட்டின் சாம்பியன்ஸ் ஆப் சாம்பியன்ஸில் தேர்வான போது நிகழ்ந்தது. முதல் வகுப்பு கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் ஆறு சிக்சர்களை அடித்த மேற்கு இந்தியரான கேரி சோபரின் சாதனையை அதே பருவத்தில் சாஸ்திரி சமன் செய்தார். அவர் ஒரு ஆற்றல்மிக்க தலைவராக இருப்பார் எனக் கருதப்பட்டார். ஆனால் கிரிக்கெட்டிற்கு [3] வெளியே அவரது நற்பெயர், காயங்கள் மற்றும் நெருக்கடியான நேரங்களில் ஆட்டத்திறனை இழந்த மனப்பாங்கு ஆகியவற்றால் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் இந்தியாவின் அணித்தலைவராக விளையாடினார்.

உள்ளூர் கிரிக்கெட்டில் அவர் பம்பாய்க்காக விளையாடினார். மேலும் அவரது இறுதி ஆண்டு விளையாட்டில் அவர்களது அணி ரஞ்சி கோப்பை வெற்றி பெற காரணமாக இருந்தார். மேலும் இவர் கிலாமோர்கனுக்கான கவுண்டி கிரிக்கெட்டின் நான்கு பருவங்களில் ஆடியுள்ளார். அவர் முட்டி காயத்தில் அடிக்கடி அவதிப்பட்டதால் 31 வயதில் பணி ஓய்வு பெற வற்புறுத்தப்பட்டார். தற்போது அவர் TV கிரிக்கெட் கருத்துரையாளராக அறியப்படுகிறார்.

ஆரம்பகால நாட்கள்[தொகு]

ரவி சாஸ்திரியின் விளையாட்டு வாழ்க்கை செயல்பாட்டு வரைபடம்.

சாஸ்திரியின் குடும்பம் தொடக்கத்தில் கர்நாடகாவின் மங்களூரில் இருந்து வந்ததாகும். ஆனால் அவர் மும்பை[4] என அழைக்கப்படும் பம்பாயில் பிறந்து வளர்ந்தார். அவரது தந்தையான எம்.ஜெயத்ராதா சாஸ்திரி ஒரு மருத்துவர்[5] ஆவார். மேலும் அவரது குடும்பம் திடமான கல்விசார்ந்த பாரம்பரியம் உடையதாகும்.[4] அவர் கிரிக்கெட்டை அக்கறையுடன் விளையாட ஆரம்பிக்கையில் பதின்வயதினராக மட்டுமே இருந்தார். மும்பையின் மதூங்காவில் டான் போஸ்கோ பள்ளியுடன் 1974 பள்ளிகளுக்குள் நடக்கும் போட்டியான கில்ஸ் ஷீல்டில் சாஸ்திரியின் அணி இறுதிப் போட்டியை அடைந்தது. ஆனால் வருங்கால இரண்டு ரஞ்சி விளையாட்டு வீரர்களான ஷிஸ்ஷிர் ஹட்டன்காடி மற்றும் ஜிக்னேஷ் சங்கானி ஆகியோர் இருந்த செயின்ட் மேரிஸுடன் அவரது அணி தோற்றுப்போனது. அடுத்த ஆண்டு சாஸ்திரியின் தலைமையில் டான் போஸ்கோ கில்ஸ் ஷீல்டை வென்றது. 27 ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் படி சாஸ்திரி இறுதிப் போட்டியில் அதிக பட்ச ரன்களை எடுத்து சாதனை புரியக் காரணமாக இருந்தார்.[6]

பள்ளியில் அவரது பயிற்சியாளரான பீடி தேசாய் ஒரு காலத்தில் டாட்டாஸ் அண்ட் தாதர் யூனியன் வீரராக இருந்தவர் ஆவார். டான் போஸ்கோ பள்ளிகளின் கிரிக்கெட்டில் மரபுவழியாக பெரிய சக்தியாக இல்லாத போதும் பின்னர் சாஸ்திரி வணிகம் பயின்ற ஆர்.ஏ. போடார் கல்லூரியானது மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களை வழங்கியுள்ளது. வசந்த் அம்லாடி மற்றும் குறிப்பாக வீஎஸ் "மார்ஷால்" பட்டேல் ஆகியோர் சாஸ்திரி ஒரு கிரிக்கெட் வீரராக வளர்ச்சி பெறுவதற்கு முழுமையான ஒத்துழைப்பை அளித்திருந்தனர். இளநிலைக் கல்லூரியில் அவரது இறுதி ஆண்டில் பம்பாயுடன் ரஞ்சி கோப்பை[7] யில் விளையாடுவதற்கு தேர்வு செய்யப்பட்டார். 17 ஆண்டுகள் மற்றும் 292 நாட்களுடன் பம்பாய்காக விளையாடும் இளம் கிரிக்கெட் வீரராகத் திகழ்ந்தார்.

1980–81 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் சுற்றுப் பயணத்திற்கு 19 வயதிற்கு கீழே இருக்கும் இந்திய அணி திட்டமிடப்பட்டது. சாஸ்திரி தேசிய பயிற்சியாளர் ஹெமூ அதிகாரி மூலமாக கடைசி நிமிடத்தில் பயிற்சி முகாமில் சேர்க்கப்பட்டார். முன்னோட்ட விளையாட்டில் இரண்டு அணிகளில் ஒன்றில் சாஸ்திரி தலைமை ஏற்றிருந்தார். பின்னர் 19 வயதிற்கு கீழே உள்ள அணிக்கு தலைமை வகிக்கும் படி கேட்கப்பட்டார். எனினும் இந்த சுற்றுப்பயணம் இரத்து செய்யப்பட்டது. இந்த அணி பின்னர் ஸ்ரீலங்கா சென்றது. ஆனால் அங்கு நடந்த போட்டிகள் அடிக்கடி மழையின் காரணமாக தடைபட்டன.[8]

அவரது முதல் இரண்டு ரஞ்சி பருவங்களில் 6-61 என்ற வீதத்தில் பந்து வீசியது மட்டுமே அவரது குறிப்பிடத்தக்க சாதனையாக இருந்தது. இதை 1979–80 ரஞ்சி இறுதிப் போட்டியில் டெல்லிக்கு எதிராக எடுத்தார். இறுதியில் இப்போட்டியில் பம்பாய் தோற்றது. இதன் அடுத்த பருவத்தில் கான்பூரில் உத்திரப்பிரதேசத்திற்கு எதிராக அவர் விளையாடிக் கொண்டிருக்கையில் காயமடைந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர் திலிப் தோஷிக்குப் பதிலாக விளையாடுவதற்கு நியூசிலாந்து சுற்றுப்பயணம் செல்லும் அணியில் இணைவதற்கு அழைக்கப்பட்டார். சாஸ்திரி முதல் டெஸ்டிற்கு முந்தைய நாள் இரவு வெல்லிங்டன் வந்து சேர்ந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணித்தலைவரான ஜெஃப் ஹோவர்த்துக்கு எதிராக அவர் வீசிய ஓவரில் ரன் எதும் எடுக்கப்படவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் நான்கு பந்துகளுக்கு மூன்று விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த அனைத்து விக்கெட்டுகளும் திலிப் வெங்சர்கார் பிடித்த கேட்ச்சால் அவுட் ஆகினர். இதனால் நியூசிலாந்தின் இன்னிங்ஸ் மிக விரைவிலேயே முடிவுக்கு வந்தது. மூன்றாவது டெஸ்டில் அவருடைய ஏழு விக்கெட்டுகள் அவருக்கு ஆட்ட நாயகன் விருதை வெல்ல முடிந்தது. மேலும் இந்தத் தொடரில் இரு அணி பக்கங்களிலும் அதிகமானதாக அவர் எடுத்த 15 விக்கெட்டுகள் இருந்தது.

சர்வதேச கிரிக்கெட்[தொகு]

அவரது டெஸ்ட் அறிமுகத்தின் பதினெட்டு மாதங்களுக்கு உள்ளாகவே பேட்டிங் வரிசையில் பத்தாவது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு முன்னேறினார். அவரது முதல் தொடரில்[9] கருத்துரைத்து விஸ்டன்" எழுதுகையில் "அவரது அமைதி, வரிசையில் அவரது உணர்ச்சி பூர்வமான பேட்டிங்" ஆகியவற்றைப் பற்றிக் கருத்துரைத்தது. அவரால் உபயோகமான ஆல்-ரவுண்டராக வளர்ச்சி பெற முடியும். மேலும் அவரது பீல்டிங்கும் நன்றாக உள்ளது" என்றது. அவரது தொழில் வாழ்க்கையின் இறுதியில் ஒன்றில் இருந்து பத்து வரை அனைத்து நிலையிலும் அவர் பேட்டிங் செய்தார். அவரது சொந்த ஆர்வத்தால்[7], பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக பவுலிங்கை தவிர்த்தார். இது அவரது ஆட்டத்திறமைகளில் எதிரொலித்தது. எனினும் பருவம்-தொடங்கும் 1981 இராணி கோப்பையில் 9-101 என்ற கணக்கில் அவர் விக்கெட்டுகளை சாய்த்தது சுமார் இருபது ஆண்டுகால போட்டி சாதனையாக நிலைத்து நின்றது.

வழக்கமான தொடக்க ஆட்டக்காரர்களான பிரனாப் ராய் மற்றும் குலாம் பார்க்கர் திறம் பட செயல்படாததால் 1982 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக த ஓவலில் சாஸ்திரி தொடக்க ஆட்டக்காரராக இறங்க நேர்ந்தது. அந்த போட்டியில் 66 ரன்கள் எடுத்ததன் மூலம் அவர் குறிப்பிடத்தக்க புகழ் பெற்றார். அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் பாகிஸ்தானில் விளையாட இருந்த நான்கு டெஸ்ட் போட்டிகளில் இருந்து வெளியேறினார். மீண்டும் கராச்சியில் நடந்த இறுதி டெஸ்டில் களம் இறங்கினார். அப்போட்டியில் இம்ரான் கானின் (அவரது தொழில் வாழ்க்கையின் உச்சகட்டத்தில் இருந்த சமயம்) வேகப்பந்து வீச்சுக்கு எதிராக அவரது முதல் டெஸ்ட் சதத்தை அடித்தார். பின்னர் அவர் ஆண்டிகாவில் மேற்கு இந்தியத்தீவுகளுக்கு எதிராக மற்றொரு சதத்தை நிறைவு செய்தார். கொடுத்த வாய்ப்பில் இந்தியக் கிரிக்கெட்டில் போதுமான அளவு ஈர்த்தார். இந்திய அணியில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகவும் பெயர் பெற்றார்[10].

1983 உலகக்கோப்பையில் மிகவும் முக்கியமான போட்டிகளில் விளையாடுவதற்கு சாஸ்திரி தேர்ந்தெடுக்கப்படவில்லை. அந்த ஆண்டிற்குப் பிறகு மேற்கு இந்தியத்தீவுக்கு எதிரான தொடரில் மேற்கு இந்தியத்தீவு வேகப்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சைத் தனது பேட்டிங் திறமையால் ஆதிக்கம் செலுத்தி மீண்டும் தனது திறமையை சாஸ்திரி நிரூபித்தார்.

சிறப்புவாய்ந்த குளிர்காலம்[தொகு]

1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆறு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக இந்தியா, பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. லாகூர் டெஸ்டில் பாகிஸ்தானின் 428க்கு எதிராக இந்தியா 156 ரன் மட்டுமே எடுத்து பாலோவ் ஆனை சந்தித்தது. அதில் சாஸ்திரி மற்றும் மொஹிந்தர் அமர்நாத்துக்கு இடையே ஐந்தாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு 126 ரன்கள் மூலமாக அணியைப் பாதுகாத்து இறுதி நாளில் ஆறு விக்கெட்டுகள் கையிருப்புடன் இந்தியா 92 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது. சாஸ்திரி 71 ரன்களும் அமர்நாத் 101* ரன்களும் எடுத்தனர். சாஸ்திரி பைசலாபாத்தில் நடந்த அடுத்த டெஸ்டில் இன்னும் வெற்றிகரமாக செயல்பட்டார். அப்போட்டியில் சந்தீப் பட்டேலுடன் 200 ரன்கள் நின்று சாஸ்திரி 139 ரன்கள் எடுத்தார். இறுதி டெஸ்ட் மற்றும் சுற்றுப்பயணத்தின் எஞ்சிய போட்டிகளானது இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட காரணத்தால் ரத்து செய்யப்பட்டது.

ஏற்கனவே சாஸ்திரி இந்திய அணியின் வருங்கால தலைவராக வருவார் என்ற அறிகுறிகள் தெரிந்திருந்தது. இந்திய அணித்தலைவர் சுனில் கவாஸ்கர் அவரது தொழில் வாழ்க்கையின் இறுதியை அடைந்திருந்தார். மேலும் முந்தைய பருவத்தில் இந்தியாவை வழிநடத்திச் சென்ற கபில் தேவ் அவரது இடத்தைப் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. சாஸ்திரி அவருக்கு அடுத்து அந்த பதவிக்கு எதிர்பார்க்கப்பட்டார். 1984 ஆம் ஆண்டின் முற்பகுதில் அவர் ஜிம்பாவேக்கு இளம் இந்திய அணி பக்கத்தில் இருந்து வழிநடத்தினார். நவம்பரில் ஆங்கிலேயப் பகுதிக்கு எதிராக சுற்றுப்பயணத்தில் சாஸ்திரி 25 வயதுக்கு கீழே உள்ள இந்திய அணியை வழிநடத்தினார். இப்போட்டிகளில் இங்கிலாந்தை இன்னிங்க்ஸ் வெற்றியில் முதன் முறையாக வீழ்த்தி இங்கிலாந்துக்கு எதிரான ஐம்பது ஆண்டு கால சுற்றுப்பயண போட்டியில் முதன் முறையாக வென்றது.

வழக்கமாக அந்த சமயத்தில் சாஸ்திரி ஒரு நாள் போட்டிகளின் இன்னிங்ஸையும் தொடங்கி வைக்க ஆரம்பித்தார். அக்டோபர் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 102 ரன்களை அடித்தார் – இது ODIகளில் இந்தியாவின் இரண்டாவது நூறாகும் – மேலும் டிசம்பரில் கட்டாக்கில் இங்கிலாந்துக்கு எதிராக அதே ரன்களை எடுத்தார். 1983 உலகக் கோப்பையின் இரண்டு போட்டிகளில் ஸ்ரீகாந்துடன் தொடக்க ஆட்டக்காரராக இறங்கி கவஸ்கருடன் நிலைத்து நின்றார். மூன்றாவது முறையாக அவர் கட்டாக்கில் அவர் தொடக்க ஆட்டக்காரராக இறங்கினார். மேலும் அவர்கள் முதல் விக்கெட்டிற்கு 188 ரன்கள் எடுத்து உலக சாதனை புரிந்தனர். அந்தப் பருவத்திற்குப் பின்னர் இந்த பார்ட்னர்ஷிப்பானது ஆஸ்திரேலியாவில் WCC இல் உறுதியாக நிலைத்து நின்று இந்தியாவிற்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத்தந்தது.

சாஸ்திரியின் வெற்றியானது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்தது. பம்பாய் டெஸ்டில் விக்கெட்-கீப்பர் சையது கிர்மானியுடன் நிலைத்து நின்று சாஸ்திரி எடுத்த 235 ரன்கள் இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தது (இது இன்னும் ஏழாவது விக்கெட்டுக்கான தேசிய சாதனையாக உள்ளது). அவரது 142 ரன்களானது பைசலாபாத்தில் அவரது அதிகப்பட்ச ரன்னான 139 ஐ முன்னேற்றம் அடையச் செய்தது.

கல்கத்தாவில் நடந்த மூன்றாவது டெஸ்டில் அவரது இன்னிங்ஸ் மழையினால் கடுமையான இடையூறுகளை சந்தித்தாலும் சாஸ்திரி 455 நிமிடங்களில் 357 பந்துகளில் 111 ரன்கள் எடுத்தார். இதில் முகமது அசாருதீனுடன் ஐந்தாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் 214 சேர்த்தார். இது இந்தியாவின் மற்றொரு சாதனையாகும். இந்தியா இரண்டாவது இன்னிங்ஸை இறுதி நாளில் தாமதமாக தொடங்கிய போது சாஸ்திரி முதல் ஆளாக களம் இறக்கப்பட்டார். இதன் மூலம் ஒரு டெஸ்டில் அனைத்து ஐந்து நாட்களிலும் பேட்டிங் செய்யக்கூடிய சில பேட்ஸ்மேன்களில் ஒருவராக பெயர் பெற்றார்.

சாஸ்திரி மேற்கு மண்டல ரஞ்சி போட்டியில் பரோடாவுக்கு எதிராக மற்றொரு சாதனையையும் பம்பாய்க்கு அமைத்துக் கொடுத்தார். அவரது முதல் சதத்தை 72 நிமிடங்களில் 80 பந்துகளை சந்தித்து அடித்தார். இந்த சதமானது ஒன்பது போர்களையும் நான்கு சிக்சர்களையும் உள்ளடக்கியிருந்தது. இரண்டாவது சதமானது 41 நிமிடங்களில் 43 பந்துகளில் அடைந்தார். அவர் 123 பந்துகளை சந்தித்து 113 நிமிடத்தில் 200* ரன்களை அடித்தார். இதன் மூலம் முதல் வகுப்பு வரலாற்றின் முந்தைய சாதனையை முறியடித்து இதன் வரலாற்றில் வேகமான இரட்டை சதமாகப் பெயர் பெற்றது. இந்த இரட்டை சதம் 13 போர்களையும், 13 சிக்சர்களையும் உள்ளடக்கியிருந்தது. இதில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் திலக் ராஜின் ஒரே ஒவரில் ஆறு சிக்ஸர்களை அடித்தார். சிக்சர்களின் எண்ணிக்கையின் சாதனையில் 1926–7 இல் பம்பாய் ஜிம்கானாவில் MCC அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் சீகே நாயுடு அடித்த 11 சிக்சர்களைக் கொண்ட 58 ஆண்டு இந்திய சாதனையை இது முறியடித்தது. சாஸ்திரியின் நிறைவேறாத ஆறாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் குலாம் பார்க்கருடன் 204* ரன்களை எடுத்தார். இந்த பார்ட்னர்ஷிப்பில் குலாம் பார்க்கர் 33 ரன்களை எடுத்தார். மேலும் இந்த பார்ட்னர்ஷிப் 83 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. பரோடாவில் இரண்டாவது இன்னிங்ஸில் சாஸ்திரி நான்காவது ஓவரில் இரண்டாவது விக்கெட்டுகளை எடுத்தார்.[11]

த 'சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ்'[தொகு]

பாகிஸ்தானில் சில தொடர் மற்றும் 1983 உலக்கோப்பை இறுதிப்போட்டியைத் தவிர்த்து கிரிக்கெட்டின் உலக சாம்பியன்ஷிப்பானது ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவிற்கு முதன் முறையாக அந்நிய நாட்டில் இருந்து கிரிக்கெட் போட்டிகள் நேரலையாக காட்டப்பட்டன. த WCC இல் ஒவ்வொரு போட்டியையும் திருப்தியளிக்கும் வகையில் இந்தியா வென்றது. இதை விக்டோரியா உருவமைக்கப்பட்டு 150வது ஆண்டுகால கொண்டாட்டமாக த WCC நம்பியது. ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணியினர் இறுதிப் போட்டியாளர்களாக முன்னேறினர்.[11][12]

இந்தப் போட்டிகளை சாஸ்திரி மெதுவாக ஆரம்பித்து இறுதி மூன்று போட்டிகளில் ஐம்பதுகளை அடித்து நிறைவு செய்தார். இதில் ஸ்ரீகாந்த்தும் மூன்று ஐம்பதுகளை எடுத்தார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் போட்டியிலும் இறுதிப் போட்டியிலும் இந்தியா சதங்களை அளித்தது. ஒவ்வொரு போட்டியிலும் இந்தியா இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் சென்றது. மெல்போன் மற்றும் சிட்னியில் விளையாடுவதற்கு அனைத்து போட்டிகளிலும் ஆடுவதற்கு ஏதுவாக இருந்தது. இந்தப் போட்டிகளின் திருப்புமுனைகளுக்கும் நீண்ட பவுண்டரிகளுக்கும் இடமளித்தது. சிவராமகிரிஷ்ணன் மற்றும் சாஸ்திரி இருவரும் ஐந்து போட்டிகளில் 18 விக்கெட்டுகளை எடுத்தனர்.

'த சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ்' என்ற அழைக்கப்பட்ட அந்தக் குறிப்பிட்ட போட்டிகளில் சாஸ்திரி 182 ரன்கள் மற்றும் எட்டு விக்கெட்டுகளை எடுத்து தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது திறமைகளின் மூலமாக ஆடி 100 காரையும் வென்றார்.[13] பிரதமர் ராஜீவ் காந்தியின் பிரத்யேகமான ஆணையில் கனரகப் பொருளை இறக்குமதி செய்வதற்கு அளிக்கப்படும் வழக்கமான ஏற்றுமதி இறக்குமதி வரியை விலக்கு அளித்தார்.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஷார்ஜாவில் ரோத்மனின் கோப்பையை இந்தியா வெற்றி பெற்றது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியானது குறிப்பாக நினைவில் கொள்ளத்தக்கதாக இருந்தது. ஏனெனில் இந்தியா 125 ரன்கள் மட்டுமே எடுத்து வென்றது. சாஸ்திரி மற்றும் சிவா இருவரும் அவர்களது வெற்றிகரமான பார்ட்னர்ஷிப்பை போட்டியில் தொடர்ந்தனர். இந்தப் போட்டிகளில் முதல் முறையாக இந்தியாவின் துணைத் தலைவராக சாஸ்திரி பணியாற்றினார். கவாஸ்கர் WCC போட்டிகளுக்கு முன்னரும் பின்னரும் அவரது அணித்தலைவர் பதவியில் இருந்து விலகுவதை அறிவித்திருந்தார். இறுதிப்போட்டிக்கு முன்பு முன்னாள் ஆஸ்திரேலிய அணித்தலைவரான இயான் சேப்பல் அறிவுரை கூறுகையில் கவாஸ்கரின் பொறுப்பை சாஸ்திரி எடுத்துக்கொள்ளும் வரை சிறப்புடைய இந்தியன் கிரிக்கெட்டில் கவாஸ்கர் கண்டிப்பாக அணித்தலைவராகத் தொடர வேண்டும் என்றார்[14].

சார்ஜா போட்டிகள் இறுதி அடைந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு பம்பாய் மற்றும் டெல்லிக்கு இடையேயான இறுதிப்போட்டி தொடங்கியது. கவாஸ்கர் மற்றும் சாஸ்திரி இருவரும் பஹ்ரைன் வழியாக நாடு திரும்பினர். இருந்தும் போட்டி நடக்கும் காலையிலேயே இந்தியாவை அடைந்தனர். மும்பை அணியின் உறுப்பினரும் மற்றொரு இந்திய வீரரான திலிப் வெங்சர்கார் போட்டிக்கு முந்தைய நாள் வந்து சேர்ந்தும் இடுப்பு காயத்துடன் போட்டியில் இருந்து விலகியதால் தவிர்க்க இயலாமல் இருவரும் விளையாடக்கூடிய சந்தர்ப்பம் வாய்த்தது.

ரஞ்சி இறுதிப்போட்டி[தொகு]

ரஞ்சி இறுதிப்போட்டியானது இந்திய உள்நாடுக்குரிய கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த போட்டிகளில் ஒன்றாக பெயர்பெற்றதாகும். இப்போட்டியில் மந்தமான கவாஸ்கார் டாஸில் வெற்றிபெற்று பேட்டிங்கை தேர்வு செய்தார். அவர் இமை மூடித்திறப்பதற்குள் பம்பாய் 42 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது. பேட்டிங் வரிசையில் 5வதாக இறங்கி ரஞ்சி கோப்பையில் அவரது 20வது மற்றும் கடைசி சதத்தை எடுத்தார். மேலும் பம்பாய் 333 ரன்கள் எடுத்தது. சாஸ்திரி அதில் ஒரு கை-பந்தை கட் செய்வதற்கு முயற்சித்து விக்கெட்டை இழப்பதற்கு முன்பு 29 ரன்களை எடுத்திருந்தார். டெல்லி அணியினர் சேட்டன் சவ்ஹான் அவரது முரிந்த விரலுடன் பேட்டிங் செய்து அணியை வீழ்ச்சியில் இருந்து காப்பதற்கு முன்பு இடர்பாடில் இருந்தனர். இது அவரது இறுதியான முதல் வகுப்பு போட்டியாகும். அஜய் ஷர்மா அவரது முதல் பருவத்தில் சதம் அடித்து ஒன்பது விக்கெட்டுகள் இழப்புடன் டெல்லியை முன்னணி இருக்கும் படி செய்தார்.

போட்டி சமன் செய்யப்பட்டால் போட்டிகளின் விதிகளில் குறிப்பிட்ட படி முதல் இன்னிங்ஸில் முன்னணியில் இருக்கும் அணியைக் கொண்டு வெற்றியாளர்கள் நிர்ணயிக்கப்பட்டனர். இரண்டு நாட்கள் மற்றும் 100 நிமிடங்கள் இருந்ததில் பம்பாய் விரைவான ரன்களை சேகரித்தது. போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்திற்கு சுமார் 46,000 பேர் வந்திருந்தனர். மேலும் தொகுப்பாளர்கள் நுழைவுச்சீட்டுகளை விற்றுத் தீர்த்தனர். சாஸ்திரி ஒரு நாள் மற்றும் 90 நிமிடங்களில் பம்பாய்க்கு சாதகமாக அதிகப்பட்சமாய் 76 ரன்களை அடித்து டெல்லி அணிக்கு 300 ரன்களை வெற்றி இலக்காக நியமித்தார்.

இதில் சில சீரான பந்துவீச்சைத் தவிர்த்து பந்து மெதுவாக சுழன்று பேட்ஸ்மேனுக்கு ரன் அடிப்பதற்கு போதுமான நேரம் கிடைத்தது. இறுதி நாளுக்கு முன்பு டெல்லி விக்கெட்டுகளை இழக்காமல் 95 ரன்களை எடுத்தது. பின்பு விக்கெட்டுகளை இழந்தது. அவரது முதல் விக்கெட்டாக சவ்ஹான் அவுட் ஆனார். வேகமாக வந்த பந்து பேட்டில் படாமல் அவருக்குப் பின்னால் பிடிக்கப்பட்டதற்கு அவுட் கொடுக்கப்பட்டார். இப்போட்டிக்கு இது திருப்புமுனையாக அமைந்தது, மேலும் பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டைப் பறிகொடுக்க ஆரம்பித்தனர். குர்ஷரன் சிங் அடிக்காமல் விளையாடியதற்கு எல்பீடபிள்யூ முறையில் அவுட் ஆனார். கீர்த்தி ஆசாத் விளையாடினார், சுரேந்தர் கன்னா ஒரு சில அடிகளுக்குப் பின்னர் ஸ்டம்பிங் முறையில் அவுட் ஆனார். சாஸ்திரி 91 ரன்கள் கொடுத்து எட்டு விக்கெட்டுகளை அவுட் செய்தார்; பம்பாய் 90 ரன்களை வெற்றி பெற்றது. ரஞ்சி கோப்பையின் 50வது ஆண்டில் இது அவர்களது 30வது தலைப்பாகும்.[15]

மெதுவான வீழ்ச்சி[தொகு]

1985–86 பருவத்தில் கபில் தேவ் தலைமையில் சாஸ்திரி துணை அணித் தலைவராக தொடர்ந்து விளையாடினார். இந்தப் பருவமும் 1986 இங்கிலாந்து சுற்றுப்பயணமும் அவருக்கு சிறப்பற்ற ஒன்றாக இருந்தது. 1985–86 இல் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்குப் பிறகு ஒரு பந்து வீச்சாளராக இருப்பதைத் தவிர்க்கத் தொடங்கினார். பம்பாய் ரஞ்சி கோப்பையில் ஹரியானாவிடம் அரையிறுதியில் தோற்றது. ஆனால் மேற்குப் பிரதேசத்தின் துலீப் கோப்பையை வென்றது. ஒரு பந்து வீச்சாளராக அவரது முக்கியமான பங்களிப்பானது திருவேந்திரத்தில் ஒரு சமமான விக்கெட்டில் வடக்குப் பிரதேசத்தில் அரையிறுதியில் விளையாடியதாகும். ரஞ்சி இறுதிப்போட்டியைப் போன்றே, அவர் 145 ரன்கள் கொடுத்து எட்டு விக்கெட்டுகள் எடுப்பதற்கு முன்பு இறுதி நாள் ஆட்டத்தில் வடக்கு வெற்றி பெறும் என கருதப்பட்டது.

1986–87 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியா, ஸ்ரீலங்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டன. சாஸ்திரி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மெட்ராஸில் நடந்த டைடு டெஸ்ட்டில் மிக முக்கியமான பங்களிப்பை அளித்தார். இதில் 62 மற்றும் 48* ரன்களை எடுத்தார். அவரது இரண்டாவது இன்னிங்ஸ் ரன்கள் 36 பந்துகளில் அடிக்கப்பட்டதாகும். இந்தியாவின் நடுநிலை ஆட்டக்காரர்கள் விக்கெட்டுகளை இழந்து இந்தியாவின் ரன் விகிதம் சரிய ஆரம்பித்த போது ஆப்-ஸ்பின்னர் கிரேக் மேத்திவ்ஸின் பந்துகளில் சாஸ்திரி இரண்டு சிக்சர்கள் அடித்ததால் ஆட்டம் இந்தியாவின் கைக்குள் வந்து வெற்றிக்கு வழிவகுத்தது. பம்பாயில் நடந்த இறுதி டெஸ்டில் அவர் 121* ரன்களை எடுத்தார். இதன் மூலம் மெதுவாகவும் வேகமாகவும் விளையாடக் கூடியவர் என பெயர் பெற்றார். அவரது ஐம்பது ரன்களின் கடைசி ரன்னை எடுப்பதற்கு சுமார் 30 நிமிடங்கள் போராடினார். அதே போல் தொன்னூறுகளில் இருந்த போது ரன்களை எடுப்பதற்கு சுமார் ஒரு மணி நேரம் போராடினார். எனினும் அவர் ஆறு சிக்சர்களை அடித்தார். இதில் மூன்று சாஸ்திரி சதத்தை நிறைவு செய்த பின்னர் அடித்ததாகும். குறிப்பாக நினைவில் கொள்ளத்தக்க வகையில் இடது கை வேகப்பந்து வீச்சாளரான புரூஸ் ரெய்டின் பந்தில் பேட்டை வளைத்து அடித்த ஒரு சாட்டானது லாங்கானுக்கு மேலே சென்று மிகவும் உயரமாக சென்ற சிக்சராக அமைந்தது. அந்த சமயத்தில் ஒரு இன்னிங்ஸில் ஆறு சிக்சர்கள் என்பது ஒரு இந்திய சாதனையாகும். ஆனால் அதே இன்னிங்ஸில் 164* ரன்கள் அடித்த திலிப் வெங்சர்கார் மூலமாக பளிச்சிட்டுத் தெரியவில்லை. அவர்கள் ஆறாவது விக்கெட்டிற்கு 298* ரன்கள் சேர்த்து சாதனை புரிந்தனர்.

சாஸ்திரி துலிப் கோப்பையின் காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்கள் சதங்களை அடித்தார். ஆனால் மேற்கு பிரதேசமானது தெற்கிடம் தோற்று பின்னர் அரையிறுதிப் போட்டியில் முன்னிலை வகித்தது. அந்தப் பருவத்தில் சாஸ்திரி அடித்த ஐம்பது மட்டுமே சிறப்பாக இருந்தது. குறிப்பாக ஜெய்பூர் டெஸ்டில் பாகிஸ்தானுக்கு எதிராக அடித்த மெதுவான 125 ரன்களும் இதில் அடக்கமாகும். அந்தத் தொடரின் ஆட்டநாயகனாக தேர்வாவதற்கு மிகவும் சிறப்பாக ஆடினார். பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் முதன் முறையாக இந்தியாவின் அணித்தலைவராக சாஸ்திரி களம் இறங்கினார். இதில் 50 ரன்களை அணிக்காக சேர்த்து மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். கல்கத்தாவில் அவர் நான்கு விக்கெட்டுகளை சாய்த்தார். மேலும் ஹைதராபாத்தில் இரண்டு சிலிர்ப்பூட்டும் முடிவுகளுடன் 69* ரன்களை அணிக்காக சேர்த்தார். பின்னர் நாக்பூரில் இந்தியா ஒரு பெரிய இலக்கை சந்தித்த போது சாஸ்திரி 40 பந்துகளில் 52 ரன்களை எடுத்தார்.

1987 ஆம் ஆண்டின் முற்பகுதியில் சாஸ்திரி 'தட்'ஸ் கிரிக்கெட்' என்ற பெயரில் 15 நிமிட பயிற்சித் தொடரை வழங்கினார். இந்தப் பயிற்சித் தொடரானது ஞாயிற்றுக் கிழமை காலை நேரங்களில் தேசிய அலைவரிசையான தூர்தர்ஷனில் ஒளிபரப்பானது. சாஸ்திரி நடிகை அம்ரிதா சிங்குடன் பழகுவதாகவும் புரளிகள் இருந்தன.[16]

கவுண்டி கிரிக்கெட்[தொகு]

1987 ஆம் ஆண்டில் கிலாமோர்கன் சாஸ்திரியை அவர்களுடன் விளையாடுவதற்கு ஒப்பந்தமிட்டது. 1991 ஆம் ஆண்டு வரை சாஸ்திரி அவர்களுடன் விளையாடினார். அப்போது 1990 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு இந்தியா சுற்றுப் பயணம் மேற்கொண்டதால் இடைவெளி எடுத்துக்கொண்டார். சாஸ்திரியின் பங்கேற்பானது அந்தக் கவுண்டிக்கு சிறிது நல்வாய்ப்புகளை வழங்கியது. இதன் மூலம் அந்த இரண்டு பருவங்களின் முதல் வகுப்பு அட்டவணையில் அடிப்பாகத்தில் நிறைவடைந்தது. 1989 ஆம் ஆண்டில் சாஸ்திரி 1000 ரன்களை எடுத்தார். மேலும் மிடில்செக்ஸிற்கு எதிரான இரண்டு இன்னிங்ஸிலும் சதங்களை அடித்தார். 1988 ஆம் ஆண்டில் லங்ஷேருக்கு எதிரான போட்டியில் 49 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை (90 ரன்களுக்கு 11 விக்கெட்டுகளை) வீழ்த்தி சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தினார். அதில் பந்தை குத்தி எழுப்பி திருப்பும் யுக்தியை கையாண்டார். விஸ்டனைப் பொருத்த வரை அந்தப் பந்து 'விளையாட முடியாத' ஒன்றாகும். ஏற்கனவே சாஸ்திரி பந்து வீசுவதற்கு விருப்பம் இல்லாமல் இருப்பதை அலமனக் உணர்ந்தார்.

1988 ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டிகளில் கிளாமோர்கனின் பருவங்களில் அவர் சிறப்பாக செயல்படவில்லை. 1987 ஆம் ஆண்டில் சன்டே லீக்கில் அவர்கள் இருந்த 14 வது இடத்தில் இருந்து மேல் உயர்ந்து ஐந்து வது இடத்தை அவர்கள் நிறைவு செய்தனர். மேலும் பென்சன் & ஹெட்ஜஸ் கோப்பையின் அரையிறுதியையும் அடைந்தனர். 1988 ஆம் ஆண்டில் சன்டே லீக் போட்டிகளில் 14 சிக்சர்களை அடித்து லீடிங் சிக்ஸ் ஹிட்டர் விருதை சாஸ்திரி வென்றார். அவர் MCC அணியில் பங்களித்தார். இதனால் 1987 ஆம் ஆண்டில் லார்ட்ஸில் MCC பைசென்டெனியல் போட்டியில் எஞ்சியிருக்கும் உலக அணியுடன் விளையாடினார்.

எப்போதுமே துணைத்தலைவராக[தொகு]

1986–87 ஆம் ஆண்டுகளில் பெங்களூரில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இறுதி டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது. அப்போது கபில்தேவின் தலைமையைப் பற்றி ஊடகங்கள் பரவலாக விமர்சித்தன. 1987–88 பருவத்தின் தொடக்கத்தில் ரிலையன்ஸ் உலகக் கோப்பையில் தேர்வாளர்கள் அவரை அணித்தலைவராக தொடர்ந்து பயன்படுத்தினர். ரிலையன்ஸ் கோப்பையில் சாஸ்திரி பேட்டிங்கில் சோபித்தார். ஆனால் மற்றொரு இடது கை சுழற்பந்து வீச்சாளரான மனிந்தர் சிங்குடன் பார்ட்னர்ஷிப் இட்டு பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டார். இந்தியா அதன் குழுவில் உயர்ந்த இடத்தில் இருந்தது. ஆனால் அரையிறுதியில் இங்கிலாந்துக்கு கீழே சென்றது. ஒரு போட்டியில் வெற்றிக்கு இன்னும் வாய்ப்பிருந்த போதும் கபில் தேவ் ஒரு கேட்சை டீப் மிட்விக்கெட்டிற்கு தட்டி விட்டது அவர் மேல் அதிகப்படியான விமர்சனங்கள் உருவாவதற்கு காரணமாக அமைந்தது.

அந்த சமயத்தில் கபிலிடம் இருந்து பொறுப்புகளைப் பெறும் வலிமையான வீரராக வெங்சர்கார் தோன்றினார். 1986 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் தொடர் தொடங்கியதில் இருந்து, பேட்டுடன் கனவு ரன்னை அவர் கொண்டிருந்தார். 1987 ஆம் ஆண்டில் புதிதாக கணிக்கப்பட்ட டெலாயிட் தரவரிசைகளில் (தற்போதைய LG தரவரிசைகளின் முன்னோடி) உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என அவருக்கு தரவரிசையைக் கொடுத்தது. இந்தியத் தேர்வாளர்கள் அணியின் தலைவரை சிறந்த வீரரைக் கொண்டே உருவாக்க முடியும் என அறிந்து கொண்டனர். அதனால் மேற்கு இந்தியத் தீவுக்கு எதிரான தாயகத் தொடருக்கு முன்பு கபில் பதவியில் விலக்கப்பட்டு வெங்சர்க்கார் இந்திய அணித்தலைவராக ஆக்கப்பட்டார்.

மூன்றாவது டெஸ்டில் வெங்சர்க்காருக்கு இடது கையில் முறிவு ஏற்பட்டது, அதனால் அவருக்குப் பதிலாக சாஸ்திரி தலைவர் பொறுப்பை ஏற்றார். இது அவரது டெஸ்ட் தொழில் வாழ்க்கையில் ஒரே முறை நிகழ்ந்ததாகும். இந்தியாவில் உள்ள மெட்ராஸில் ஒரு தயார் செய்துகொண்டிருந்த களத்தில் இந்தியா டாஸில் வெற்றி பெற்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. இதில் முதன் முறையாக களம் இறங்கிய நரேந்திர ஹிர்வானி 136 ரன்கள் கொடுத்து 16 விக்கெட்டுகளை எடுத்தார். மேலும் இப்போட்டியில் 255 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா இத்தொடரை 1–1 என்ற விகிதத்தில் சமன் செய்தது. இதில் ஒருபுறமாக சாஸ்திரியும் பேட்டிங்கிலோ அல்லது பந்து வீச்சிலோ தனது திறமையை சிறிது வெளிப்படுத்தினார். எட்டு ஒரு நாள் போட்டிகளில் ஏழு போட்டிகளை மேற்கு இந்தியத்தீவுகள் அணி வென்றது. அதில் ஆறு போட்டிகளில் சாஸ்திரி அணித்தலைவராக இருந்தார். இதற்கிடையில் வெங்சர்கார் செய்தித்தாள் பத்திகளில் எழுதியதற்காக BCCI இல் இருந்து ஆறு மாதங்கள் தடை விதிக்கப்பட்டார். அதனால் ஏப்ரலில் மூன்று நாடுகள் கலந்து கொள்ளும் போட்டிகளான ஷார்ஜாவில் அணியின் தலைவராக சாஸ்திரி நீடித்தார். ஸ்ரீலங்கா மற்றும் நியூசிலாந்து இதில் பங்கேற்ற மற்ற அணிகளாகும். இத்தொடரை இந்தியா எளிதாக வெற்றிபெற்றது.

1989 ஆம் ஆண்டின் முற்பகுதியில் மேற்கு இந்தியத்தீவுகளுக்கு இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்தப் போட்டிகள் அனைத்திலும் தோல்வியடைந்தாலும் இத்தொடரில் இரு அணி பக்கத்தில் இருந்தும் சாஸ்திரி சிறந்த இன்னிங்ஸ்களை விளையாடினார். இரண்டாவது டெஸ்டானது பிரிட்ஜ்டவுனில் நடைபெற்றது. இதில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 56 ரன்கள் முன்னிலையில் இருந்தாலும் இரண்டாவது இன்னிங்ஸ் விக்கெட்டுகளை 63 ரன்களுக்குள் இழந்தது. பேட்டிங் வரிசையில் 3வதாக சாஸ்திரி இறங்கினார். அணியினர் 251 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதில் கடைசி விக்கெட்டாக அவுட் ஆன சாஸ்திரி திறம்பட 107 ரன்களை எடுத்திருந்தார். அவரது தொழில் வாழ்க்கையின் இறுதியில் திரும்பிப் பார்த்தால் அவரது சிறப்புமிக்க இன்னிங்ஸாக இதை அவர் கருத்தில் கொள்ள வேண்டும்.[17] அங்கு மால்கோம் மார்சல், கர்ட்லி ஆம்புரோஸ், கோர்ட்னி வால்ஸ் மற்றும் இயான் பிசப் போன்ற பந்து வீச்சாளர்கள் இருந்தனர். அந்த ஆடுகளமும் மிகவும் கடினமாக இருந்தது.

இந்தியாவிற்குத் திரும்புகையில் இந்திய வீரர்களில் பலர் USA வில் நடந்த கண்காட்சிப் போட்டியில் கலந்து கொண்டனர். அந்த வீரர்களை BCCI தற்காலிக நீக்கம் செய்தது. எனினும் இந்தத் தற்காலிக நீக்கம் பின்னர் விலக்கப்பட்டது. வெங்சர்கார் பதவியில் இருந்து விலக்கப்பட்டார். ஸ்ரீகாந்த் புதிய அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். சாஸ்திரி மீண்டும் அவருக்குப் பிரதிநிதியாய் செயல்பட்டார். பாகிஸ்தானில் ஒரு அக்கறையில்லாத தொடருக்குப் பிறகு 1990 ஆம் ஆண்டில் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இருவருமே சேர்க்கப்படவில்லை. அசாருதீன் ஒரு சோதனை அணியை வழிநடத்தினார். இந்த அணியானது தேர்வாளர்களால் 'தொன்னூறுகளின் அணி' என அழைக்கப்பட்டது. ஒரு சில வாரங்களில் இந்த சொற்றொடரானது வேடிக்கையாகிப் போனது. சாஸ்திரி கோடைக்காலத்தில் நடந்த இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்கு துணை-அணித்தலைவராக மீண்டும் அழைக்கப்பட்டனர்.

இந்தியக் கோடைகாலம்[தொகு]

1985 ஆம் ஆண்டில் இருந்து சாஸ்திரியின் தொழில் வாழ்க்கை மெல்ல மெல்ல நலிவுற்றது. ஆனால் 1990 ஆம் ஆண்டு வாக்கில் மீண்டும் அவர் எழுச்சி பெற்றார். இங்கிலாந்தின் ஆடுகளங்கள் பேட்டிங் செய்வதற்கு ஏதுவாக இருந்தன. மேலும் அவர் மூன்று டெஸ்டுகளில் இரண்டு சதங்களை அடித்தார். தற்போது அவர் தொடக்க ஆட்டக்காரராக மீண்டும் களம் இறங்கினார். லார்ஸ் மைதானத்தில் இங்கிலாந்தின் அதிகப்படியான ரன்களை இந்தியா எதிர்கொள்கையில் அவர் ஒரு துல்லியமான சதத்தை அடித்தார். இது ஒரு முழுநிறைவான ஆட்டமாக இருக்கவில்லை – இதில் பெரும்பாலும் அவர் விளையாடினார் அல்லது விளையாடுவதைத் தவிர்த்தார். மேலும் பெரும்பாலான ரன்கள் அவரது வழக்கமான பிளிக்குகள் மற்றும் நட்ஜஸ் மூலமாக கிடைத்தன. ஆங்கில சுழற்பந்து வீச்சாளர் எட்டி ஹெம்மிங்ஸின் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடித்ததன் மூலம் சதம் அடித்தார். உடனடியாய் மற்றொரு பெரிய அடிக்கு முயற்சிக்கையில் ஆட்டத்தை விட்டு வெளியேறினார்.

ஒவலில் 187 ரன்களுடன் அவர் அதிகமான ரன்களை அடித்திருந்தார். இந்த ஆட்டத்தைப் பற்றி பத்திரிக்கையாளர் மற்றும் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேயின் விளக்கவுரையில் சாஸ்திரியின் பல பெரும் முயற்சிகளுக்கான உண்மையை அடக்கியிருந்தது [18]:

உயரமான, நேரமின்மையான, திடமான சாஸ்திரியின் பேட்டிங்கைப் பார்க்கையில் அது குதுப்மினாரை போன்று பிரமிப்பாக இருந்தது. நீங்கள் அதன் பண்பைப் பார்த்து பிரமிப்படைவீர்கள், அதன் பாணிக்காக அல்ல. ஒன்பது மணிகள் மற்றும் 21 நிமிடங்கள், இங்கிலாந்தின் தாக்குதலில் உளியால் செதுக்கப்பட்ட சிற்பம் போல் நின்றார். விடாமுயற்சி மற்றும் கைவினைக்கு பிரதிநிதியாக இருந்து அவருக்குப் பின்னால் விட்டுச்சென்றார். வழக்கமான விருப்பு வெறுப்பு அற்றவராக தலை கவசத்திற்குள் சலனமற்ற முகத்துடன் இருந்தார். ஆனால் ஒரு விக்கெட்டில் அவராக நிலைநிறுத்திக் கொண்ட அவரது கண்களில் ஒரு உறுதியை உங்களால் காண முடியும். நிலையான வேறாக மற்றும் சலிப்பூட்டும் பழமாக அவர் இருந்தார்.
அரிதாக மட்டுமே அவரது பேட் உறுதிப்பாட்டில் இருந்து தள்ளாடியது. ஆனால் மீண்டும் மனது பேட்டை சரியான வழியில் கொண்டு சென்றது. பெரும்பாலும் எச்சரிக்கையுடனே இருந்தார். மேலும் அவரது பேட் மிகவும் தாராளமாகவும் நிமிர்ந்தும் இருந்தது ... அவரால் கவாஸ்கரைப் போல் எப்போதுமே இருக்க முடியாது. ஆனால் உரிமை பெற்ற பிரதிநிதியாக இருந்தும் கூட அவர் குறைந்தது சிறந்த மனிதனின் ஒழுக்கத்துடன் இருந்தார். இது ஒரு துயர் துடைப்பாகவும் இருந்தது. அவரது விக்கெட்டை எப்போதுமே தூரத்தில் எரிய மாட்டார். அவரது எல்லைக்கோட்டை எவராலும் கடுமையாகப் பாதுகாக்க முடியாது என்பது அறிந்ததே.

ஓவலில் நடந்த ஆட்டத்தைத் தொடர்ந்து இரானி கோப்பையில் இந்தியப் பருவத்தின் தொடக்க ஆட்டத்தில் சாஸ்திரி அவரது தொழில் வாழ்க்கையில் உயர்ந்த ரன்களான 217 ஐ அடித்தார். ஸ்ரீலங்காவிற்கு எதிரான சந்திகார் டெஸ்டில் ஒரு மிகவும் மோசமான விக்கெட்டாக அதிக அளவு ரன்களான 88 ஐயும் அடித்தார். ஒரு வாரத்திற்கு பிறகு அதே எதிர் அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் 101* ரன்களை அடித்தார். கடைசி பந்தில் இரண்டு ரன்களை அடித்ததன் மூலம் இந்த சதத்தை சாஸ்திரி நிறைவு செய்தார். அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில், அவர்கள் சர்வதேசக் கிரிக்கெட்டிற்கு திருப்பிய எப்போதுமே முதலாவது ODI தொடரில் டெல்லியில் 109 ரன்களை சாஸ்திரி அடித்தார். இது அவருக்கு நான்காவது ஒரு நாள் சதமாகும். தொடர்ச்சியாக சுற்றுலாப் பயணங்கள் கைவிடப்பட்ட போது அதே நேரத்தில் இந்தியா அதன் தாயகத்தில் ஒரு போட்டிகளை ஆடியது.

1991 ஆம் ஆண்டின் இறுதியில் உலகக் கோப்பையைத் தொடர்ந்து ஐந்து டெஸ்டுகளைக் கொண்ட தொடருக்காக இந்தியா, ஆஸ்திரேலியாவிற்கு பயணமானது. சேனல் ஒன்பது இதற்கு இந்தியக் கோடைகாலம் எனப் பெயர் சூட்டியது. இத்தொடர் இந்தியாவிற்கு ஒரு அழிவாக இருந்தது – அவர்கள் நான்கு டெஸ்டுகளில் தோற்றனர் – மேலும் இதில் நடுவரைப் பற்றிய சர்ச்சைகள் அதிகமாக இருந்தது. ஆனால் இது மேலும் சாஸ்திரி மற்றும் கபில் தேவின் தொழில் வாழ்க்கைகளில் இறுதியான செழுமையையும் கண்டது.

உலகத் தொடர் கோப்பையின் ஒரு முந்தைய போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சாஸ்திரி 15 ரன்களைக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பின்னர் இது இந்தியாவின் ODIகளில் சிறப்பான பந்து வீச்சாக இருந்தது. எனினும் இதில் பெரும்பாலான விக்கெட்டுகள் எளிதாகக் கிடைத்தன – மூன்று ஆட்டக்காரர்கள் லெக்சைடு பவுண்டரியின் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டம் இழந்தனர். மற்ற இரண்டும் ஸ்டம்பிங் செய்யப்பட்டனர். சிட்னியின் மூன்றாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியாவின் மூலம் அடிக்கப்பட்ட டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரே இரட்டை சதத்தை சாஸ்திரி அடித்தார். இப்போட்டியில் சாஸ்திரி அறுபதுகளில் இருந்த போது ஆஸ்திரேலியாவின் அறிமுக சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வானே வீசிய பந்தில் அவரே கேட்ச்சைத் தவற விட்டார். மழையினால் தொடர்ந்து ஆட்டம் தடைபட்ட போதும் நான்காவது நாளின் முற்பகுதில் அவரது சதத்தை சாஸ்திரி நிறைவு செய்தார். மேலும் வானேயின் பந்தில் ஒரு சிக்ஸரை அடித்ததன் மூலம் 150 ரன்களை நிறைவு செய்தார். இறுதியாக ஒன்பதரை மணி நேரங்களில் 17 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர்களுடன் 206 ரன்கள் அடித்த பின் வார்னேயின் பந்தில் அடித்த சோர்வான அடியில் ஆட்டம் இழந்தார். இது வார்னேக்கு அவரது முதல் டெஸ்ட் விக்கெட் ஆனது.

அந்த ஆட்டத்தின் போது முதன் முறையாக அவருக்கு ஏற்பட்ட முழங்கால் காயம் அவரது தொழில் வாழ்க்கையை இறுதி பெறச் செய்தது. இந்தியா அந்த ஆட்டத்திற்கு நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் வழக்கமான சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் சென்றிருந்தது. சாஸ்திரி இந்த நேரத்தில் ஒரு பகுதி-நேர பந்துவீச்சாளரைக் காட்டிலும் சிறிது அதிகமான பணியைச் செய்தார். இறுதி நாளின் போது ஆடுகளம் சுழற்பந்துக்கு சாதகமாக அமைந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் சாஸ்திரி நான்கு விக்கெட்டுகளைச் சாய்த்தார். ஆஸ்திரேலியா போட்டியை சமன் செய்ய இருந்த நேரத்தில் இந்த விக்கெட்டுகளை அவர் எடுத்தார். மற்றொரு சுழற்பந்து வீச்சாளருடன் இந்தியா அந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியடைந்தது.[19][20]

கிரிக்கெட்டில் இறுதி நாட்கள்[தொகு]

சிட்னி டெஸ்டைத் தொடர்ந்து எஞ்சியிருந்த WSC போட்டிகள் நடந்தது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது இறுதியில் சாஸ்திரி முழங்கால் காயத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டார். அந்த இன்னிங்க்ஸின் பின்னர் வந்த நிலைகளில் அவர் நிற்பதற்கும் அடிப்பதற்கும் கட்டாயப்படுத்தப்பட்டார். ஒரு சில விரைவான ரன்களுக்குப் பிறகு ஒரு தவிர்க்க இயலாத தவறான அடியினால் அவரது ஆட்டம் முடிவுக்கு வந்தது. எஞ்சியிருந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் அவர் ஆடவில்லை. அப்போட்டிகளில் இந்தியா தோல்வியுற்றது. இதனால் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் தொகுத்து வழங்கும் உலகக்கோப்பையில் அவரால் விளையாட முடியுமா என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் அவர் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டார்.

அதில் இரண்டாவது போட்டியில் 50 ஓவர்களில் 238 ரன்களை ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா எடுக்க வேண்டி இருந்தது. மழையின் இடையூறுகளால் 47 ஓவர்களில் 236 ரன்கள் அடிக்க வேண்டுமென இலக்கு மீண்டும் நிர்ணயிக்கப்பட்டது. சாஸ்திரி 67 பந்துகள் சந்தித்து 25 ரன்கள் எடுத்தார்; அப்போட்டியில் இந்தியா ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அந்தத் தோல்வியினால் அவர் குற்றஞ்சாட்டப்பட்டு அந்தப் போட்டிகளில் எஞ்சியிருந்த ஆட்டங்களில் இருந்து நீக்கப்பட்டார்.

அடுத்த பருவத்தில் தென்னாப்பிரிக்கா அவர்களது முதன் முறையான சுற்றுலாப் பயணத்திற்காக இந்தியாவிற்கு தொகுத்து வழங்கியது. சாஸ்திரி அனைத்து நான்கு டெஸ்டுகளிலும் தொடக்க ஆட்டக்காரராக இறங்கி ரன்கள் அடிப்பதற்கு தடுமாறினார். சென்சுரியன் பார்க்கில் இந்தியா வெற்றி பெற்ற ஒரு நாள் போட்டியில் அவர் ஆட்டம் இழக்காமல் 16 பந்துகளுக்கு 27 ரன்கள் எடுத்தது மட்டுமே சிறப்பான ஆட்டமாக இருந்தது. இத்தொடரின் ஒரு நாள் போட்டிகளில் ஆட்ட வரிசையில் பின் தங்கி களம் இறக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டிகளைப் பற்றி பின்னர் அவர் சுட்டிக்காட்டுகையில் அவரது துல்லியமான பாத்திரத்தை அவர் அறிந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.

தென்னாப்பிரிக்கத் தொடருக்குப் பின்னர் உடனடியாய் இந்தியா, இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அத்தொடருக்கு முன்பு மீண்டும் முழங்கால் காயத்தால் பாதிக்கப்பட்டு கிரிக்கெட்டில் இருந்து எட்டு மாதங்கள் விலகி இருந்தார். மீண்டும் அவர் சர்வதேசக் கிரிக்கெட்டில் இந்தியாவின் பிரதிநிதியாய் விளையாடவே இல்லை.

1993–94 ரஞ்சி கோப்பையின் வெஸ்ட் ஜோன் லீக்கில் பம்பாய் விளையாடி அனைத்து நான்கு போட்டிகளிலிலும் வெற்றி பெற்றது – மிகவும் அரிதான அருஞ்செயலாக [21] – பெரிய அளவில் இந்த வெற்றிகள் அமைந்தது. டெஸ்ட் வீரர்களிடம் இருந்து விலகி இருந்த சாஸ்திரி இளைய அணியினரைக் கொண்ட நாக் அவுட் போட்டிகளுக்கு தலைமை வகித்தார். பம்பாய் காலிறுதிக்கு முந்தையப் போட்டியில் ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் ஹரியானாவை வீழ்த்தியது. ஆனால் அடுத்த சுற்றில் கர்நாடகாவிற்கு எதிராக இடர்பாடுகளை சந்தித்தது. 406 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் சாஸ்திரி மற்றும் சைரஜ் பாட்லே இருவரும் அவர்களது விக்கெட்டுகளுக்கு ஆறு மணி நேரங்களில் 259 ரன்களை சேர்ப்பதற்கு முன்பு பம்பாய் அவர்களது முதல் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்களை எடுத்திருந்தது. இதில் சாஸ்திரியின் தனிப்பட்ட ரன்கள் 151 ஆகும். இறுதி நாளில் பம்பாய் சிறப்பாக செயல்பட்டு முதல் இன்னிங்க்ஸில் முன்னிலை பெற்று வெற்றியடைந்தது. அப்பருவத்தில் சாஸ்திரி 612 ரன்கள் அடித்து 15 போட்டிகளில் 17 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இறுதிப் போட்டியில் பம்பாய் ரஞ்சி கோப்பையை வெல்வதற்கு குறைந்த ரன்களை உடைய வங்காள தேசத்தை வீழ்த்துவதற்குச் சென்றது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு டெல்லிக்கு எதிராகப் பெற்ற பிரபலமான வெற்றிக்குப் பின்னர் அவர்களது முதல் சாம்பியன்ஷிப் இதுவாகும்.

1994 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஸ்ரீலங்கா சிங்கர் உலகத்தொடரை வெற்றி பெற்ற போது முதல் வகுப்பு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சாஸ்திரி அறிவித்தார்.

1990 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ரிது சிங்கை சாஸ்திரி திருமணம் செய்து கொண்டார். மார்ச் 1995[3] இல் வேர்ல்ட் மாஸ்டர்ஸ் டோர்னமென்ட்டுடன் TV வர்ணனையாளராக முதன் முறையாக அறிமுகம் ஆனார். பின்னர் விரைவில் அவர் ESPN–ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையின் ( Audio file "Ravi-shastri.ogg" not found ) சிறந்த வர்ணனையாளர்களில் ஒருவராக மாறினார். ஷாஸ் அண்ட் வாஸ் என்ற வாசிம் அக்ரமுடன் அவரது உரையாடல் நிகழ்ச்சி மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சியாகும். 2003 ஆம் ஆண்டில் பிரபலங்கள் மேலாண்மை நிறுவனமான ஷோடிஃப் வேர்ல்வைடுடன் கூட்டிணைவு செய்யத் தொடங்கினார். ICC மற்றும் BCCI இன் தற்காலிக அலுவல பதவிகளில் பணிபுரிந்ததில் இருந்து சாஸ்திரி UNICEF இன் நல்லெண்ணத் தூதுவராகவும் பணியாற்றினார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் அதைச் சார்ந்த அலைவரிசைகளில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கும் சூப்பர் ஸ்பெல்ஸ் போன்றவை அவரது தற்காலிக நிகழ்ச்சிகளில் சில ஆகும். 2008 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ESPN-STAR ஸ்போர்ஸுடன் சாஸ்திரியும் அவரது சக வர்ணனையாளர் சுனில் கவாஸ்கரும் அவர்களது நீண்டகால கூட்டிணைவை முடித்துக் கொண்டனர். போட்டி நெட்வொர்க் சோனி மேக்ஸ் மூலமாக ஒளிபரப்ப இருக்கும் இலாபமுடைய இந்தியன் பிரீமியர் லீக்கின் வர்ணனையாளராக BCCI ஐக்கு ஒப்பந்தமிடுவதற்காக இந்த முடிவை மேற்கொண்டனர்.[1] மேலும் 2008 ஆம் ஆண்டில் சாஸ்திரி அவரது 46 வது வயதில் சிறந்த விஷேசமாக அவர் அலேக்காவிற்கு தந்தையானார்.[22] 2007 ஆம் ஆண்டில் பங்களாதேஷ் சுற்றுலாப்பயணத்தின் போது இந்தியக் கிரிக்கெட் அணியின் தற்காலிகப் பயிற்சியாளராக சாஸ்திரி பணியாற்றினார். 2008 கோடைகால ஒலிம்பிக்ஸ் தீப்பந்தக் குழுவினரின் ஓமன் கிளைக்கான தீப்பந்தம் கொண்டு செல்லும் பிரபலமாக சாஸ்திரி இடம் பெற்றார்.

குறிப்புதவிகள்[தொகு]

  1. "Some interesting trademark shots". த இந்து. Archived from the original on 2003-08-19. பார்க்கப்பட்ட நாள் 2007-05-02.
  2. "Restraint is the essence". த இந்து. Archived from the original on 2005-01-11. பார்க்கப்பட்ட நாள் 2007-05-02.
  3. 3.0 3.1 ராஜு பாரட்டான், "ரவி சாஸ்திரி : ஆல்வேஸ் 'ஆன் த பால்'", சிறப்பு ஓவியம், இந்தியக் கிரிக்கெட் 2002 .
  4. 4.0 4.1 த சாம்பியன்ஸ் ஆஃப் சாம்பியன்ஸ்
  5. "ரவி சாஸ்திரியின் தந்தையான டாக்டர் எம் ஜே ஷாஸ்திரி (77) இயற்கை எய்தினார்". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2021-12-27.
  6. ரிப்போர்ட் ஆஃப் சன்கீட் சவான் இம்ப்ரூவிங் சாஸ்திரி'ஸ் கில்ஸ் ஷீல்ட் ரெக்கார்ட்
  7. 7.0 7.1 ஜாவீத் அக்தர், த யங்க் வெட்ரியன் , ரவி சாஸ்திரியுடன் நேர்காணல், உலகக் கிரிக்கெட் , ஏப்ரல் 1986
  8. பிரதீப் விஜய்கார், ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் கட்டுரை, இந்தியக் கிரிக்கெட் 1981
  9. விஸ்டன் ரிவியூ ஆஃப் இந்தியா இன் நியூசிலாந்து 1980–81
  10. இந்தியக் கிரிக்கெட் 1983 , ப.3, மேற்கு இந்தியத்தீவுகள் சுற்றுலா நிகழ்ச்சியின் திறனாய்வில்
  11. 11.0 11.1 இந்தியக் கிரிக்கெட் 1985
  12. சுனில் கவாஸ்கர், ஒரு நாள் அதிசயங்கள்
  13. சாம்பியன்ஸ் ஆஃப் சாம்பியன்ஸில் சாஸ்திரி காரை வென்றதைப் பற்றிய கட்டுரையாகும்
  14. டேவிட் மெக்மோகன், சாஸ்திரியுடன் நேர்காணல், ஸ்போர்ட்ஸ்வேர்ல்ட் 24–30 ஏப்ரல், 1985
  15. ஆயாஸ் மெமோன், "பம்பாய் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது", ஸ்போர்ட்ஸ்வீக் , ஏப்ரல் 17–23, 1985
  16. BBC/இந்தியாடைம்ஸ் நேர்காணல்
  17. 1994 இல் கிரிக்இன்போவுடன் நேர்காணல்
  18. ஹர்ஷா போக்லே, த ஜாய் ஆஃப் எ லைப்டைம் : இந்தியா'ஸ் டூர் ஆஃப் இங்கிலாந்து 1990
  19. விஸ்டன் 1992 (அணுக்கம் ஜூன் 25, 2005)
  20. கிரிக்இன்போ மேட்ச் ரிப்போர்ட்ஸ் ஆஃப் இந்தியா இன் ஆஸ்திரேலியா 1991/2 (அணுக்கம் ஜூன் 25, 2005)
  21. இந்தியக் கிரிக்கெட் 1994. இந்திய கிரிக்கெட்டில் 1993-4 ஆம் ஆண்டு அணியானது அதன் மேற்கு மண்டல லீக் ஆட்டங்களில் அனைத்து ஆட்டங்களிலும் முதல் முறையாக வென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் அது நிச்சயமாக உண்மை அல்ல. 1977-78 ஆம் ஆண்டுகளில் குஜராத் அதன் அனைத்து நான்கு மேற்கு மண்டல ஆட்டங்களிலும் வெற்றி பெற்றதே முந்தைய நிகழ்வு ஆகும்.
  22. "அப் க்லோஸ் வித் ரவி சாஸ்திரி". Archived from the original on 2014-11-29. பார்க்கப்பட்ட நாள் 2021-08-12.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரவி_சாஸ்திரி&oldid=3569475" இலிருந்து மீள்விக்கப்பட்டது