திருநெல்வேலித் தாக்குதல், 1983

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருநெல்வேலி தாக்குதல், 1983 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
போ போ பிராவோ
Four Four Bravo ambush
ஈழப்போர் பகுதி
நாள் யூலை 23, 1983
இடம் திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
வெற்றிகரமாக விடுதலைப் புலிகளின் பதுங்கித் தாக்கல்
பிரிவினர்
தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை இலங்கை இராணுவம்
  • இலங்கை இலங்கை இலகு காலாட்படை
தளபதிகள், தலைவர்கள்
வேலுப்பிள்ளை பிரபாகரன்
செல்லக்கிளி
இலங்கை வாஸ் குணவர்தன 
பலம்
25 15
இழப்புகள்
1 (செல்லக்கிளி) 1 அலுவலர், 12 படைகள் இறப்பு, 2 பேர் காயம்

திருநெல்வேலித் தாக்குதல் அல்லது போ போ பிராவோ (Four Four Bravo) என்பது யூலை 23, 1983 அன்று கடமையில் இருந்த 15 பேர் கொண்ட இலங்கை இராணுவ சுற்றுக்காவல் செய்பவர்களின் அழைப்புக் குறியீடாகும். இச் சுற்றுக்காவல் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் பதுங்கியிருந்து தாக்கியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இச் சம்பவம் கறுப்பு யூலை கலவரத்திற்கு அடிகோலி ஈழப்போரை ஆரம்பித்து வைத்ததென சிலரால் கருதப்படுகின்றது.[1] கறுப்பு யூலை திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட முறையும் அளவும் அதற்கு அரச தரப்பில் இருந்த ஆதரவும் அதனை வெறும் பழித் தாக்குதலாகக் கருத முடியாது. அதன் பாரிய விளைவுகளே ஈழப்போரின் ஒரு முக்கிய காரணம்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனும் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் பலரும் நேரடியாகவே பங்கேற்று நடத்திய முதலாவது மிகப் பெரிய தாக்குதல் இதுவாகும். இந்நிகழ்வு விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது. இத்தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் விடுதலைப் புலிகளின் தரப்பில் லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மான் கொல்லப்பட்டார்.

வரலாறு[தொகு]

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதல் தடவையாக அதிக எண்ணிக்கையிலான படையினர் கொல்லப்பட்டது இத்தாக்குதலில் ஆகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் தாக்குதல் அணித் தளபதி லெப்டினன்ட் சீலன், ஆனந்த் ஆகியோர் இறந்த 8 ஆம் நாளில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இலங்கை இராணுவம் தனக்கு சிம்ம சொப்பனமாக இருந்து லெப்டினன்ட் சீலன் கொல்லப்பட்ட தாக்குதலை ஒரு பெரும் படை நடவடிக்கையாகவே மேற்கொண்டது. அப்போது யாழ்ப்பாணப் படைத் தலைமையகமாக இயங்கிய குருநகர் இராணுவ முகாமில் வைத்து அப்போதைய யாழ். சிறிலங்கா படைத் தளபதி பிரிகேடியர் பல்தசார் தலைமையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்பின் அடுத்த தாக்குதல் இலக்கு குருநகரில் வைத்து திட்டமிடப்பட்டது.

இதன்படி பலாலிப் பகுதியில் இருந்து ஒரு இராணுவ அணியும் குருநகரில் இருந்து ஒரு இராணுவ அணியும் நகர்ந்து விடுதலைப் புலிகளைத் தாக்குவது அவர்களின் திட்டம். பலாலியில் இருந்து நகரும் அணிக்கு போ போ பிராவோ என்ற குறியீட்டுப்பேர் சூட்டப்பட்டது.

குருநகர் அணிக்கு 'போர் போர் சாளி' என்ற குறியீட்டுப்பேர் சூட்டப்பட்டது. இதில் போ போ பிராவோ அணி வாகனத்தில் வந்தபோது விடுதலைப் புலிகள் திருநெல்வேலி-பலாலி வீதியிலுள்ள தபால் பெட்டிச் சந்தியில் வைத்து கண்ணிவெடி மற்றும் துப்பாக்கிப் பிரயோகத் தாக்குதலை நடத்தினர். இதில் 13 இராணுவத்தினர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலில் வே. பிரபாகரன், கேணல் கிட்டு, லெப். கேணல் விக்டர், லெப். கேணல் பொன்னம்மான், லெப் கேணல் அப்பையா அண்ணை, மேஜர் கணேஸ் பசீர் காக்கா உட்பட மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கறுப்பு ஜூலை[தொகு]

இந்த தாக்குதலை சாட்டாக வைத்து ஏற்கனவே திட்டமிட்டப்பட்டிருந்தபடி கொழும்பிலும் ஏனைய சிங்களப் பகுதிகளிலும் தமிழ் மக்கள் மீதான வன்முறைகளை ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் அரசு கட்டவிழ்த்துவிட்டது.

வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள்[தொகு]

அரசில் முக்கிய அமைச்சர்களாக இருந்த பலரே தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தலைமையேற்று நடத்தினார்கள். வெலிக்கடைச் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். சிறைச்சாலை அதிகாரிகளின் ஆதரவுடன் நடத்தப்பட்ட இந்த கோரத் தாக்குதலில் 58 தமிழ்க் கைதிகள் கொல்லப்பட்டார்கள்.

இந்த வன்முறைகள் தமிழர் வரலாறில் முதல் தடவையாக பாரிய இடப்பெயர்வை ஏற்படுத்தியது. இந்தியா அனுப்பிவைத்த கப்பல்களில் பெருந்தொகையான தமிழர்கள் தென்பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அகதிகளாக அனுப்பிவைக்கப்பட்டார்கள்.

மேற்கோள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]