மலையாள மனோரமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலையாள மனோரமா
வகைநாளிதழ்
உரிமையாளர்(கள்)மலையாள மனோரமா கம்பெனி லிமிடெட்
நிறுவுனர்(கள்)கண்டதில் வர்கீஸ் மாப்பிள்ளை
தலைமை ஆசிரியர்மேமென் மாத்யூ
முகாமைத்துவ ஆசிரியர்கள்பிலிப் மாத்யூ
நிறுவியது1888; 136 ஆண்டுகளுக்கு முன்னர் (1888)
மொழிமலையாளம்
வெளியீட்டு முடிவு1938
மீள் ஆரம்பம்1947; 77 ஆண்டுகளுக்கு முன்னர் (1947)
தலைமையகம்கோட்டயம், கேரளா, India
விற்பனை1,908,612 நாள்தோறும் (as of சூன் 2022)[1]
வாசகர்கள்8.47 மில்லியன் (ஐஆர்எஸ் 2019)[2]
ISSN0972-0022
OCLC எண்802436310
இணையத்தளம்www.manoramaonline.com இதை விக்கித்தரவில் தொகுக்கவும்

மலையாள மனோரமா கேரள மாநிலம் கோட்டயம் நகரிலிருந்து வெளியாகும் மலையாள மொழி காலை நாளிதழ் ஆகும். இதனை மலையாள மனோரமா கம்பெனி லிமிடெட் எனும் நிறுவனம் பதிப்பிடுகிறது. தற்போது மாமென் மேத்யூ என்பவரைத் தலைவராகக் கொண்டு இயங்கும் இந்த நாளிதழின் முதல் இதழ் ஒரு வாராந்திர இதழாக 22 மார்ச் 1888 அன்று வெளியானது. நாள்தோறும் 1.9 மில்லியன் பிரதிகள் விற்பனையாகின்றன. 8 மில்லியன் பேர் வாசகர்களாக உள்ளனர்.[3][4] கேரள மாநிலத்தின் இரண்டாவது பழைமையான செய்தித்தாளாக மலையாள மனோரமா கருதப்படுகிறது. கேரளாவின் முதல் செய்தித்தாள் தீபிகா எனும் இதழாகும். இணையவழி பதிப்பையும் மனோரமா நடத்துகிறது.[5]

இந்நிறுவனத்திலிருந்து ஆங்கிலம், இந்தி மொழிகளில் மகளிர், குழந்தைகளுக்கான இதழ்கள் வெளியாகின்றன. செய்தித் தொலைக்காட்சி, பொழுதுபோக்குத் தொலைக்காட்சிகள் இயங்குகின்றன. ஆங்கில மொழியில் தி வீக் (The Week) இதழ் வாரந்தோறும் வெளியாகிறது.

வரலாறு[தொகு]

ஒரு கூட்டுப் பங்கு வெளியீட்டு நிறுவனமாக, இந்திய குடியரசின் முதல் கூட்டுப் பங்கு வெளியீட்டு நிறுவன அந்தஸ்தைப் பெறுவதற்காக திட்டமிடப்பட்ட இது, 1888 ஆம் ஆண்டில் கண்டதில் வர்கீஸ் மாப்பிள்ளை என்பவரால் கோட்டயத்தில் இணைக்கப்பட்டது. அப்போது அது திருவாங்கூர் இராஜ்ஜியத்தில் ஒரு சிறு நகரம், தற்சமயம் இந்தியாவின் கேரள மாநிலத்தின் ஒரு பகுதி. மலையாள மனோரமா வின் முதல் பதிப்பு மார்ச் 22, 1890 அன்று ஆர்தோடாக்ஸ் சர்ச்சின் மாலங்காரா மெட்ரோபோலியன் எச்.ஜி. ஜோசப் மார் டையோனைசியசின் சொந்த அச்சகத்திலிருந்து வெளியிடப்பட்டது. மலையாள மனோரமா என்னும் பெயர் திருவல்லாவிலிருந்து வில்லுவரவட்டத்து கவிஞர் ராகவன் நாயரால் தேர்வுசெய்யப்பட்டது. கேரள வர்மா சின்னத்தை வழங்கினார். இது திருவாங்கூர் இராஜ்ஜிய சின்னத்தின் ஒரு அங்கமாக இருந்தது. இரண்டு ஆண்டு காலத்தில், இணைக்கப்பட்ட தேதியிலிருந்து வெளியீடு துவங்கியது வரையில் நிறுவனம் பல சவால்களை எதிர்கொண்டது. தகவல் சார்ந்த மாதாந்திர இதழான டெல் மி வையையும் அது வெளியிடுகிறது.

மலையாள மனோரமா, மாத்ருபூமி இதழ்களுக்கிடையேயான ஒரு ஒப்பீடு: (ராபின் ஜெஃப்ரி எழுதிய India's Newspaper Revolution (2000) எனும் நூல், கே. எம். ஜார்ஜ் எழுதிய Western Influence on Malayalam Language and Literature (1972), ஆடிட் பீரோ ஆஃப் சர்குலேசன்சு (ABC) 2013 ஆகியவற்றின் அடிப்படையில்)

500
1,000
1,500
2,000
2,500
3,000
1927
1937
1947
1957
1960
1964
1968
1970
1981
1998
2013
  •   மாத்ருபூமி
  •   மனோரமா

அச்சிடப்படும் இடங்கள்[தொகு]

கொல்லம் நகரத்திலுள்ள அலுவலகமும் அச்சகமும்

தலைமை ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள்[தொகு]

  • கண்டத்தில் வர்கீசு மாப்பிள்ளை (1890 - 1904)
  • கே. சி. மாமேன் மாப்பிள்ளை (1904 - 1938, 1947 - 1954)
  • கே. எம். செரியன் (1954 - 1973)
  • கே. எம். மாத்யூ (1973 - 2010)
  • மாமேன் மாத்யூ (2010–இப்போது வரை)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Highest Circulated Daily Newspapers (language wise)" (PDF). Audit Bureau of Circulations. Archived (PDF) from the original on 13 January 2021. பார்க்கப்பட்ட நாள் 5 January 2022.
  2. IRS 2019 Q4 Highlightsபரணிடப்பட்டது 2 நவம்பர் 2021 at the வந்தவழி இயந்திரம்
  3. International Federation of Audit Bureaux of Circulations and ABC India (National Newspapers Total Circulation-2018) Download பரணிடப்பட்டது 25 மே 2017 at the வந்தவழி இயந்திரம்
  4. "Audit Bureau of Circulations (ABC) (January-June 2013)" (PDF). Archived (PDF) from the original on 13 May 2014. பார்க்கப்பட்ட நாள் 31 March 2014.
  5. "Malayala Manorama EPaper". epaper.manoramaonline.com. Archived from the original on 11 November 2019. பார்க்கப்பட்ட நாள் 7 January 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலையாள_மனோரமா&oldid=3856858" இலிருந்து மீள்விக்கப்பட்டது