மரூஉ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மரூஉ என்பது தொன்று தொட்டு இலக்கணப்படி வழங்கி வரும் ஒரு சொல் காலமாற்றத்தினால் எழுத்துக்களோ, ஒலியோ சிதைவுற்று வருவது.

மரூஉ என்றால் உயிர் அளபெடை.

எடுத்துக்காட்டுகள்

  • யார் - ஆர்
  • சர்க்கரை - சக்கரை
  • உபாத்தியாயர் - வாத்தியார், வாத்தி
  • போழ்து - பொழுது, போது
  • இருக்கின்றது,இருக்கிறது - இருக்குது, இருக்கு, ஈக்கு, கீது
  • பருத்தித்துறை - பருத்துறை
  • துருவுபலகை - திருவலை
  • கறிவேப்பிலை - கருவேப்பிலை

மரூஉ என்பது தமிழ்ச் சொற்களில், குறிப்பாக பெயர்ச் சொற்களில், பெரிதும் மாற்றம் அடைந்து, மருவி, வழங்கும் சொல். பெயர்ச் சொற்களில் மரூஉ எடுத்துக்காட்டுக்கள்:

  • கோயம்புத்தூர் என்பது கோவை ஆவது
  • தஞ்சாவூர் என்பது தஞ்சை ஆவது
  • புதுச்சேரி என்பது புதுவை ஆவது
  • சோழன் நாடு என்பது சோணாடு (சோணாடு சோறுடைத்து என்னும் வழக்கைக் காண்க)
  • உறையூர் என்பது உறந்தை ஆவது.

வினைச்சொற்களிலும் மரூஉ உண்டு. எடுத்துக்காட்டாக:

  • வருகிறது என்பது வருகுது (நாமக்கல் கவிஞர் இரமலிங்கம் பிள்ளை அவர்களின் “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது”)

போலி மரூஉ: இவை அடிச்சொல்லில் அதிகம் வேறு படாமல், பெரும்பாலும் ஓரிரு எழுத்துக்களில் மாறு பட்டு வரும் இடங்கள். எடுத்துக்காட்டாக:

  • சாம்பல் என்பது சாம்பர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரூஉ&oldid=3447818" இலிருந்து மீள்விக்கப்பட்டது