பின்வருநிலையணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பின்வருநிலையணி என்பது செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ பொருளோ இவ்விரண்டுமோ பல முறை பின்னரும் வருவது.[1]

பின்வருநிலையணியின் வகைகள்[தொகு]

பின்வருநிலையணி மூன்று வகைப்படும்.அவை,

  • சொல் பின்வருநிலையணி
  • பொருள் பின்வருநிலையணி
  • சொற்பொருள் பின்வருநிலையணி

சொல் பின்வருநிலையணி[தொகு]

சொல் பின்வருநிலையணி என்பது ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல் பின்னர் பல இடத்தும் வந்து வெவ்வேறு பொருளைத் தருவது சொல் பின்வரு நிலையணி ஆகும்

எ.கா:

இக்குறட்பாவில் 'உடைமை' என்ற சொல்லானது பெற்றிருத்தல், உடைய, பொருள் என வேறுபட்ட பொருளில் பல முறை வந்துள்ளதால் இது சொல் பின்வருநிலையணி ஆகும்.

பொருள் பின்வருநிலையணி[தொகு]

பொருள் பின்வருநிலையணி என்பது செய்யுளில் ஒரே பொருள் தரும் பல சொற்கள் வருவது.

எ.கா:

இப்பாடலில் மலருதல் என்னும் பொருள் தரக்கூடிய அவிழ்தல், அலர்தல், நெகிழிதல், விள்ளல், விரிதல் ஆகிய சொற்கள் பல முறை வந்துள்ளமையால் இது பொருள் பின்வருநிலையணி ஆகும்

சொற்பொருள் பின்வருநிலையணி[தொகு]

சொற்பொருள் பின்வருநிலையணி என்பது செய்யுளில் முன்னர் வந்த சொல் அதே பொருளில் பல முறை வருவது.

எ.கா:

அணிப் பொருத்தம்:
இக்குறட்பாவில் விளக்கு என்னும் சொல் ஒரே பொருளில் பல முறை வந்துள்ளதால் இது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.tamilvu.org/courses/degree/d031/d0314/html/d03142l1.htm
  2. திருக்குறள் (592)
  3. தண்டியலங்கார மேற்கோள் (பக். 88)
  4. திருக்குறள் : 299

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பின்வருநிலையணி&oldid=3497120" இலிருந்து மீள்விக்கப்பட்டது