நல்லாம்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நல்லாம்பட்டி
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
வட்டம் பெருந்துறை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

3,874 (2011)

1,076/km2 (2,787/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 3.6 சதுர கிலோமீட்டர்கள் (1.4 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/nallampatti

நல்லாம்பட்டி (ஆங்கிலம்:Nallampatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை வட்டடத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு கரும்பு , நெல், மஞ்சள் ஆகிய பயிர்கள் விளைகின்றன.

அமைவிடம்[தொகு]

நல்லாம்பட்டி பேரூராட்சிக்கு கிழக்கில் 26 கி.மீ. தொலைவில் ஈரோடு உள்ளது. இதன் மேற்கில் கோபிச்செட்டிப்பாளையம் 20 கி.மீ.; வடக்கில் பவானி 20 கி.மீ.; தெற்கில் பெருந்துறை 12 கி.மீ. தொலைவில் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

3.6 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 24 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பெருந்துறை (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1,152 வீடுகளும், 3,874 மக்கள்தொகையும் கொண்டது. [4]


ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. நல்லம்பட்டி பேரூராட்சியின் இணையதளம்
  4. Nallampatti Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்லாம்பட்டி&oldid=3286551" இலிருந்து மீள்விக்கப்பட்டது