மாண்புயர் (பாடல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாண்புயர் கீதம் அல்லது மாண்புயர் பாடல் என்பது மாண்புயர் இவ்வருட் சாதனத்தை எனத்துவங்கும் பாடுவாய் என் நாவே என்னும் பாடலின் கடைசி இரு பத்திகளாகும். இது தாமஸ் அக்குவைனசால் நடுக் காலத்தில் இலத்தீனில் எழுதப்பட்ட பாடலாகும். கத்தோலிக்க திருச்சபையில் நற்கருணை ஆசீரின் முன் இது படப்படுவது வழக்கம். இது பாடலாகப்பாட இயலாத இடத்தில் இறைவேண்டலாக செபிக்கப்பட அனுமத்தி உண்டு.[1]

பாடல்[தொகு]

நற்கருணை ஆசீரின் முன் இப்பாடல் பாடப்படுகின்றது
இலத்தீன் வடிவம் தமிழ் வடிவம்
Tantum ergo Sacramentum
Veneremur cernui:
Et antiquum documentum
Novo cedat ritui:
Praestet fides supplementum
Sensuum defectui.
Genitori, Genitoque
Laus et jubilatio,
Salus, honor, virtus quoque
Sit et benedictio:
Procedenti ab utroque
Compar sit laudatio.
Amen.

V. Panem de caelis[2] praestitisti eis (in Paschaltide, 'Alleluia' is added).
R. Omne delectamentum in se habentem[3] (in Paschaltide, 'Alleluia' is added).

Oremus: Deus, qui nobis sub sacramento mirabili, passionis tuae memoriam reliquisti: tribue, quaesumus, ita nos corporis et sanguinis tui sacra mysteria venerari, ut redemptionis tuae fructum in nobis iugiter sentiamus. Qui vivis et regnas in saecula saeculorum.

R. Amen.

மாண்புயர் இவ்வருட் சாதனத்தை
தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம்
பழைய நியம முறைகள் அனைத்தும்
இனி மறைந்து முடிவு பெறுக
புதிய நியம முறைகள் வருக
புலன்களாலே மனிதன் இதனை
அறிய இயலாக் குறைகள் நீக்க
விசுவாசத்தின் உதவி பெறுக
பிதா அவர்க்கும் சுதன் இவர்க்கும்
புகழ்ச்சியோடு வெற்றியார்க்கும்
மீட்பின் பெருமை மகிமையோடு
வலிமை வாழ்த்து யாவும் ஆக
இருவரிடமாய் வருகின்றவராம்
புனித ஆவியானவர்க்கும்
அளவில்லாத சம புகழ்ச்சி
என்றுமே உண்டாகுக -ஆமென்.

குரு: வானின்று அவர்களுக்கு அப்பம் அளித்தீரே! (பாஸ்கா காலத்தில் அல்லேலூயா சேர்க்கப்படும்)
அனைவரும்: இனிமை யாவும் தன்னகத்தே கொண்ட அப்பமிதுவே. (பாஸ்கா காலத்தில் அல்லேலூயா சேர்க்கப்படும்)

ஜெபிப்போமாக: இறைவா, இந்த வியப்புக்குறிய திருவருட்சாதனத்திலே, உம்முடைய திருப்பாடுகளின் நினைவை எங்களுக்கு விட்டுச்சென்றீர். உமது திருவுடல், திருஇரத்தம் இவற்றின் மறைபொருளை வணங்கும் நாங்கள், உம்முடைய மீட்பின் பலனை இடைவிடாமல் அனுபவிக்க அருள் புரியும். தந்தையாகிய இறைவனோடு தூய ஆவியின் ஒன்றிப்பில் என்றென்றும் வாழ்ந்து ஆட்சிசெய்யும் உம்மை மன்றாடுகிறோம்.

அனைவரும்: ஆமென்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tantum Ergo". Catholic Encyclopedia.. This citation refers only to the practice of the Catholic Church prior to the liturgical changes of Vatican II.
  2. The word "caelis", not "caelo", is used in Finnegan, Sean. The Book of Catholic Prayer. 2000: Loyola Press. p. 521. The book prints the entire text of the prayer.
  3. [Wis 16:20]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாண்புயர்_(பாடல்)&oldid=2426550" இலிருந்து மீள்விக்கப்பட்டது