தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தீண்டாமை ஒழிப்பு முன்னணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி
தலைவர்
ப.சம்பத்
பொதுச் செயலாளர்
க.சாமுவேல்ராஜ்
பொருளாளர்
செந்தில் குமார்
வலைத்தளம்http://tnuef.org

தமிழ்நாடு‍ தீ்ண்டாமை ஒழிப்பு முன்னணி , 2007 ஆம் ஆண்டு‍ உருவாக்கப்பட்ட இயக்கமாகும் . சமூகத்திலுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்களுக்கு‍ எதிராகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து‍ போராடிக் கொண்டிருக்கும் ஒரு‍ இயக்கமாகும்.

மாநாடுகள் மற்றும் தலைமை[தொகு]

இம்முன்னணியின் முதல் மாநில மாநாடு 2010 ல் புதுக்கோட்டையில் நடைபெற்றது. தலைவராக பி.சம்பத், பொதுச் செயலாளராக கே.சாமுவேல் ராஜ், பொருளாளராக ஆர். ஜெயராமன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2015 மே 16 முதல் 18 வரை இரண்டாவது மாநில மாநாடு விருதுநகரில் நடைபெற்றது.

இயக்கங்கள்[தொகு]

தீண்டாமைச் சுவர் தகர்ப்பு[தொகு]

உத்தப்புரம்[தொகு]

உத்தப்புரம் தீண்டாமைச் சுவரை அகற்றக் கோரி பல கட்டப் போராட்டங்களை நடத்தி, தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்டது.[1]

உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் தகர்ப்பிற்கு பின்னர் முன்னணியின் முயற்சியால் வீழ்ந்த சுவர்கள் [சான்று தேவை]-

  • கோயம்பத்தூர் நாகராஜபுரம்
  • கோயம்பத்தூர் பெரியார்நகர்
  • திருச்சி எடமலைப்பட்டி புதூர்
  • சேலம் காந்திமகான் நகர்

ஈச்சங்கோட்டை[தொகு]

ஈச்சங்கோட்டை கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் சவரம் செய்யும் கடைகளில் முடி‍ திருத்தம் செய்ய அனுமதிக்கப்படாததை எதிர்த்த இயக்கம் செப்டம்பர் 30 அன்று‍ நடைபெற்றது. போராட்டத்தின் விளைவாக அம்மக்கள் முடிதிருத்த அக்கடைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.[2]

ஆலய நுழைவுப் போராட்டங்கள்[தொகு]

பந்தப்புளி, உத்தப்புரம், செட்டிபுலம், காங்கியனூர் ,காளப்பட்டி முதலிய இடங்களில் ஆலய நுழைவுப் போராட்டங்கள் நடைபெயற்றுள்ளன.[சான்று தேவை]

தெம்மாவூர் பேருந்து நிழற்குடை இருக்கை[தொகு]

தலித்துகள் இருக்கையில் அமரக்கூடாது என்ற சாதி ஆதிக்க வெறியில் இடிக்கப்பட்ட பேருந்து நிறுத்த நிழற்குடை இருக்கைகள் மீண்டும் நிறுவப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]