நாட்டுச்சாலை

ஆள்கூறுகள்: 10°27′00″N 79°21′00″E / 10.4500114°N 79.3500479°E / 10.4500114; 79.3500479
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாட்டுச்சாலை
—  கிராமம்  —
நாட்டுச்சாலை
இருப்பிடம்: நாட்டுச்சாலை

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°27′00″N 79°21′00″E / 10.4500114°N 79.3500479°E / 10.4500114; 79.3500479
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 3,454 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

நாட்டுச்சாலை என்பது தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்திலுள்ள[3] [4]ஒரு கிராமம்.

இக்கிராமத்தின் முன்னோர்கள் அந்நாளில் அதிக நாடகங்களை இயற்றி அவற்றை மேடைகளில் நடிப்பார்களாம். இதனால் இக்கிராமத்தின் பெயர் "நாடகச்சாலை" என்றிருந்ததாகவும், இப்பெயர் காலப்போக்கில் மருவி "நாட்டுச்சாலை" எனப் பெயர் உருவாகியது என்று இக்கிராம முன்னோர்களின் கருத்து. முசுகுந்த அரசன் என்பவன் இப்பகுதியை ஆண்டு வந்ததாகவும் அதனால் இப்பகுதியை முசுகுந்த நாடு என்றும் அழைப்பதும் உண்டு. இக்கிராம மக்கள் உழவுத்தொழிலையே முக்கிய தொழிலாகாக் கொண்டவர்கள்.

இங்குள்ள கோயில்கள்[தொகு]

  • பெரமநாத அய்யனார் கோயில்
  • முத்துமாரியம்மன் கோயில்
  • சிவன் கோயில்
  • அம்மனியாயி கோவில்
  • இடும்பன் கோவில்
  • பிச்சயாயி கோவில்
  • சுந்தரி அம்மன் கோவில்
  • முனியன் கோவில்
  • கருப்பணசுவாமி கோவில்
  • வீரனார் கோவில்

இங்குள்ள பள்ளிகள்[தொகு]

  • ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
  • அரசினர் மேல்நிலைப்பள்ளி

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-08-21. பார்க்கப்பட்ட நாள் 2013-01-11.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-01-11.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாட்டுச்சாலை&oldid=3560430" இலிருந்து மீள்விக்கப்பட்டது