சி. பாலசுப்பிரமணியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி. பாலசுப்பிரமணியன்
பிறப்பு(1935-05-03)3 மே 1935
செஞ்சி, தமிழ்நாடு
இறப்புசெப்டம்பர் 10, 1998(1998-09-10) (அகவை 63)
பணிதமிழ்ப் பேராசிரியர்
பணியகம்சென்னைப் பல்கலைக்கழகம்,
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுஎழுத்தாளர்; சொற்பொழிவாளர்.

சி. பாலசுப்பிரமணியன் (மே 3, 1935 - செப்டம்பர் 10, 1998)[1] தமிழ்ப் பேராசிரியர்; எழுத்தாளர்; சொற்பொழிவாளர். தமிழக ஆளுநராக இருந்த கே. கே. ஷாவிற்குத் தமிழ் கற்பித்தவர்.

பிறப்பு[தொகு]

சி.பாலசுப்பிரமணியன் செஞ்சி நகரில் 1935 மே 3ஆம் நாள்[2] மளிகைப்பொருள் வணிகர் பொ. சின்னசாமி முதலியார் - பட்டம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.[3] [4] இவர் செங்குந்தர் கைக்கோளர் குலத்தைச் சேர்ந்தவர்.[5]

கல்வி[தொகு]

பள்ளிக்கல்வி[தொகு]

சி.பாலசுப்பிரமணியன், திருவண்ணாமலை விக்டோரியா தொடக்கப்பள்ளியில் 1941-1942ஆம் ஆண்டில் முதலாம் வகுப்புப் பயின்றார். பின்னர் கல்வியாண்டு 1942-43 தொடங்கி 1947-48 முடிய கண்டாச்சிபுரம் உயர்தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பயின்றார். ஒன்பதாம் வகுப்பு முதல் பள்ளியிறுதி வகுப்பு வரை கல்வியாண்டு 1948-49 தொடங்கி 1950-51வரை திருவண்ணாமலை உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். [1][2]

கல்லூரிக்கல்வி[தொகு]

சென்னை அரசினர் கலைக்கல்லூரியில் 1951-1953ஆம் கல்வியாண்டுகளில் இடைநிலைக்கல்வி (Intermediate) பெற்றார். தொடர்ந்து 1953-1957ஆம் கல்வியாண்டுகளில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்று தமிழிலக்கியத்தில் கலை இளவர் (சிறப்பு) பட்டம் பெற்றார். 1958ஆம் ஆண்டில் அப்பட்டம் கலைமுதுவர் பட்டமாக உயர்த்தப்பட்டது. பச்சையப்பன் கல்லூரியில் மு.வ., அ.ச.ஞா., க.அன்பழகன். அ.மு.பரமசிவானந்தம், இரா.சீனிவாசன், வடிவேலு நாயக்கர், சுப்பிரமணிய ஆச்சாரியார், இரா. நடேச நாயக்கர், ஏ.ஆர். முத்தையன், த.கு.முருகேசன், அ.க. பார்த்தசாரதி ஆகியோரிடமும் கூட்டுவகுப்பில் மாநிலக்கல்லூரியில் தெ.பொ.மீ., மொ. அ. துரை அரங்கனார் ஆகியோரிடமும் பயின்றார்.[1]

பல்கலைக்கழகக்கல்வி[தொகு]

குறுந்தொகை - திறனாய்வு (A Critical Study of Kuruntokai) என்னும் தலைப்பில் ஆய்வு செய்து, 1963 ஆம் ஆண்டில், ஆய்வு நிறைஞர் (எம்.லிட்.) பட்டமும் சேரநாட்டு செந்தமிழ் இலக்கியங்கள் - ஓர் ஆய்வு (A Study of the literature of the Cera Country) என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து, 1970 ஆம் ஆண்டில் முனைவர் (பி. எச்டி) பட்டமும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.[1]

பணி[தொகு]

இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்த்துறையில் பயிற்றுநராக 1957ஆம் ஆண்டில் தனது பணியைத் தொடங்கி, விரிவுரையாளராக உயர்ந்தார். பின்னர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக நுழைந்து, பேருரையாளராக, பேராசிரியராக உயர்ந்தார். 1976 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை தமிழ்த் துறையின் தலைவராகப் பணியாற்றினார். 1980 ஆம் ஆண்டு முதல் [6] 1989ஆம் ஆண்டு வரை தமிழ்மொழித் துறைத் தலைவராகப் பணியாற்றினார்.

துணைவேந்தர்[தொகு]

1989 திசம்பர் 4ஆம் நாள் முதல் 1992 திசம்பர் 3ஆம் நாள் வரை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார்.

எழுதிய நூல்கள்[தொகு]

வ.எண் வெளியான ஆண்டு நூலின் பெயர் வகை குறிப்புகள்
01 1991 அலை தந்த ஆறுதல் சிறுகதைகளும் நாடகங்களும்
02 1991 அறநெறி வானொலிச் சொற்பொழிவு
03 1986 அறவோர் மு.வ. சொற்பொழிவு
04 1994 ஆண்டாள் சொற்பொழிவு
05 1972 இலக்கிய அணிகள் கட்டுரைகள் தமிழக அரசின் பரிசு பெற்றது
06 1992 இலக்கிய ஏந்தல்கள் கட்டுரைகள்
07 1980 இலக்கியக் காட்சிகள் கட்டுரைகள்
08 1965 உருவும் திருவும் கட்டுரைகள்
09 1966 கட்டுரை வளம் கட்டுரைகள்
10 1985 கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் கட்டுரைகள்
11 1966 காரும் தேரும் கட்டுரைகள்
12 1994 குறுந்தொகை திறனாய்வு இலக்கியத்திறனாய்வு
13 1989 சங்க இலக்கியம் - சில பார்வைகள் இலக்கியத் திறனாய்வு
14 1983 சங்க கால மகளிர் கட்டுரைகள்
15 1981 சமயந்தோறும் நின்ற தையலாள் கட்டுரைகள்
16 1980 சான்றோர் தமிழ் கட்டுரைகள்
17 1985 சேர நாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள் ராசா சர். அண்ணமலைச் செட்டியார் பரிசு பெற்றது.
18 1959 தமிழ் இலக்கிய வரலாறு 1 இலக்கிய வரலாறு
19 1995 திருப்பாவை விளக்கம் வானொலிச் சொற்பொழிவு
20 1987 திருவெம்பாவை விளக்கம் வானொலிச் சொற்பொழிவு
21 1995 தொல்காப்பியக் கட்டுரைகள் இலக்கணத் திறனாய்வு
22 1980 நல்லோர் நல்லுரை கட்டுரைகள்
23 1980 நெஞ்சின் நினைவுகள் பழந்தமிழர் வானியல்
24 1994 பாட்டும் தொகையும் - ஓர் அறிமுகம் கட்டுரைகள்
25 1990 பாரதியும் பாரதிதாசனும் கட்டுரைகள்
26 1990 பாவைப் பாட்டு வானொலிச் சொற்பொழிவு
27 1986 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் சொற்பொழிவு
28 1976 பெருந்தகை மு.வ. வாழ்க்கை வரலாறு
29 1989 மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் கட்டுரைகள்
30 1980 மலர் காட்டும் வாழ்க்கை கட்டுரைகள்
31 1972 முருகன் காட்சி கட்டுரைகள்
32 1994 மு.வ.வின் சிந்தனை வளம் சொற்பொழிவு டாக்டர் மு. வரதராசனார் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு1994, சென்னைப் பல்கலைக் கழகம்
33 1966 வாழையடி வாழை கட்டுரைகள்
34 1990 வாழ்வியல் நெறிகள் கட்டுரைகள்
35 1981 Papers in Tamil Literature
36 1976 The status of women in Tamilnadu during the Sangam Age Literary Criticism Diwan Bahadur K. Krishnaswami Rao endowment lectures delivered on 1971-72 at University of Madras [7]
37 1989 A Critical Study of Kuruntokai Literary Criticism M.Lit. Dissertation
38 1976 A Study of the literature of the Cera Country Literary Criticism Ph.D. Thesis

பதிப்பித்த நூல்[தொகு]

பெற்ற விருதுகள்[தொகு]

  • புலவரேறு - குன்றக்குடி ஆதினம் வழங்கியது
  • செஞ்சொற் புலவர் - தமிழ்நாட்டு நல்வழி நிலையம்
  • சங்கநூற் செல்வர் - தொண்டை மண்டல ஆதினம்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 டாக்டர் சி.பா.சேரன், சீர்மிகு சி.பா, முதற்பதிப்பு: 2000 மே, இனியகாவியா பதிப்பகம், சென்னை
  2. 2.0 2.1 சி. பாலசுப்பிரமணியன், அறநெறி, நறுமலர் பதிப்பகம் சென்னை, மு.பதி. 1991, நூலட்டை
  3. டாக்டர் சி.பா. சேரன். சீர்மிகு சி.பா. https://books.google.co.in/books?id=tWtkAAAAMAAJ&dq=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&focus=searchwithinvolume&q=%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D. 
  4. பாலசுப்பிரமணியன் சி, பெருந்தகை மு.வ.; கழக வெளியீடு, சென்னை; மு.ப. ஏப் 1976; பக் உ
  5. டாக்டர் சி.பா. சேரன். சீர்மிகு சி.பா. https://books.google.co.in/books?id=tWtkAAAAMAAJ&dq=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&focus=searchwithinvolume&q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D. 
  6. About the Department of Tamil Language, Madras University
  7. https://trove.nla.gov.au/work/11513917?q&versionId=13522656

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._பாலசுப்பிரமணியன்&oldid=3284913" இலிருந்து மீள்விக்கப்பட்டது