அல்பிரட் துரையப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அல்பிரட் துரையப்பா (Alfred Duraiappah, இறப்பு: 27 சூலை 1975) என்பவர் இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் யாழ்ப்பாண நகர முதல்வரும் ஆவார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அரசியலில்[தொகு]

அல்பிரட் துரையப்பா இலங்கை நாடாளுமன்றத்திற்காக மார்ச் 1960 இல் நடைபெற்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலத்தை எதிர்த்து சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்[1]. பின்னர் அதே ஆண்டு சூலை மாதத்தில் நடந்த மறு தேர்தலிலும் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்[2]. 1965, 1970 தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றார். பின்னர் இவர் இலங்கை சுதந்திரக் கட்சியில் இணைந்தார். யாழ்ப்பாண மாநகர சபை முதல்வராக நியமிக்கப்பட்டார்.

படுகொலை[தொகு]

அல்பிரட் துரையப்பா 1975 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் நாள் யாழ்ப்பாணம் சுழிபுரம் பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய முன்றலில் வைத்து விடுதலைப் புலிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுவே இலங்கைத் தமிழர் வரலாற்றில் இடம்பெற்ற முதலாவது அரசியல் கொலையாகும்[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-07-12. பார்க்கப்பட்ட நாள் 2011-12-30.
  2. "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2011-12-30.
  3. Tamil Tiger chief in SEA? பரணிடப்பட்டது 2009-03-02 at the வந்தவழி இயந்திரம் New Straits Times - January 21, 2009

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்பிரட்_துரையப்பா&oldid=3541814" இலிருந்து மீள்விக்கப்பட்டது