பூதலூர்

ஆள்கூறுகள்: 10°46′59″N 78°58′51″E / 10.7829975°N 78.980955°E / 10.7829975; 78.980955
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூதலூர்
—  நகரம்  —
பூதலூர்
இருப்பிடம்: பூதலூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°46′59″N 78°58′51″E / 10.7829975°N 78.980955°E / 10.7829975; 78.980955
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


பூதலூர் (Budalur) தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூதலூர் வட்டம் மற்றும் பூதலூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும்[4]ஊராட்சியும் ஆகும்.[5] பூதலூர் தஞ்சாவூருக்கு மேற்கே 17 கிமீ தொலைவில் உள்ளது. இவ்வூருக்கு கல்லணை கால்வாயும் வெண்ணாறும் கரைகளாக உள்ளன.

இங்குள்ள தொடருந்து நிலையம் திருச்சிராப்பள்ளி தஞ்சாவூர் இருப்புப்பாதை வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது சோழ மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதியாகும். சூன் 2020-இல் பூதலூரில் 9, 10-ஆம் நூற்றாண்டு சமணர் மற்றும் விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. பூதலூர் வட்டத்தின் 22-வது கிராமம்
  5. பூதலூர் ஊராட்சி ஒன்றியத்தின் வரிசை எண் 52
  6. பூதலூரில் 9, 10ஆம் நூற்றாண்டு சிற்பங்கள் கண்டெடுப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூதலூர்&oldid=2986682" இலிருந்து மீள்விக்கப்பட்டது