பவானி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பவானி வட்டம் (Bhavani taluk) தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக பவானி நகரம் உள்ளது. இந்த வட்டத்தில் கீழ்குறிச்சி, பவானி, கவுந்தப்பாடி என மூன்று உள்வட்டங்களும் 38 வருவாய் கிராமங்களும் உள்ளன[2].

வட்டம் பிரிப்பு[தொகு]

2012 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதியன்று, பவானி வட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு அந்தியூர் உள்வட்டம், அத்தாணி உள்வட்டம், அம்மாபேட்டை உள்வட்டம், பர்கூர் உள்வட்டம் ஆகியவற்றைச் சேர்ந்த கிராமங்களை இணைத்து அந்தியூர் வட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது.[3][4]

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 459,517 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 233,314 ஆண்களும், 226,203 பெண்களும் உள்ளனர். 132,152 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் கிராமப்புறங்களில் 68.4% வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 66.4% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 970 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 40579 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 938 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 72,962 மற்றும் 5,573 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 96.76%, இசுலாமியர்கள் 1.37%, கிறித்தவர்கள 1.73% மற்றும் பிறர் 0.13% ஆகவுள்ளனர்.[5]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பவானி_வட்டம்&oldid=3690020" இலிருந்து மீள்விக்கப்பட்டது