தமயந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமயந்தியும் தூது வந்த அன்னமும்.
ரவி வர்மாவின் ஓவியம்.

தமயந்தி இந்து தொன்மக் கதைகளில் வரும் ஒரு பெண். இவர் விதர்ப நாட்டின் இளவரசி. இவர் நிசாத நாட்டின் இளவரசனான நளனை மணந்தார். இவர்களது கதை மகாபாரதத்தின் ஒரு கிளைக் கதையாகும். [1]நள தமயந்திக்கு இரு குழந்தைகள் இருந்தனர். இக்கதையில் தமயந்தி ஒரு பேரழகியாக கூறப்பட்டுள்ளார். நள தமயந்தியின் கதையைக் கருவாகக் கொண்டு தமிழில் புகழேந்திப் புலவரால் இயற்றப்பட்ட நூல் நளவெண்பா.

மேற்கோள்கள்[தொகு]

  1. காதல் தூது சென்ற அன்னம்! - வனபர்வம் பகுதி 53 – 78 முடிய
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமயந்தி&oldid=3802393" இலிருந்து மீள்விக்கப்பட்டது